Monday, November 28, 2011

6 மாத சிறைவாசம் முடிந்தது: கனிமொழி விடுதலை!!!?


6 மாத சிறைவாசம் முடிந்தது: எதிர்பார்த்து - ஏமாந்த கனிமொழிக்கு நிம்மதி


புதுடில்லி : பல முறை கிடைக்குமா, ஜாமின் கனியுமா என்ற பலத்த எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிலவி வந்த தருணத்தில் 4 முறைகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடியாகி வந்த போது இன்று அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் லைசென்ஸ் வழங்கி மத்திய தணிக்கை துறையில் ஒரு அதிகாரி தரப்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும், இல்லை 2 ஆயிரத்து 645 கோடிதான் என்று மற்றொரு அதிகாரியும் சொல்லி வந்தாலும் இன்னும் நஷ்டம் எவ்வளவு என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலை. இருப்பினும் சி.பி.ஐ., ஆயிரம் கோடி ஆதாயம் பெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்தது. இது தொடர்பான சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பின்னர் இதன் கண்காணிப்பில் விசாரணை நடந்தது. 


ராஜா மற்றும் இவரது உதவியாளர் , தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்பேரட் நிறுவன அதிபர்கள் , கனிமொழி எம்.பி., உள்பட 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் , செக்சன் 409 ( நம்பிக்கை மோசடி ) , 120 பி ( கிரிமினல் சதி ) ,420 ( ஏமாற்றுதல் ) , 468, 471 ( பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் ) , 12, 13(2) 13 ( 1 பி) ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.,சைனி ஏற்றுக்கொண்டதுன், இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தாம் உணர்கிறேன் என்றும் கூறியிருந்தார்.


யாருக்கும் ஜாமின் கிடைக்காமல் 7 மாதம் கடந்தது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமின் கிடைக்காமல் இருந்து வந்தது. குறிப்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கூட கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூட ஜாமின் மறுப்பது சட்ட விரோதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூட ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது அடிப்படை சட்ட நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சஞ்சய் சந்திரா ( யுனிடெக் வயர்லெஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் ) வினோத் கோயங்கா ( ஸ்வான் டெலிகாம் இயக்குநர் ) , ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகள் கவுதம் தோஷி , ஹரி நாயர், மற்றும் சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமினை கடந்த ( புதன்கிழமை 23 ம் தேதி ) வழங்கியது. இந்த உத்தரவு மூலம் புதிய வழி பிறந்திருக்கிறது என்று ராஜாவின் வக்கீல் கூறியிருந்தார். 


192 நாட்கள் சிறையில் இருந்த கனிமொழி :சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து கனிமொழி உள்பட 6 பேர் ஜாமின் மனுவை விரைவில் விசாரிக்க வக்கீல்கள் டில்லி ஐகோர்ட்டில் வலியுறுத்தினர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை விசாரணையில் இருதரப்பு வாதங்களும் எடுத்துரைக்கப்பட்டது. ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதீபதிகள் வழக்கை இன்று ஒத்தி வைத்தனர். இன்றைய விசாரணை முடிவில் மனுவை விசாரித்த நீதிபதிகள் கனிமொழிக்கு உள்பட கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குசேகான் புரூட்ஸ் மற்றும் வெஜிடபுள் நிறுவனத்தை சேர்ந்த ஆசீப்பால்வா, ராஜீவ் அகர்வால், ஆகிய 5 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். முன்னாள் தொலை தொடர்பு செயலர் சித்தார்த்பெகுராவுக்கு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கனிமொழியின் 6 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்தது. கனிமொழி கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்டார். கீழ் கோர்ட்டில் 2 முறையும், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தலா ஒரு முறையும் 4 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியிருக்கிறது. ஜாமின் கிடைக்குமா என பலமுறை எதிர்பார்த்து ஏமாந்த கனிக்கு இப்போது தான் ( 6 மாதத்திற்கும் மேல் சிறை - 192 நாட்கள் ) ஜாமின் கிடைத்திருக்கிறது.


நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மறுத்தது ஏன் ? : சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கலாகி கடந்த 2 முறை விசாரணைக்கு வந்தபோது : கனிமொழி, ஒரு பட்டதாரி அவர் ஒரு எம்.பி., , அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை அவரது குழந்தை பராமரிப்பு என பல காரணங்கள் கூறப்பட்டு வக்கீல்களின் வாதம் இருந்தது. ஆனால் நீதிபதி ஓ.பி.,, சைனி, எந்தவொரு வாதத்தையும் ஏற்க மறுத்து விட்டார். கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு பெண் என்பதற்காக இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் இவர் புரிந்துள்ள குற்றம் மற்ற குற்றவாளிகளின் குற்றத்திற்கு சமமானது தான். மேலும் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு காரணமாக இருந்திருக்கிறார் . பெரும் குற்றம் புரிந்த இவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது என்றார் நீதிபதி.


மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் கருணாநிதி: கனிமொழிக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஜாமின் குறித்து நிருபர்கள் அவரது வீட்டிற்கு சென்று பல கேள்விகளை கேட்டனர். இப்போது அவர் கூறுகையில்: மகிழ்ச்சி அளிக்கிறது. கனிமொழிக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படுமா என கேட்ட போது அது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். ராஜாவுக்கு ஜாமின் பெறுவது தொடர்பாக கட்சி எதுவும் முடிவு எடுக்குமா என்று கேட்டபோது அது அவரும், அவரது வக்கீலும் முடிவு எடுப்பர். கனிமொழிக்கு பலத்த வரவேற்பு இருக்குமா என்று கேட்ட போது வரவேற்பு இருக்கும். ஜாமின் கிடைத்திருப்பது வழக்கின் சாதகத்திற்கு முன்னுதாரணமாக இருக்குமா என்று கேட்டபோது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நீதிமன்றத்தையோ , வழக்கின் போக்கு குறித்தோ நான் விமர்சிப்பவன் அல்ல என்றார்.


source:dinamalar
--
http://thamilislam.tk

Wednesday, November 23, 2011

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?

Hindu Makkal Party warns Kushboo

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?

பொது விழாக்களில் நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் அவரது வீட்டுக்கு கோவணம் கட்டி  200பேர் வந்தால் அவர்களை வரவேற்பாரா என்று இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சினிமாவில் தான் நடிகைகள் படுகவர்ச்சியாக வருகிறார்கள் என்றால், பொது நிகழ்ச்சிககளிலும் படுகவர்ச்சியான உடையணிந்தும், குட்டை பாவாடை அணிந்து வருகின்றனர். சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நடிகை நமீதா அணிந்து வரும் கவர்ச்சியான உடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இருந்த நடிகை குஷ்பு, நமீதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் குட்டை பாவாடை அணிகிறார், கவர்ச்சியான உடையணிந்து வருகிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது அவருடைய தனிப்பட்ட விஷயம். சினிமாவில் உள்ளவர்கள் கூட இதை எதிர்க்கவில்லை. ஆனால் சில சுயநல சக்திகள் வெறும் புகழுக்காக இதை எதிர்க்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாச்சாரம், பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலமே தமிழகம் தான். அதனால் தான் கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல், 2 நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் நடிகைகள் அதுபோல் அணியட்டும், பொது விழாக்களில் அப்படி அணிய வேண்டாம் என்று தான் சொல்கிறோம். 

நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் 200பேர் கோவணம் கட்டி அவர் வீட்டு வாசல் முன் வந்து நின்றால், அவர்களை சந்திப்பாரா...? அல்லது பேசத்தான் செய்வாரா...? ஆகவே, இதுபோன்ற நடிகைகளுக்கு வக்காலத்து வாங்குவதை குஷ்பு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்

source:dinamalar

Friday, November 18, 2011

முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள்!!!



நூனி டார்விஷ் என்ற எகிப்திய முஸ்லீம் அரபு பெண்மணி, அல்குரானை ஒரு காட்டிமிராண்டித்தனமான வன்முறை புத்தகம் என்று சொல்கிறார் 





வாஃபா சுல்தான் என்ற சிரிய நாட்டை சேர்ந்த முஸ்லீம் அரபு பெண்மணி The trouble with Islam is deeply rooted in its teachings. Islam is not only a religion. Islam [is] also a political ideology that preaches violence and applies its agenda by force
என்று சொல்கிறார்



வங்காள தேசத்தை சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின் என்ற முஸ்லீம் பெண்மணி Koran, which tells women, "to stay on the house, do whatever the man or your husband tells you to do. One has to stand up against all this, one has to say that women will not go by religion any more." என்று சொல்கிறார் 


அயான் ஹிர்ஸி அலி என்ற சோமாலியாவை சேர்ந்த முஸ்லீம் பெண்மணி இஸ்லாம் என்பதே வன்முறையும் பயங்கரவாதமும்தான் என்று கூறுகிறார். Hirsi Ali characterizes Islam as "the new fascism": "Just like Nazism started with Hitler's vision, the Islamic vision is a caliphate — a society ruled by Sharia law — in which women who have sex before marriage are stoned to death, homosexuals are beaten, and apostates like me are killed. Sharia law is as inimical to liberal democracy as Nazism." In this interview, she also made it clear that in her opinion it is not "a fringe group of radical Muslims who've hijacked Islam and that the majority of Muslims are moderate. [...] Violence is inherent in Islam — it's a destructive, nihilistic cult of death. It legitimates murder."


இர்ஷத் மஞ்சி என்ற உகாண்டா முஸ்லீம் பெண்மணி எகிப்திய - குஜராத்தி பெற்றோருக்கு பிறந்தவர். இவர் trouble with islam என்ற புத்தகத்தில் இஸ்லாமில் உள்ள குறைகளை பட்டியல் போட்டிருக்கிறார்.



மீனா அஹதி என்ற ஈரானிய முஸ்லீம் பெண்மணி central council of exmuslims என்ற முன்னாள் முஸ்லிம்கள் பேரவையை நடத்தி வருகிறார் The rejection of minarets is actually a rejection of Islamism, Sharia and the requirement for wearing a hijab. The minaret is merely a symbol of a justifiable fear of political Islam. என்றும் சொல்கிறார்



மரியம் நமாஸி என்ற ஈரானிய முஸ்லீம் பெண்மணியும் ஷாரியாவுக்கும் இஸ்லாமுக்கும் குரானுக்கும் எதிராக போர்க்கொடி ஏந்தியிருக்கிறார்


source:pagadu
--
http://thamilislam.tk

Thursday, November 17, 2011

இனி எல்லாமே டேப்ளட் பிசி

லிஸப்டாப் கம்ப் யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதனால் லேப்டாப் இடத்தில் டேப்ளட் பிசிக்களை விரும்புகிறீர்கள் என்று பலரைக் கேட்டதில், கீழ்க்காணும் சிறப்பியல்பு களை அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்றனர்.

1. மின்சக்தி பயன்பாடு: இதனைப் பொறுத்தவரை, டேப்ளட் பிசியின் அருகில் கூட லேப்டாப் வர முடியாது. டேப்ளட் பிசியை ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒரு முழு நாள் கூட பயன்படுத்தலாம். லேப்டாப் அப்படி இல்லை. அதிக பட்சம் மூன்று மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது.
2. வைரஸ்: ஒரு டேப்ளட் பிசி எந்த வைரஸ் தாக்குதலையும் கொண்ட தில்லை. மால்வேர் எதுவும் அதனைப் பாதித்ததில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில், குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில், வைரஸ் மற்றும் பிற மால்வேர் நுழைவது எளிதாகிறது.
3. எடுத்துச் செல்ல எளிது: சட்டை அல்லது கோட் பாக்கெட், பாதுகாப்பாக சட்டைக்குள்ளாக என ஒரு டேப்ளட் பிசியினை வைத்துக் கொண்டு செல்ல லாம். எனவே ஏர்போர்ட், ஹோட்டல் விடுதி, டாக்ஸி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள் என எங்கும் எளிதாக டேப்ளட் பிசியைக் கொண்டு செல்ல முடியும். எடையும் குறைவு. மற்றவர் அறியாமல் ஓரிடத்தில், ஒரு டாக்சியில், மாடிப் படிகளின் கீழாக என எந்த ஒரு தனி இடத்தில் வைத்துப் பயன்படுத்த டேப்ளட் பிசிதான் சிறந்தது. ஏன், குளியலறையில் கூட வைத்து எளிதாக இயக்கலாம். 
4. விலை: டேப்ளட் பிசியின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அனைத்து மக்களும் வாங்கிப் பயன்படுத்த வேண்டுமாயின், இதன் விலை குறைவாக இருந்தால் தான் முடியும் என்பதனை டேப்ளட் பிசி யினைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவே, லேப்டாப்பின் விலையில் மூன்றில் ஒரு பங்கில், அல்லது நான்கில் ஒரு பங்கில் நல்ல டேப்ளட் பிசி ஒன்றை வாங்க முடியும். 
5. ஆன்லைன் நெட்வொர்க் தொடர்பு: கொஞ்சம் கூடுதலாகப் பணம் செலுத்தி, ஒரு டேப்ளட் பிசிக்கு 4ஜி அல்லது 3ஜி தொடர்பினைப் பெற முடியும். நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி இணைப்பு உள்ள இடம் எங்குள்ளது என்று தேடி அலைய வேண்டியதில்லை. கிளவ்ட் கம்ப்யூட்டிங் போன்ற பணிகளுக்கான நெட்வொர்க் வழங்குவதற்காக, மேல் நாடுகளில் பல நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் டேப்ளட் பிசிக்களில், குறிப்பிட்ட நெட்வொர்க் இணைப்பினை ஏற்படுத்தியே தருகின்றனர். அல்லது டேப்ளட் பிசிக்களுக்கான நெட்வொர்க் இணைப்பு கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
6. ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன்கள் ரெடி: டேப்ளட் பிசிக்களுக்கென பல்லாயிரக் கணக்கான அப்ளிகேஷன்கள் இப்போதே கிடைக்கின்றன. பெரும்பாலான பயனுள்ள அப்ளிகேஷன்கள் இலவச மாகவே தரப்படுகின்றன. மேலும் இவற்றை ஓர் இணைய இணைப்பிலேயே டேப்ளட் பிசியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பயன்படுத்தியபின் அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம்.
7. எளிமையான இன்டர்பேஸ்: டேப்ளட் பிசிக்களும், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களும் மிக எளிமையான இன்டர்பேஸ் கொண்டு இயங்குவதால், சிக்கல்கள் எதுவுமின்றி அவற்றை இயக்க முடிகிறது.
8.புளுடூத் இணைப்பு: ஹெட்போன், ஹெட்செட், கீ போர்ட் என டேப்ளட் பிசி தொடர்புக்கென எதனை எடுத்தாலும், அவை புளுடூத் பயன்பாட்டில் இயங்கு பவையாகக் கிடைக்கின்றன. இதனால், குழப்பமான இணைப்புகளுடன் நாம் போராட வேண்டியதில்லை. 
9. உடனடி இயக்கம்: எந்த நேரத்திலும் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேப்ளட் பிசியை, மீண்டும் இயக் கத்திற்குக் கொண்டு வரலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் போல, டேப்ளட் பிசி அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. எனவே, போகிற போக்கில் பல செயல்பாடுகளை ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்ள முடியும். 
10. சமுதாய இணைய தள இணைப்பு: வர்த்தகம் மற்றும் அலுவலக ரீதியான பணிகளுக்கு சமுதாய இணைய தள இணைப்பு தேவையில்லையே! எனச் சிலர் எண்ணலாம். அவை வர்த்தக நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு உதவுகின்றன என்பதனை, அவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிவார் கள். அதனால் தான் இன்றைய சூழலில் பல நிறுவனங்கள், சமுதாய தளங்களில் தங்களைப் பதிந்து கொண்டு வருகின்றன. இந்த வகையில், ஒரு டேப்ளட் பிசிதான் கூடுதல் பயனுள்ளதாக இருக்க முடியும்.
லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசி என எடுத்துக் கொண்டால், நிச்சயம் டேப்ளட் பிசிதான் பின்னாளில் நிலையாக இயங்கப் போகிறது என்பது உண்மை. ஆனால் அந்த நாள் விரைவிலா அல்லது சில ஆண்டுகள் கழித்தா என்பது மக்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். 

source:dinamalar

--
http://thamilislam.tk

Sunday, November 13, 2011

அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்கா கேட்டது மன்னிப்பு

புதுடில்லி:பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் அவமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில், கலாமின் கோட், ஷூ ஆகியவற்றை கழற்றும்படி கூறி, அமெரிக்க அதிகாரிகள், அத்துமீறி நடந்து கொண்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், இந்தியா வரும் அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் அதுபோல் நடக்க வேண்டியிருக்கும்' என, எச்சரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த 2009ல் அமெரிக்கா செல்வதற்காக டில்லி விமான நிலையத்துக்கு சென்றபோது, அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் அவரை அவமதித்தனர். இந்த சம்பவம், அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, மீண்டும் அதுபோன்ற ஒரு அவமதிப்பு சம்பவம், கலாமுக்கு நடந்துள்ளது.கடந்த செப்டம்பரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற அப்துல் கலாம், 29ம் தேதி, இந்தியாவுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார். நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதன்பின் அவர், டில்லி செல்லும் ஏர்-இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்தார்.


விமானம் புறப்படுவதற்கு முன்பாக, விமானத்திற்குள் வந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்,"உங்களை சோதனையிட வேண்டும். உங்களின் கோட், ஷூ ஆகியவற்றை கழற்றிக் கொடுங்கள். அதில் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என, சோதனையிட வேண்டும்' என்றனர்.


இதற்கு, அங்கு இருந்த ஏர்-இந்தியா அதிகாரிகளும், மற்றவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அவர், முன்னாள் ஜனாதிபதி. விமான நிலையங்களில் சோதனையிட, அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.


அமெரிக்க அதிகாரிகள், இதைப் பொருட்படுத்தவில்லை. கலாமும், இதை பெரிதுபடுத்தாமல், தன் கோட் மற்றும் ஷூக்களை கழற்றி, அவர்களிடம் கொடுத்தார்.அவற்றை சோதனையிட்டு விட்டு, சில நிமிடங்களுக்கு பின், கலாமிடம் திருப்பி அளித்தனர். ஆனாலும், இந்த சம்பவம் குறித்து, அப்துல் கலாம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஏர்-இந்தியா அதிகாரிகள் மூலமாக, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


பதிலடி கொடுப்போம்:இந்த சம்பவத்துக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி நிருபமா ராவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த பிரச்னையை உடனடியாக, அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி, நிருபமா ராவிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர்-இந்தியா அதிகாரிகளிடம், இந்த சம்பவம் தொடர்பாக விவரமான அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.


வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,"பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமதிக்கப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. விமான நிலையங்களில், சோதனையிடுவதில் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில், அவரின் பெயரும் உள்ளது. அதையும் மீறி, அவருக்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால், இந்தியாவுக்கு வரும், அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் இதுபோல் நடந்து கொள்ள வேண்டியிருக்கும்' என்றனர்.


மன்னிப்பு கேட்ட அமெரிக்கா:அப்துல் கலாம் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, அமெரிக்க அரசு, இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. அப்துல் கலாம் மற்றும் இந்திய அரசுக்கு, அமெரிக்க தூதரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்காக, வருந்துகிறோம். வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு சோதனை விதிமுறைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் உரிய முறையில் பின்பற்றாததன் காரணமாக, இவ்வாறு நடந்து விட்டது. எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாரதிய ஜனதா கண்டனம் : பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பை, பொறுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை. கலாம், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால், அவமதிப்புக்கு உள்ளாவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் உறுதி செய்ய, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உசேன் கூறினார்.



source:dinamalar

--
http://thamilislam.tk

Thursday, November 10, 2011

இந்த வார டவுண்லோட் ட்ரைவர் புரோகிராம் பேக் அப்


சில வேளைகளில் உங்கள் பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது விண்டோஸ் சிஸ்டத்தில் மாறா நிலையில் (by default) இல்லாத சில ட்ரைவர் புரோகிராம்களும் தேவையாயிருக்கும். நம்மிடம் ஒரு காலத்தில் தரப்பட்ட ட்ரைவர் சிடிக்கள் காணாமல் போயிருக்கும். அல்லது இடம் மாறி, தேடினாலும் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்திலிருந்து தான் அவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்த வேண்டும். அவற்றில் சில நமக்குப் பயன்படுத்தும் நிலையில் கிடைக்காது. சில இயங்காது. இந்தச் சூழ்நிலை நம்மில் பலருக்குப் பல வேளைகளில் ஏற்பட்டிருக்கும்.

இது போன்ற சிக்கல்களில் நமக்கு உதவிட Double Driver என்ற இலவச புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராம், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து ட்ரைவர்களையும் தேடிக் காட்டுகிறது. அத்துடன் அவற்றை பேக் அப் செய்து பின்னாளில் பயன்படுத்தத் தருகிறது. இது நிச்சயமாய் நமக்குப் பெரிய உதவியாய் தான் இருக்கும். இது எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம்.
1. முதலில் http://doubledriver.en.softonic. com/?gclid=CLycloHVjawCFU0a6wodbmCrng என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து Double Driver என்னும் இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் பதியவும். இதனை முதலில் திறக்கையில், காலியாக ஒரு விண்டோ காட்டப்படும்.
2. இந்த விண்டோவில் மெனு பார் கீழாகக் காணப்படும் "Scan" என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். உடனே உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும். அப்போது, காலியாகக் காட்டப்பட்ட விண்டோவில்,கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ட்ரைவர் புரோகிராம்கள் காட்டப்படும். உங்களிடம் விண்டோஸ் இன்ஸ்டலேஷன் சிடி இருந்தால், அதில் உள்ள மைக்ரோசாப்ட் தந்துள்ள ட்ரைவர் புரோகிராம்கள் தவிர்த்து மற்ற புரோகிராம்களின் ட்ரைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.
3. அனைத்து ட்ரைவர் புரோகிராம்களையும் பேக் அப் எடுக்க, backup டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். உடன் அனைத்து ட்ரைவர் புரோகிராம்களும் ஸிப் செய்யப்பட்டு ஒரு பைலாகத் தயார் செய்யப்படும். 
இதனை சிஸ்டம் ட்ரைவ் இல்லாத இன்னொரு ட்ரைவ் அல்லது ஸ்டோரேஜ் மீடியாவில், சேவ் செய்து வைத்திடலாம். பின்னர், எப்போது தேவைப் பட்டாலும், இந்த பைலை விரித்து, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம். 

source:dinamalar

--
http://thamilislam.tk

Wednesday, November 2, 2011

நிஜமானது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி:

  

பிரித்தானியாவில் நடைபெற்ற "யாருக்கு கோடீஸ்வரராக விருப்பம்" என்ற நிகழ்ச்சிபோல இந்தியாவிலும் நடைபெற்று வருவது வழக்கம். இந் நிகழ்வில் சேரியில் வாழும் மிகவும் ஏழ்மையான நபர் ஒருவர் சுமார் 1 மில்லியன் டாலரை பரிசாகப் பெற்றுள்ளார். இது போன்ற கற்பனைத் திரைப்படம் ஒன்று "த சிலம் டோக் மில்லியனர்" என்ற பெயரில் வெளியாகி 6 அஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றது. அப்படத்துக்கு இசை அமைத்ததற்காக இசைப் புயல் ஏ.ஆர் ரகுமானுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்தது. தற்போது அப்படம் நிஜமானால் என்ன நடக்குமோ அதுபோல நடந்துள்ளது. சுஷில் குமார் எனும் பீஹாரை சேர்ந்த ஏழை அரசு பணியாளர் ஒருவர் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதி உச்சப்பரிசை தட்டிச்சென்றுள்ளார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் சேரி வாழ்க்கை வாழ்ந்து வந்த சுஷில் குமாருக்கு அவரது வீட்டில் சொந்தமாக தொலைக்காட்சி பெட்டி கூட இல்லையாம். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்ததை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒளிபரப்பாளர் அமிதாப் பச்சன், சுஷில் குமாரை வெற்றியாளராக அறிவித்ததுடன், அவரையும், அவரது மனைவியையும் அழைத்து, ரூ 50 மில்லியன் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்) பரிசுத்தொகையை நேரடியாக கையளித்து அவர்களை பரவசப்படுத்தினார். நீங்கள் புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களது அர்ப்பணிப்பும், ஆர்வமும், இதுவரை உங்களை இந்நிகழ்ச்சியில் கொண்டு வந்துள்ளது என அமிதாப் பச்சன் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் குமார் பங்குபெற்ற முன்னர், அவரது மாத சம்பளம் டாலர் மதிப்பில் 120 அமெரிக்க டாலர்களே! பீஹார் மாநிலத்தின் மொதிஹாரியில் சின்னதாக ஒரு தனியார் வகுப்பு நடத்தி வருவதால் கொஞ்சம் மேலதிக வருமானம் வந்துள்ளது. மற்றும் படி அரசு உத்தியோகம் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கு பற்றுவதைக்கூட அவரது குடும்பத்தினர் பக்கத்துவீட்டு டீவியில் தான் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்களில் அவர் சரியான பதில்களை டிக் செய்ய, செய்ய அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுமாறு நெருங்கியவர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறார். 

இந்த பணத்தை வைத்து என்னென்ன செய்வதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்ட போது, இந்திய சிவில் சேர்விஸ் பரீட்சை எழுத வேண்டும். அதற்கான பயிற்சிகளுக்காக சில பணம் செலவிடுவேன். இப்பரீட்சை மூலம், மிக பாதுகாப்பானதும், பெறுமதியானதுமான நிரந்தர தொழிலொன்று எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார். மனைவிக்காக புதிய வீடு ஒன்று வாங்குவேன். பெற்றோருக்கு தேவையான பணம் வழங்குவேன். சகோதரர் சிறிய வர்த்தகமொன்றை தொடக்க மூலதனமாக கொஞ்சம் பணம் வழங்குவேன் என தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக பேசத்தொடங்கிய குமார், தனது சொந்த ஊரான மோதிஹாரியில், ஒரு நூலகம் கட்டப்போவதாகவும் இதன் மூலம் அந்த ஊரில் உள்ள சிறார்கள் தங்கள் கல்வி அறிவை பெருக்கி கொள்ளலாம் எனவும் இறுதியாக தெரிவித்த போது, சரியானவருக்கு தான் பரிசு சென்றடைந்திருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது.


source:athirvu

--
http://thamilislam.tk

Tuesday, November 1, 2011

கம்ப்யூட்டர் கேள்வி பதில்



கேள்வி: Abandonware என்று எதனைக் குறிக்கின்றனர்? இது மால்வேர் வகையைச் சேர்ந்ததா?

-கே. கிருஷ்ணன், விருதுநகர்.
பதில்: இல்லை, இல்லவே இல்லை. அபான்டன் வேர் (Abandonware) என்பது, சாப்ட்வேர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழிந்த பின்னர் விற்பனைக்கு அனுப்பாமலும், விநியோகிக்கப் படாமலும் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களாகும். பழைய கேம்ஸ் புரோகிராம்கள் இந்த வகையைச் சேர்ந்தவையே. இன்னும் நிறைய எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். கூகுள் அல்லது ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் Abandonware என டைப் செய்து தேடிப் பாருங்கள். எத்தகைய புரோகிராம்கள் பட்டியலிடப் படுகின்றன என்று அறியலாம்.

கேள்வி: நான் வாங்கப்போகும் லேப்டாப் கம்ப்யூட்டரில் ஓ.எஸ். பதிக்க, விண்டோஸ் 7 தேர்ந்தெடுத்தேன். ஆனால் அந்த ஓ.எஸ். பல நிலைகளில் வந்துள்ளதாக கடைக்காரர் கூறுகிறார். மொத்தம் எத்தனை வகை? எதனைத் தேர்ந்தெடுப்பது?
-நி. முருகேச பாண்டியன், மதுரை.
பதில்: உங்களுடைய தேவை மற்றும் உங்கள் பயன்பாடு பற்றி எதுவும் எழுதவில்லை. எனவே எது உங்களுக்கு உகந்தது என்று நீங்களே அதன் அம்சங்கள் குறித்துப் படித்துத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் 7 பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது. அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றின் கூறுகள் மற்றும் பயன்கள் குறித்து பல இணைய தளங்களில் தகவல்கள் உள்ளன. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ. 11,000 வரை உள்ளது. மேலும் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அடிப்படையில் 32 பிட் அல்லது 64 பிட் வகையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பழைய எக்ஸ்பி புரோகிராம்களையும் இதில் இயக்க விரும்பினால், புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்பை வாங்க வேண்டியதிருக்கும். பொதுவாக விண்டோஸ் 7 பதிப்பில், இந்த இரண்டு வகை மட்டுமே அதிகமாக, கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.

கேள்வி: இன்டர்நெட் தளஙகளின் பெயர்கள் எண்களில் தான் உள்ளது. ஆனால் நாம் பெயர்களை வைத்துக் கொள்கிறோம். இதனை மாற்றும் வேலையை டி.என்.எஸ். சர்வர்கள் செய்கின்றன என்று முன்பு எழுதி இருந்தீர்கள். ஏன் எண்களையே வைத்துக் கொள்ளக் கூடாது? இந்த விதியை யார் கொண்டு வந்தது?
-என். ஆல்வின் சாமுவேல், திருப்பூர்.
பதில்: ஆஹா! உங்கள் எண்ணப் படியே, ஊர்களுக்கு எண்களை வைத்துப் பாருங்கள். கண்டக்டரிடம் 38567 லிருந்து 23483க்கு ஒரு டிக்கட் கொடுங்க என்று கேட்டால் என்ன செய்வார்? எத்தனை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? எத்தனை இணைய தளங்களுக்கு எண்களை நினைவில் கொள்ள முடியும்? எனவே தான் இன்டர்நெட் வடிவமைக்கப் படுகையில், எண்களை சர்வர்கள் படிக் கட்டும், நாம் பெயர்களைக் கொள்வோம் என்று அமைத்தார்கள். இதற்கென விதி எதுவும் தரவில்லை. பொதுவான ஏற்பாடுதான்.

கேள்வி: வேர்டில் பேஜ் பிரேக் போல வேறு என்ன வகை பிரேக் ஏற்படுத்தலாம்? ஏற்படுத்திய பிரேக் இடைவெளியை, கோடுகளை நீக்கும் வழியையும் குறிப்பிடவும்.
-என். ரமணி, மதுரை.
பதில்: பேஜ் பிரேக், செக்ஷன் பிரேக் எனப் பல உள்ளன. பேஜ் பிரேக் ஏற்படுத்த, குறிப்பிட்ட இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியபடி என்டர் தட்டவும். இதனை மெனு பார் வழியாகவும் மேற்கொள்ளலாம். அதே இடத்தில் வேறு பிரேக் வகைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
இன்ஸெர்ட் மெனு சென்று அதில் முதலாவதாகக் கிடைக்கும் பிரேக் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய பாக்ஸ் ஒன்றுகிடைக்கும். அதில் பிரேக் டைப்ஸ் மற்றும் செக்ஷன் பிரேக் டைப்ஸ் என்ற இரண்டு வகை பிரேக் பிரிவுகள் இருக்கும். உங்களுக்கு எந்த வகை பிரேக் வேண்டுமோ அதற்கான ரேடியோ பட்டனைத் தேர்ந் தெடுத்து பின் ஓகே கிளிக் செய்திடலாம். இங்கு அனைத்து வகை பிரேக் குறித்தும் தகவல் கிடைக்கும்.
ஏற்படுத்திய பிரேக்கினை எப்படி நீக்குவது? டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். டாகுமெண்ட் நார்மல் வியூவில் இருக்க வேண்டும். இதற்கு வியூ மெனுவில் நார்மல் தேர்ந்தெடுக் கவும். இந்த வியூவில் தான் பேஜ் பிரேக் கோடாகத் தெரியும். பேஜ் பிரேக் உங்கள் டாகுமெண்ட்டில் புள்ளிகள் வைத்த பெரிய நீண்ட கோடாகக் காட்சி அளிக்கும். பேஜ் பிரேக் உள்ள இடத்திற்குச் செல்லவும். அங்கு கர்சரை வைத்து டெலீட் பட்டன் அழுத்தினால் பேஜ் பிரேக் நீக்கப்படும். அல்லது அம்புக் குறி கர்சரை பேஜ் பிரேக் கோட்டில் இடது மூலைக்குக் கொண்டு சென்று கிளிக் செய்தால் பேஜ் பிரேக் கோடு தேர்ந்தெடுக் கப்படும். பின் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் அழுத்தி இதனை நீக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில், கார்ட் ரீடர் போன்ற காலியாக உள்ள ட்ரைவ்கள் காட்டப்படுவதில்லை. சிஸ்டமே இப்படித்தான் உள்ளதா? அல்லது என் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாறிவிட்டதா? இதனைக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும்?
-கா. சிரோன்மணி ராணி, காரைக்கால்.
பதில்: மாறா நிலையில், விண்டோஸ் 7, காலியாகவுள்ள ட்ரைவ்களைத் தன் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டு வதில்லை. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமும் பதில் இல்லை. ஆனால், இதனைக் காட்டும்படி சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். 
ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். இந்த பட்டனுக்கு மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் Change Search Options என டைப் செய்திடவும். உடன், பல முடிவுகள் மேலாகக் காட்டப்படும். இதன் தொடக்கத்தில், Change Search Options for files and folders என்று ஒரு வரி கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோ வில் வியூ டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின்னர், ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு Hide empty drives in the Computer folder என்று இருப்பதனைக் காணவும். இதன் முன்னால் காணப்படும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரால் கிளிக் செய்தால், டிக் அடையாளம் எடுக்கப்பட்டுவிடும். பின்னர், Apply மற்றும் OK பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இனி எந்த மீடியாவினை உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தாலும், அந்த ட்ரைவ் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டப்படும்.

கேள்வி: என் மகள் ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறாள். நான் வீட்டில் இருக்கிறேன். மகள் கம்ப்யூட்டர் நன்றாக இயக்குவாள். அவளுக்கு ஆர்வமூட்டும் வகையில் பிசிக்ஸ் கற்றுத்தரும் இன்டர்நெட் வெப்சைட்கள் ஏதேனும் சிலவற்றைக் கூறவும்.
-க.ராணி சதீஷ், மேலூர்.
பதில்: மகளின் கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டுள்ள உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் வீட்டில் இருந்தாலும், கம்ப்யூட்டரில் மகளுக்குத் தேவையானதைக் காட்டி, கல்வியில் வழி காட்டலாம். இயற்பியல் பாடத்திற்கு நான் பார்த்த நல்லதொரு இணையதளம் பற்றிய தகவல்களைத் தருகிறேன். இந்த தளத்தின் பெயர் Crayon Physics. இதன் தள முகவரி http://crayonphysics.en.softonic.com/download. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆர்வ மூட்டும் விளையாட்டு மூலம் இது இயற்பியலைக் கற்றுத் தருகிறது. இந்த விளையாட்டில் ஒரு பந்தினை நட்சத்திரக் குறியிட்ட இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதனைக் கொண்டு செல்ல பல வழிகள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் இயற்பியல் கோட்பாடுகளின் எளிய விதிகளை விளையாட்டாகக் கற்றுக் கொடுக்கின்றன.
இந்த விளையாட்டு ஒரு இரண்டு பரிமாணக் காட்சியில் காட்டப்படுகிறது. பிசிக்ஸ் பிரிவின் gravity, momentum, inertia, mass, friction, kinetic and potential energy எனப் பல கோட்பாடுகள் விளையாட்டு மூலம் விளக்கப்படுகிறது. எந்த லெவலில் குழந்தைகள் விளையாடலாம் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். நன்கு கற்று அறிந்தவர்கள் வெறும் விளையாட்டாகவும் இதனை எடுத்துக் கொண்டு பொழுதைப் போக்கவும் செய்திடலாம். ஆனால் விளையாடு கையில் சிந்திக்கும் திறனை நன்கு வளர்க்கும் விதத்தில் இந்த கேம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

source:athirvu

--
http://thamilislam.tk
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails