Tuesday, October 14, 2008

குண்டுவெடிப்பு வழக்கு:புத்த துறவிகளுக்கு ஆயுள் தண்டனை

 
 
lankasri.comதிபெத் குண்டுவெடிப்பு வழக்கில் எட்டு புத்த துறவிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.இவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.ஒலிம்பிக் தீப ஓட்டத்தின்போது திபெத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த மார்ச் 23-ம் தேதி ஜியான்பி நகர அரசு அலுவலகத்தில் குண்டு வெடித்தது.இதில் பொருள் இழப்போ,உயிரிழப்போ ஏற்படவில்லை.

இது தொடர்பான வழக்கில் எட்டு புத்த துறவிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதியே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து தற்போதுதான் செய்தி வெளியாகி உள்ளது.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223999987&archive=&start_from=&ucat=1&

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails