Tuesday, October 21, 2008

ஈராக்கில் போலீஸ் முகாம் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வந்த மனித வெடிகுண்டு பெண் சுட்டுக் கொலை

lankasri.comதற்கொலை படை தாக்குதலில் இப்போது இளம் பெண்ணும் சிறுவர்களும் கூட ஈடுபடுத்தப்படுகிறார்கள்.சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரிக் அருகே போலீசார் சிறப்பு முகாம் மற்றும் சோதனை சாவடி அமைத்து இருந்தனர்.

இந்த சோதனை சாவடி அருகே ஒரு இளம் பெண் வேகமாக வந்தார். போலீசார் சற்று தூரத்திலேயே நிற்கும் படி அந்த பெண்ணை எச்சரித்தனர்.ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அந்த 20வயது பெண் முகாம் அருகே வந்தார்.

இதை அடுத்து போலீசார் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.மனித வெடிகுண்டாக வந்த அந்த பெண் தனது இடுப்பில் பயங்கர வெடி குண்டை மறைத்து வைத்து கட்டியிருந்தார். முகத்தையும் முக்காடு போட்டு மூடியிருந்தார்.

போலீசார் சுட்டதை தொடர்ந்து அந்த பெண் மறைத்து வைத்திருந்த வெடி குண்டு வெடித்தது.இதில் அந்த பெண் உடல் சிதறி பலியானார்.அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு வரும் இதில் காயம் அடைந்தார்.

சற்று தூரத்திலேயே அந்த பெண் மனித வெடிகுண்டை போலீசார் சுட்டுக் கொன்றதால் போலீஸ் முகாமும் சோதனை சாவடியும் தப்பியது. ஏராளமான போலீசார் உயிர் தப்பினார்கள்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224517847&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails