Thursday, October 27, 2011

ஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டுவதே குற்றம்

 !

 இலங்கையில் ஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டுவதே குற்றம் 


ஆபாச பிரசுரங்களை விநியோகித்தல், பார்வையிடுதல், வெளியிடுதல், பிரசுரித்தல், வைத்திருத்தல், காண்பித்தல் போன்வற்றை தடுப்பதற்காக கடுமையான சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி பாலியல் ரீதியான ஆபாச வெளியீடுகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கும் விதத்தில் புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. நீதியமைச்சு இது தொடர்பான சட்டத்தை தயாரித்து வருவதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்தார். சிறுவர்களை, சிறுமியர்களை மையப்படுத்திய ஆபாச பிரசுரங்களை, வீடியோக்களை, புகைப்படங்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல், அருகில் வைத்திருத்தல், பிரசுரித்தல், மற்றவருக்கு காண்பித்தல், மற்றவருக்கு அனுப்புதல், செலியூலர் தொலைபேசியூடாக மற்றவருக்கு அனுப்புதல், காண்பித்தல், கணனியில் ஆவணப்படுத்துதல், மற்றவருக்கு இணைய வழியாக அனுப்புதல், காண்பித்தல், போன்றன குற்றச் செயல்களாக கருதப்படுகிறது.

இக்குற்றச் செயல்களுக்கு உள்ளான ஒருவருக்கு இரண்டு வருடத்துக்கு குறையாத 10 வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபா தண்டப்பணமும் அல்லது இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார். இரண்டாவது தடவையாக இவர் குற்றவாளியாக காணப்பட்டால் 5 இலட்சத்துக்கு குறையாத தண்டப்பணம் அல்லது 20 வருடத்துக்கு குறையாத சிறத்தண்டனை அல்லது இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார். தேவேளை கணனிகளுக்கான சேவை வழங்குநர்கள் தாம் வழங்கும் சேவையினூடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்க்க முடியாது என்ற உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.

அவ்வாறு சேவை வழங்குநர்கள் மூலம் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்த்ததாக அல்லது வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று இலட்சம் ரூபாவுக்கு குறையாத 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணத்தை செலுத்த வேண்டியவராக இருப்பார். இச்சட்டம் விரைவில் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன் நீதியமைச்சு இச்சட்டத்தை சட்டவரைஞர் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளது. நவீன தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்ததன் பின்னர் கணனிகள், இணையங்கள், செலியூலர் தொலைபேசிகள் ஊடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரித்துள்ள மையை கட்டுப்படுத்தும் நோக்குடன் இப்புதிய கடுமையான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது.



source:athirvu

--
http://thamilislam.tk

Wednesday, October 26, 2011

உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது 

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது. 

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)

பீஜே அவர்கள் கூறியது உண்மையா?

அன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா?

அல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா?

முஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா?

அல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா?

இவைகளை அறிய இந்த கட்டுரையை படியுங்கள்,  மற்றும் பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் புனையும் பொய்களை அறிந்துக்கொள்ளுங்கள்.


இஸ்லாமியர்களுக்கு சவால்

முஹம்மது மரித்த ஆண்டில் இருந்த "குர்‍ஆன் கையெழுத்துப்பிரதி" முழுவதுமாக இன்னும் தங்களிடம் உள்ளது என்ற மாயையை முஸ்லிம்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், விஞ்ஞான உண்மைகள் இஸ்லாமியர்களின் இந்த நம்பிக்கைக்கு எதிராக சாட்சி சொல்கிறது. 

கி.பி. 750க்கு முந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்ட பழங்கால குர்‍ஆன் பிரதிகள் உலகின் எந்த ஒரு அருங்காட்சியத்திலும் இல்லை. நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம், நாங்கள் சொன்ன இந்த விவரம் தவறு என்பதை நிருபியுங்கள்! எங்களுக்கு அந்த கையெழுத்துப் பிரதியின் பெயர், அது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது, அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். சகோதரர் ஆன்ரு அவர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவியுங்கள். (There are no ancient copies of the Koran dating before 750 AD in museums. We challenge you to prove us wrong! Send us the name, locate and date of the Koran written earlier! Email Brother Andrew. )

இன்று அருங்காட்சியங்களில் இருக்கும் பழங்கால முழு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் முஹம்மது மரித்து 100 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும்: 

முஸ்லிம்களின் பொய்யான/தவறான வாதம்:

"வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால்: காலிஃபா உஸ்மான் அவர்களின் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட இரண்டு குர்‍ஆன் பிரதிகள் இன்னும் நம்மிடம் உள்ளது. இந்த குர்‍ஆன் பிரதிகளின் வசனங்களையும், அத்தியாயங்கள் அமைக்கப்பட்ட அமைப்பையும் விருப்பம் உள்ளவர்கள் ஒப்பிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம். அதாவது உலகின் எந்த நாட்டிலும் எந்த கால கட்டத்திலும் அச்சடிக்கப்பட்ட அல்லது கைகளால் எழுதப்பட்ட குர்‍ஆனோடு உஸ்மான் கால குர்‍ஆனை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளட்டும். இப்படி ஒப்பிடும் போது, உஸ்மான் கால குர்‍ஆனும் தற்கால குர்‍ஆனும் ஒன்று போலவே இருக்கும், வித்தியாசம் இருக்காது. (Von Denffer, Ulum al-Qur'an, p 64)

உண்மை என்ன? 

முஹம்மதுவின் காலத்துக்கு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் தங்களிடம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் கூறிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டாலும், உண்மை வேறு விதமாக உள்ளது. 

இரண்டு பழங்கால குர்‍ஆன் பிரதிகளின் ஒரு பகுதி இரண்டு இடங்களில் உள்ளது. தாஸ்கண்ட் என்ற இடத்தில் சமர்கண்ட் (Samarqand MSS) என்ற குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி உள்ளது. இன்னொரு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள தாப்காபி (Topkapi) அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரும்பான்மையான‌ முஸ்லிம்க‌ளுக்கு தெரியாத‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இந்த‌ இர‌ண்டு கையெழுத்துப் பிர‌திக‌ளும் "க்யூபிக் (Kufic)" என்ற‌ எழுத்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வைக‌ளாகும். இந்த கையெழுத்து பிரதிகள் முஹம்மது மரித்த பிறகு 200 ஆண்டுகளுக்கு பின்பாக எழுதப்பட்டவைகள் என்று இஸ்லாமிய பண்டிதர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு வேளை இந்த இரு பிரதிகளும் அக்காலத்திற்கு முன்பு எழுதப்பட்டு இருந்தால், அவை இரண்டும் "மைல் (Ma'il)" அல்லது "மஸ்க் (Mashq)" என்ற எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்திருக்கும். ஜான் கிள்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தில் இதே முடிவுரையை கூறியுள்ளார் (John Gilchrist, Jam' Al-Qur'an, Jesus to the Muslims, 1989) 

தாஷ்கண்ட் என்ற இடத்தில் இருக்கும் சமர்கண்ட் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி, முழு குர்‍ஆனில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே உள்ளது . மான் தோலில் பெரிய அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட 250 பக்கங்கள் உள்ளன. இந்த அரபி எழுத்துக்கள் "ஹெஜாஜ்" என்ற சௌதி அரேபியா எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது (கியூபிக் – Kufic Script). 

நம்மிடம் "மைல் (Ma'il style of script)" என்ற அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட குர்‍ஆன் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. இந்தப் பிரதி லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (Lings & Safadi 1976:17,20; Gilchrist 1989:16,144). மார்டின் லிங்க்ஸ் (Martin Lings) என்பவர் ஒரு இஸ்லாமியர் மட்டுமல்ல, அவர் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதிகளை பாதுகாக்கும் பதவியில் (Curator) இருந்தவர் ஆவார். அவர் இந்த மைல் கையெழுத்துப் பிரதியை கி.பி. 790 காலத்துக்கு சம்மந்தப்பட்டது என்று கணக்கிட்டுள்ளார். யாசீர் க்ஹாதி என்பவர் "வேறு ஒரு இஸ்லாமிய அறிஞர் (Islamic Masters/PhD scholar)" என்பவர் கூறியதாக அறிவித்ததாவது என்னவென்றால், "மூல குர்‍ஆனுக்கு ஒத்து இருப்பது சமர்கண்ட் கையெழுத்து பிரதியாக இருக்க வாய்ப்பு உள்ளது".

இஸ்தான்புல் நகரில் உள்ள பழங்கால தாப்காபி குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள், அந்த குர்‍ஆனின் (அனைத்து பக்கங்களின்) புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற விஷய‌ம் இஸ்லாமியர்களுக்கும் தெரியாது. ஆகையால், அந்த கையெழுத்துபிரதி மீது எந்த ஒரு முழுமையான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. இதனால் தான் விவாதம் புரியும் இஸ்லாமிய அறிஞர் எம். ஸைபுல்லாஹ் கீழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்: "தாப்காபி கையெழுத்துப் பிர‌தி ப‌ற்றி கேட்டால், இந்த‌ பிர‌தியில் எந்த‌ ஒரு ஆராய்ச்சியும் ந‌ட‌ந்த‌தாக‌ தெரிய‌வில்லை "(Who's Afraid Of Textual Criticism?, M. S. M. Saifullah, 'Abd ar-Rahman Squires & Muhammad Ghoniem). இந்த‌ தாப்காபி கையெழுத்து பிர‌தியில் இருக்கும் விவ‌ர‌ங்க‌ளை வெளியிட‌, உலக மக்கள் அவைகளை பார்வையிட‌ இஸ்லாமிய‌ர்க‌ள் ப‌ய‌ப்ப‌டுவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? குர்‍ஆன் 2:111ல் "…நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள் என்று கேட்பீராக! " என்று கூறுகிற‌த‌ல்ல‌வா? இதை இஸ்லாமிய‌ர்களே ஏன் செய்ய‌க்கூடாது? 

மிகவும் பழமையான குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி கூட (fragmentary - ஒரு சிறிய துண்டு கையெழுத்துப் பிரதி) முஹம்மது மரித்த 100 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டது தான். 

இதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் காலத்து கல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள், கையெழுத்து பிரதிகள் என்று எவைகளை பார்த்தாலும், அவைகளில் "முஹம்மது ஒரு நபி" என்ற சான்று இவைகளில் எதிலும் காணமுடியாது. 

நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றுச் சொன்னால், மிகவும் இறைநம்பிக்கைக்கொண்ட இஸ்லாமியர் அஹ்மத் வொன் டென்பர் (Ahmad Von Denffer) என்பவர் கூறுவதையாவது கேளுங்கள். இவர் தம்முடைய "உலும் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தின், "குர்‍ஆனின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் " என்ற அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

இஸ்லாமியர்களுக்கு சவால்

கி.பி. 750க்கு முந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்ட பழங்கால குர்‍ஆன் பிரதிகள் உலகின் எந்த ஒரு அருங்காட்சியத்திலும் இல்லை. நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம், நாங்கள் சொன்ன இந்த விவரம் தவறு என்பதை நிருபியுங்கள்! எங்களுக்கு அந்த கையெழுத்துப் பிரதியின் பெயர், அது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது, அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். சகோதரர் ஆன்ரு அவர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவியுங்கள். (There are no ancient copies of the Koran dating before 750 AD in museums. We challenge you to prove us wrong! Send us the name, locate and date of the Koran written earlier! Email Brother Andrew. )

ஆசிரியர்: சகோதரர் ஆன்ட்ரூ 

ஆங்கில மூலம்: Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!


source:isakoran.blogspot


--
http://thamilislam.tk

குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வசனங்களும் பாகம் 3

(தொலைந்த 157 குர்ஆன் வசனங்கள்)

முன்னுரை: இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆனை பற்றி புகழ்ந்து கூறவேண்டுமென்றுச் சொல்லியும், தங்கள் பிழைப்பு இதனால் நடக்கவேண்டுமென்றுச் சொல்லியும், சாதாரண சராசரி இஸ்லாமியர்களை ஏமாற்றிவருகிறார்கள். குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது என்றும், உலகிலேயே மாற்றமடையாத ஒரே வேதம் குர்‍ஆன் என்றும், பொய்களை டன் கணக்கில் சொல்லிவருகிறார்கள். ஆனால், உண்மையில் குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன, சில அத்தியாயங்கள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை. இந்த உண்மைகளை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மதுவின் தோழர்கள் மூலமாக கிடைத்துள்ளது. இவைகளை இஸ்லாமிய அறிஞர்கள் சராசரி மக்களிடம் மறைக்கின்றனர். இந்த உண்மைகளை எல்லாரும் அறிய வேண்மென்பதற்காக, கீழ்கண்ட இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, இப்போது மூன்றாவது பாகத்தைக் காண்போம்.

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? 

1) ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1 

2) வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

ஸுயூதியின் இத்கான் புத்தகத்திலிருந்து: 

பாக‌ம் 3, ப‌க்க‌ம் 73ல் ஸுயூதி கீழ்க‌ண்ட‌ விவ‌ர‌ங்களை த‌ருகிறார்:

"அபீ யூனிஸ் என்ப‌வ‌ரின் ம‌க‌ள் ஹமீதா அறிவித்த‌தாவ‌து, "என் த‌ந்தை 80 வ‌ய‌து உடைய‌வ‌ராக‌ இருந்தபோது, ஆயிஷா அவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ குர்‍ஆனை படிப்பவராக இருந்தார்: "இறைத்தூத‌ர் மீது அல்லாஹ்வும் அவ‌ர‌து தூத‌ர்க‌ளும் வேண்டுத‌ல் செய்கிறார்கள், ஓ ந‌ம்பிக்கையாள‌ர்க‌ளே, அவ‌ர் மீதும் முத‌ல் வ‌ரிசையில் நின்று தொழுது கொள்ப‌வ‌ர்க‌ள் மீது ஆசீர் கூறுங்க‌ள்". மேலும் ஹமீதா கூறியதாவது "இது உஸ்மான் குர்‍ஆனின் பிர‌திக‌ளை மாற்றுவ‌த‌ற்கு முன்பாக‌ குர்‍ஆனில் இருந்ததாகும் ".

பக்கம் 74ல், நாம் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:

"அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் அவர்களிடம் உமர் கூறியதாவது, குர்‍ஆன் வசனங்களில் "நீ முதலாவது வந்ததுபோல முயற்சி செய்" என்ற‌ வசனத்தை கண்டாயா? இதை நான் கு‍ர்‍ஆனில் காணமுடியவில்லை. அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் உமரிடம் "குர்‍ஆனிலிருந்து நீக்கபப்ட்ட இதர வசனங்களோடு இந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது " என்று கூறினார்.

அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் என்பவர் சிறந்த நபித்தோழராக இருந்தவர் மற்றும் கலிபா பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் ஆவார்.

இத்கான் புத்தகத்தில், அதே பக்கத்தில் (பாகம் 3, பக்கம் 74), நாம் கீழ்கண்ட விவரங்களை படிக்கிறோம்:

"முஹம்மதுவின் தோழர்களிடம் மஸ்லமா அல் அன்ஸார் கூறியதாவது: "உஸ்மான் தொகுத்த குர்‍ஆனில் காணப்படாத இரண்டு குர்‍ஆன் வசனங்களை என்னிடம் யாராவது கூறுங்கள்? ". அவர்களால் அவ்வசனங்களை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை. அதன் பிறகு மஸ்லமா கூறியதாவது: 

"ஓ நம்பிக்கையாளர்களே! சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு குடியேறியவர்களே, அல்லாஹ்விற்காக உங்கள் உடைமைகளோடு போராடுகிறவர்களே, உங்களுக்கு நன்மை உண்டாகும், நீங்கள் பாக்கியமுள்ளவர்கள். மற்றும் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றவர்களிடமிருந்து இவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்களே, தங்க இடம் அளித்தவர்களே, உதவி செய்பவர்களே நீங்கள் பாக்கியமுள்ளவர்கள். அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிய அவர்களின் ஆத்துமாவிற்கு அவர்கள் செய்த செய்கைக்கு தக்க பலன் காத்துக்கொண்டு இருக்கிறது."

ஸுயூதி தம்முடைய இத்கான் புத்தகத்தின் பாகம் 3ல், 73 மற்றும் 74ம் பக்கங்களில், முஹம்மதுவின் தோழர்களின் எல்லா விமர்சனங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இன்று நம்மிடம் இருக்கும் உஸ்மான் தொகுத்த குர்‍ஆனில் காணப்படாத வசனங்கள் பற்றி நபித்தோழர்கள் கொடுத்த விமர்சனங்களை அவர் குறிப்பிடுகிறார். அவ்வசனங்கள் இன்று நம்மிடமுள்ள குர்‍ஆனில் காணப்படுவதில்லை. ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், நாங்கள் மேற்கோள் காட்டும் மேற்கோள்கள் அனைத்தும், இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆன் விரிவுரையாளர்களும் "சிறந்தவர்கள்" என்று கருதும் அலி, உஸ்மான், அபூ பக்கர் மற்றும் முஹம்மதுவின் மனையாகிய ஆயிஷா, இப்னு மஸூத் மற்றும் இப்னு அப்பாஸ் போன்றவர்களின் மேற்கோள்களாகும். இவர்களின் மேற்கோள்களை எல்லா இஸ்லாமியர்களும் நம்பகமானது என்று கருதுகிறார்கள். குர்‍ஆனை விவரிக்கவேண்டுமென்றால், முஹம்மதுவின் வாழ் நாட்களில் குர்‍ஆனின் வசனங்கள் எப்பொது எங்கே வெளிப்பட்டது என்பதை அறிய இந்த நபித்தோழர்களின் உதவி நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களை போல இஸ்லாமின் கோட்பாடுகளை விவரிக்க வேறு யாரால் முடியும்? 

ஸுயூதியின் இத்கான் புத்தகத்தின் முதல் பாகத்தை நாம் படித்தால், கீழ்கண்ட விவரங்களை அறியலாம் (பக்கம் 184):

குர்‍ஆனின் தொலைந்த 157 வசனங்கள்

"மாலிக் கூறியதாவது: ஆரம்பத்தில் 9வது (தௌபா) அத்தியாயத்திலிருது அனேக வசனங்கள் விடுபட்டுவிட்டது. அவைகளில் ஒரு வசனம்: "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவக்குகிறேன்" என்பதாகும். ஸூரா பகராவிற்கு நிகரான வசனங்கள் இந்த தௌபா ஸூராவில் இருந்தன என்பது நம்பகமான விவரமாகும்.

இதன் பொருள் என்னவென்றால், இந்த அதிகாரத்திலிருந்த 157 வசனங்கள் தொலைந்துவிட்டன. மற்றும் ஸுயூதி (பக்கம் 184ல்) கூறும் போது, "இப்னு மஸூத்தின் குர்‍ஆன் பிரதியில் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ..." என்ற வசனம் இந்த அதிகாரத்தில் காணப்பட்டது. நம்மிடமுள்ள குர்‍ஆனை பிரதி எடுக்கும் சமயத்தில், உஸ்மான் "இப்னு மஸூத்தின்" குர்‍ஆன் பிரதியை பறிமுதல் செய்து எரித்துவிட்டார். 

குர்‍ஆனிலிருந்து வெறும் வசனங்களை மட்டும் உஸ்மான் விட்டுவிடவில்லை, முழு ஸூராக்களும் நீக்கப்பட்டுள்ளது. இப்படி ஸூராக்கள் நீக்கப்பட்ட குர்‍ஆன் தான் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ளது. ஸூயூதி மற்றும் இதர இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சிகளின் படி, உபை மற்றும் இப்னு மஸூத் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இரண்டு ஸூராக்கள் காணப்பட்டன, அதாவது "ஹஃப்த்" மற்றும் "க்ஹல்" என்ற இரண்டு ஸூராக்கள் காணப்பட்டன. அவைகள் அஸ்ர் என்ற 103வது ஸூராவிற்கு அடுத்தபடியாக அமைக்கப்பட்டு இருந்தன. (பார்க்கவும் பக்கம் 182 மற்றும் 183) 

இன்றைய குர்‍ஆனில் காணப்படாத அத்தியாயங்களை தொழுகையில் ஓதுதல், உமரின் வழக்கமாக இருந்தது 

ஸுயூதி மேலும் கூறும் போது "அப்துல்லாஹ் இப்னு மஸூத் அவர்களின் குர்‍ஆன் பிரதியில், ஸூரா 113 மற்றும் 114 என்ற அத்தியாயங்கள் காணப்படவில்லை. இத்கான் 184வது பக்கத்தில், ஸுயூதி கூறும் போது, "உபை இப்னு கஅப்" என்பவரின் குர்‍ஆன் பிரதியில் இரண்டு அத்தியாயங்கள் காணப்பட்டன. இந்த அதிகாரங்கள் "ஓ இறைவா, உன்னுடைய உதவியை நாங்கள் கேட்கிறோம்" மற்றும் "ஓ இறைவா, உன்னையே நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்" என்று ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு அத்தியாயங்களின் பெயர்கள் "ஹஃப்த்" மற்றும் "க்ஹல்" என்பதாகும். ஸுயூதி, 185வது பக்கத்தில் இறைத்தூதரின் மிகவும் புகழ்பெற்ற தோழராகிய "அலி இப்னு அபி ஸாபித்" என்பவரும் இந்த இரண்டு அத்தியாயங்களை அறிந்திருந்தார் என்பதை தெரிவிக்கிறார். உமர் இப்னு அல் கத்தாப்பும் தமது தொழுகையில் இவ்வதிகாரங்களை ஓதுவது வழக்கமாக கொண்டு இருந்தார் .

"இப்னு அப்பாஸ்ஸின் குர்‍ஆன் பிரதி, அல்லது இப்னு மஸூத் என்பவரின் குர்‍ஆன் பிரதி, ...ஆயிஷா அவர்களின் குர்‍ஆன் பிரதி " என்றெல்லாம் கூறுகின்றீர்களே, இதன் பொருள் என்ன? "அனேக குர்‍ஆன்கள் இருந்தன என்றுச் சொல்கிறீர்களா?" என்று வாசகர்கள் கேட்கலாம். 

இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்லப்போவதில்லை. இதற்கான பதிலை இஸ்லாமிய அறிஞர்களிடமும், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களிடமும் விட்டுவிடுகிறேன். ஏனென்றால், குர்‍ஆனின் மூல பிரதிகள் எப்படி எரிக்கப்பட்டன, மற்றும் எப்படி ஒரே ஒரு பிரதியை தயார்படுத்தி மற்ற குர்‍ஆன் பிரதிகள் அழிக்கப்பட்டன என்பதை நாம் அலசி இருக்கிறோம். 

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It. 

குர்‍ஆனிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு அத்தியாயங்களை தமிழிலும், அரபியிலும் படிக்க: 

 சூரா ஹப்த் மற்றும் க்ஹல் - (உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்)


sourc3e:isakoran.blogspot


--
http://thamilislam.tk

குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

(குர்ஆன் வசனத்தை தின்றுவிட்ட வீட்டு மிருகம்)

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம். 

பாகம் 1ஐ படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1


வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

இப்னு ஹஜ்ம் (Ibn Hazm) தம்முடைய புத்தகத்தில் தொகுப்பு 8, பாகம் 2, பக்கங்கள் 235 மற்றும் 236ல் கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்:

"கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனமும், மார்பக பாலூட்டுதல் வசனமும் ஆயிஷா அவர்களிடம் இருந்த குர்‍ஆன் பிரதியில் இருந்தது. முஹம்மது மரித்த சமயத்தில், மக்கள் அவருடைய அடக்கத்திற்காக ஆயத்தங்கள் செய்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஒரு வீட்டு மிருகம் வீட்டில் நுழைந்து அந்த குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது ". 

"The verses of stoning and breast feeding were in the possession of A'isha in a (Qur'anic) copy. When Muhammad died and people became busy in the burial preparations, a domesticated animal entered in and ate it ."

ஆயிஷா அவர்களும் தம்முடைய வசத்தில் இருந்த வசனங்கள் எவைகள் என்பதை அறிந்திருந்தார்கள். ஜமக் ஷாரி(Zamakh-Shari) என்பவரின் "al-Kash-shaf" என்ற புத்தகத்தை, பரிசீலித்து சீர்படுத்திய "முஸ்தபா ஹுசைன்" என்பவரும் இந்த விவரத்தை தம்முடைய புத்தகத்தின் பாகம் 3, பக்கம் 518ல் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும் போது, "ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்ட நிகழ்ச்சியை அறிவித்தவர்கள் நம்பகமானவர்கள்" என்றும் அவர்களில் "அப்துல்லாஹ் இப்னு அபூ பக்கர் ம‌ற்றும் ஆயிஷா" அவர்களும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதே நிகழ்ச்சியை "Dar-al-Qutni", "al-Bazzar" மற்றும் "al Tabarani" போன்றவர்கள் முஹம்மது இப்னு இஷாக் என்பவரிடமிருந்து கேட்டதாக கூறியுள்ளார்கள். மேலும் முஹம்மது இப்னு இஷாக் என்பவர் இந்நிகழ்ச்சியை அப்துல்லாஹ்விடமிருந்து கேட்டதாகவும், அப்துல்லாஹ் இதனை ஆயிஷாவிடமிருந்து கேட்டதாகவும் கூறியுள்ளார். 

மேலும், பேராசிரியர் முஸ்தபா "இந்த குர்‍ஆன் வசனங்களை வீட்டு மிருகம் சாப்பிட்ட நிகழ்ச்சிக்கு முன்பே இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருக்ககூடும்" என்று குறிப்பிடுகிறார். 

மேற்கண்ட விவரங்களை நாம் படிக்கும்போது, சில கேள்விகள் நமக்கு எழுகின்றன:

1) "அந்த கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், ஏன் உமர் அவர்கள் அதனை குர்‍ஆனில் சேர்க்கவேண்டும் என்று மறுபடியும் கொண்டுவருகிறார்?" (முதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1). 

2) இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், முஹம்மது மரித்துவிட்ட பிறகும் மக்கள் ஏன் "மார்பக பாலூட்டுதல் குர்‍ஆன் வசனங்களை தொடர்ந்து ஓதிக்கொண்டு இருந்தார்கள்"? 

3) இந்த பாலூட்டுதல் வசனங்களை மக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக ஓதிக்கொண்டே இருக்கும் போது முஹம்மது மரித்துவிட்டதால், அவரது மரணத்திற்கு பின்பு இவ்வசனங்களை "அதிகார பூர்வமாக இரத்து செய்தவர்கள் யார்?". ஒருவேளை அந்த வீட்டு மிருகம் அவ்வசனங்களை இரத்து செய்துவிட்டதா?

இந்த நிகழ்ச்சி நடந்தது என்பதற்கு, முஹம்மதுவின் தோழர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் ஆயிஷா அவர்களே சாட்சிகளாக இருக்கிறார்கள். 

முடிவுரை: முதல் பாகத்தில் நாம் கண்டது போல, நூற்றுக்கும் அதிகமான குர்‍ஆன் வசனங்கள் தொலைந்துவிட்டன. இந்த இரண்டாம் பாகத்தில் நாம் கண்டோம், ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது. குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்திய வசனங்கள் அப்படியே நம்மிடம் உள்ளது என்று தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது பொய். முஹம்மதுவின் தோழர்கள், மற்றும் அவரின் பிரியமான மனைவியாகிய ஆயிஷா மற்றும் ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சியின் படி நம்மிடம் உள்ள குர்‍ஆன் "பாதுகாக்கப்பட்ட ஒரு வேதமல்ல" என்பது தெளிவாக புரிகிறது. 

இப்னு உமர் அல்கத்தாப்பின் கூற்றுப்படி, எந்த ஒரு இஸ்லாமியரும் "தன்னிடம் முழு குர்‍ஆன் உள்ளது என்று கூறக்கூடாது", ஏனென்றால், மூல குர்‍ஆனில் உள்ள அனேக வசனங்கள் காணாமல் போய் உள்ளன. 

இன்னும் "தொலைந்த குர்‍ஆன் வசனங்கள்" தொடரும்....

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.


source:isakoran.blogspot


--
http://thamilislam.tk

குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம். 

இப்னு உமர் அல் கத்தாப்: 

குர்‍ஆன் முழுமையானதல்ல, குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன என்று இப்னு உமர் அல் கத்தாப் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

"என்னிடம் முழு குர்‍ஆனும் உள்ளது என்று உங்களில் யாரும் சொல்லக்கூடாது, தன்னுடமுள்ள குர்‍ஆன் முழுமையானது என்று அவனுக்கு எப்படித் தெரியும்?குர்‍ஆனின் பெரும் பகுதி தொலைந்துவிட்டது , ஆகையால் "குர்‍ஆனில் எவைகள் மீதமிருக்கிறதோ அவைகள் என்னிடமுள்ளன" என்று கூறுங்கள். (ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72) 

"Let no one of you say that he has acquired the entire Qur'an for how does he know that it is all? Much of the Qur'an has been lost , thus let him say, 'I have acquired of it what is available" (Suyuti: Itqan, part 3, page 72).

இப்னு உமர் கூறியதற்கு ஆதரவாக ஆயிஷா அவர்கள் (பக்கம் 72) கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்கள்:

"இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில், " கூட்டங்கள் (Parties)" என்ற ஸூராவை ஓதும் போது இருநூறு வசனங்கள் இருந்தன . குர்‍ஆனின் பிரதிகளை உஸ்மான் உருவாக்கிய பிறகு, குர்‍ஆனில் இப்போதுள்ள வசனங்கள் மட்டுமே மீதமாக உள்ளது (73 வசனங்கள்)" 

"During the time of the prophet, the chapter of the Parties used to be two hundred verses when read. When Uthman edited the copies of the Qur'an, only the current (verses) were recorded" (73 verses).

முஹம்மதுவின் தோழர்களில் சிறந்தவரான உபை இப்னு கஅப் என்பவரும், ஆயிஷா அவர்கள் கூறியது போலவே கூறியுள்ளார்.

ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72:

"ஒரு முஸ்லிமிடம் இந்த சிறப்புமிக்க தோழர் இவ்விதமாக கேட்டார், ' கூட்டங்கள் (Parties) என்ற அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன‌?'. இதற்கு அந்த முஸ்லிம் '72 அல்லது 73 வசனங்கள்' என்று பதில் அளித்தார். உபை அவரிடம் இவ்விதமாக சொன்னார், 'அல் பகரா ஸூராவில் இருந்த வசனங்களுக்கு சமமான வசனங்கள் (கிட்டத்தட்ட 286 வசனங்கள்) இந்த 'கூட்டங்கள் (Parties)' அத்தியாயத்திலும் இருந்தன , அதில் கல்லெரிந்து கொல்லுதல் வசனமும் இருந்தது. அந்த மனிதர் உபையிடம் 'அந்த கல்லெரிந்து கொல்லுதல் வசனம் என்ன?' என்று கேட்டார். உபை அவரிடம், 'அதாவது வயது சென்ற ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்தால், அவர்கள் மரிக்கும் வரை கல்லெரிந்து கொல்லவேண்டும்' என்பது தான் அந்த வசனம் என்று பதில் அளித்தார். 

"This famous companion asked one of the Muslims, 'How many verses in the chapter of the Parties?' He said, 'Seventy-two or seventy-three verses.' He (Ubay) told him, 'It used to be almost equal to the chapter of the Cow (about 286 verses) and included the verse of the stoning .' The man asked, 'What is the verse of the stoning?' He said, 'If an old man or woman committed adultery, stone them to death."'

நபித்தோழருக்கும், ஒரு முஸ்லிமுக்கும் இடையே நடந்த மேலே கூறிய உரையாடலை அப்படியே பதிவு செய்து, இப்னு ஹஜம் என்ற இஸ்லாமிய அறிஞர், கீழ்கண்டவாறு கூறுகிறார் (தொகுப்பு 8, பாக‌ம் 11, ப‌க்க‌ங்க‌ள் 234 ம‌ற்றும் 235):

"அலி இப்னு அபூ தாலிப்பின் கூற்றின் ப‌டி, இந்த‌ ஹ‌தீஸ் ச‌ரியான‌ ஹ‌தீஸாகும் (ந‌ம்பிக்கையான‌ ச‌ங்கிலித் தொட‌ர் உடைய‌ ஹ‌தீஸாகும்) (The Sweetest [Al Mohalla] Vol. 8.). 

"'Ali Ibn Abi Talib said this has a reliable chain of authority (The Sweetest [Al Mohalla] vol. 8.)."

இதனை "al-Kash-Shaf" என்ற தம்முடைய புத்தகத்தில் ஜமக் ஷாரி (Zamakh-Shari) என்பவரும் குறிப்பிட்டுள்ளார் (பாகம் 3, பக்கம் 518). 

முஹம்மதுவின் ஹதீஸ்களையும், சரிதையையும், குர்‍ஆனின் விரிவுரைகளையும் உலகிற்கு காட்டிய இந்த இஸ்லாமிய தூண்களாகிய அவரது தோழர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் மேற்கண்ட கூற்றுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. இவர்களில் சிலர் "இப்னு உமர், ஆயிஷா, உபை இப்னு கஅப், மற்றும் அலி இப்னு அபூ தாலிப்" என்பவர்கள் ஆவார்கள்.

இப்னு உமரின் கூற்றுப்படி, குர்‍ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது.

ஆயிஷா மற்றும் உபை இப்னு கஅப் என்பவர்களின் கூற்றுப்படி, கு‍ர்‍ஆனின் "கூட்டங்கள் (Parties)" அத்தியாயத்திலிருந்து பெரும்பகுதியான தொலைந்துவிட்டது,

இதையே அலி கூட உறுதிப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சிப் பற்றி ஸுயூதி தன் "இத்கான்" என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார் (பாகம் 1, பக்கம் 168):

குர்‍ஆன் தொகுக்கப்பட்டுக் கொண்டு இருந்த காலக் கட்டத்தில், மக்கள் ஸைத் இப்னு தாபித் என்பவரிடம் (தாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த குர்‍ஆன் வசனங்களோடு)வருவார்கள். இரண்டு அத்தாட்சிகள் இருந்தால் மட்டுமே ஏற்பேன் இல்லையேல் அவைகளை குர்‍ஆனில் சேர்க்கமாட்டேன் என்றுச் சொல்லி அவர் மறுத்துவிடுவார். "அல் தவ்பா" என்ற அத்தியாயத்தின் கடைசி வசனம் "குஜைமா இப்னு தாபித்" என்பவரிடம் மட்டுமே இருந்தது. 'இந்த வசனம் இவரிடம் மட்டுமே இருந்தாலும், அதனை பதிவு செய்யுங்கள், ஏனென்றால், குஜைமாவின் சாட்சி இரண்டு சாட்சிகளுக்கு சமம் என்று இறைத்தூதர் கூறியிருக்கிறார்' என்று ஸைத் கூறினார். உமரும் "கல்லெரிதல்" வசனத்தை கொண்டு வந்தார், இருந்தாலும், அவர் கொண்டு வந்த‌ வசனம் குர்‍ஆனில் பதிவு செய்யப்படவில்லை, ஏனென்றால், இவ்வசனத்திற்கு உமர் மட்டுமே சாட்சியாக இருந்தார்". 

"During the collection of the Qur'an, people used to come to Zayd Ibn Thabit (with the verses they memorized). He shunned recording any verse unless two witnesses attested to it. The last verse of chapter of Repentance was found only with Khuzayma Ibn Thabit. Zayd said, 'Record it because the apostle of God made the testimony of Khuzayma equal to the testimony of two men.' 'Umar came with the verse of the stoning but it was not recorded because he was the only witness to it."

மேற்கண்டவைகளை ஒருவர் படித்தால் அவர் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்:

"உமருடைய சாட்சி உண்மையான சாட்சி தான் என்றுச் சொல்ல இன்னொரு சாட்சி அவசியமா?"

"அல்லாஹ்விற்கும், அவனது குர்‍ஆனுக்கும் எதிராக உமர் பொய்யை கூறுவாரா?".

அதன் பிறகு உமர் இவ்விதமாக கூறினார், 'உமர் அல்லாஹ்வின் புத்தகத்தில் சேர்த்துவிட்டார் என்று என் மீது குற்றம் சொல்லாமல் இருப்பார்களானால், நான் அந்த கல்லெரிதல் வ்சனத்தை குர்‍ஆனோடு சேர்த்து இருந்திருப்பேன்".(இத்கான், பாகம் 3, பக்கம் 75). மேலும் "Skiek Kishk" என்பவரின் புத்தகத்திலும் இதனை காணலாம். 

ஆயிஷா அவர்களின் இன்னொரு அறிக்கை:

"இறக்கப்பட்ட வசனங்களில் "பத்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனத்தை "ஐந்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனம் இரத்து செய்துவிட்டது.இறைத்தூதர் மரித்துவிட்ட பிறகும் இந்த வசனம் குர்‍ஆனின் வசனமாக வாசிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை அபூ பக்கர் மற்றும் உமர் மூலமாக அறிவிக்கப்பட்டது (பார்க்க ஸுயூதி, இத்கான் பாகம் 3 பக்கங்கள் 62 மற்றும் 63) 

"Among the (verses) which were sent down, (the verse) of the ten breast feedings was abrogated by (a verse which calls for five breast feedings. The apostle of God died and this verse was still read as part of the Qur'an. This was related by Abu Bakr and 'Umar" (refer to Suyuti's qan, part 3, pages 62 and 63).

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.


source:isakoran.blogspot


--
http://thamilislam.tk

Tuesday, October 25, 2011

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா ?


 கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார். அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.

இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள். அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அபிக்குமரனால் தமிழ் இனத்துக்கே பெருமை என்றால் அது மிகையாகாது. 


source:athirvu
--
http://thamilislam.tk

Monday, October 24, 2011

பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம்

 

 
நிகாப் என்னும் முழு முகத்திரை அணிந்த ஒரு பெண்

நிகாப் என்னும் முழு முகத்திரை அணிந்த ஒரு பெண்

பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.

 முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.

விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்யவுள்ளார்கள்.

முகத்திரையை நீக்க மறுத்த காரணத்துக்காக ஹைண்ட் அஹமாஸ் மற்றும் நஜத் அலி ஆகிய இருவருக்கும் இன்று முறையே 120 மற்றும் 80 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுடன், ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்திலேயே இறுதி முடிவும் எடுக்கப்படும்.

முழுமையான முதத்திரையை அணிவது என்ற தனது முடிவு சுயமானது என்று கூறுகின்ற ஹைண்ட் அஹமாஸ் அவர்கள், முகத்திரைக்கான தடை கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த பின்னர், தனக்கு வங்கிகள், கடைகள் அல்லது பஸ்கள் என அனைத்து பொது இடங்களிலும் தடை விதிக்கப்பட்டதாகவும், குறைந்த பட்சம் ஒரு தடவைக்கு மேல் வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

இஸ்லாமிய விதிகளின் படி முழுமையான முகத்திரை கட்டாயமானதல்ல என்பதுடன், இது குறித்த விவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்கிடையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

இந்தத் தடை குறித்து பெரும் சர்ச்சை நிலவுகின்ற போதிலும், நூற்றுக்கும் குறைவான முகத்திரை அணிந்த பெண்களே இதற்காக வீதிகளில் தடுக்கப்பட்டதுடன், பத்துக்கும் குறைவான பெண்களே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் ஒன்றில் இதே போன்ற தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டது அல்லது கொண்டுவரப்படுகின்றது.

இன்றைய இந்த தீர்ப்பு இந்த அனைத்து நாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.


source:BBC


--
http://thamilislam.tk

Thursday, October 20, 2011

தயாநிதிக்கு ஆதரவாக ஆவணங்கள் அழிப்பு : அதிர்ச்சி தகவல்


சென்னை: தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு ஆதரவாக, ஆவணங்களை அழிக்கும் முயற்சி நடந்துவரும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுப்ரமணியன் அறையை நேற்று முற்றுகையிட்டனர். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின், 323 இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தயாநிதி வீட்டில் இருந்து, சன், "டிவி' அலுவலகத்திற்கு, "ஆப்டிகல் பைபர் கேபிள்' இணைப்பு மூலம், அதிநவீன தொடர்பு, முறைகேடாக வழங்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி, தயாநிதி வீட்டில் ரெய்டும் நடந்தது. இந்த இணைப்புகளை வழங்கியபோது, வேலுச்சாமி என்பவர், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளராக இருந்தார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவரிடம், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இணைப்பு குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் தெரிவித்த தகவல்களை, சி.பி.ஐ., ரெய்டு நடத்தியபோது, சென்னை தொலைபேசி அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ரெய்டு நடந்த பின், தயாநிதிக்கு ஆதரவாக, வேலுச்சாமி இந்த இணைப்பு குறித்த தகவல்களை சென்னை தொலைபேசி அலுவலகத்திற்கே சென்று, அழிக்கவும், திருத்தவும் முயற்சி எடுத்ததாக தெரிகிறது. இதற்கு, சென்னை தொலைபேசி அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆவணங்களை அழிக்கும் முயற்சிக்கு, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "ஆவணங்களை திருத்தும் முயற்சிக்கு, சென்னை தொலைபேசி அதிகாரிகள் துணை போகக் கூடாது' என்பதை வலியுறுத்தி, அச்சம்மேளனத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், தலைமை பொதுமேலாளர் அறையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தலைமை பொதுமேலாளர் வேலுச்சாமி மற்றும் தயாநிதியின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறும்போது, "முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் தலைமை பொது மேலாளர் வேலுச்சாமி, ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஓய்வு பெற்ற பின், அலுவலகத்திற்குள் முறைகேடாக நுழைவது மற்றும் ஆவணங்களை அழிப்பதை, சென்னை தொலைபேசி அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது' என்றார்.

source:dinamalar

--
http://thamilislam.tk

கழுத்தில் கட்டி கடாபியை இழுத்துவரும் காட்சிகள் அம்பலம் ! :

 

 



லிபிய அதிபர் கடாபியை புரட்சிப்படையினர் கழுத்தில் கட்டி இழுத்துவரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவர் தங்கிருந்த நகருக்குள் இன்று காலை திடீரென நுழைந்த புரட்சிப்படையினர் அவர் இருக்கும் இடத்தை நோக்கி பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து வெளியே புறப்படவிருந்த வாகனங்களைக் குறிவைத்து துல்லியமான தாக்குதலை நேட்டோப் படையினர் மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் ஆளில்லா வேவு விமானங்கள் மற்றும் செய்மதிகளின் உதவியும் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சண்டை நடந்த இடத்தில் இருந்து அவரால் தப்பிச் செல்ல முடியவில்லை. இதேவேளை நேட்டோப் படைகளின் தாக்குதலில் அவர் ஏற்கனவே காயமடைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மறைந்திருந்த இடத்தில் புகுந்த புரட்சிப் படையினர் அவர் இருப்பிடத்தை நோக்கிச் சுட்டவாறு முன்னேறியுள்ளனர். இறுதியில் காயமடைந்த கடாபியை புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவர் தலையில் சுட்டுள்ளார். அவர் உடலத்தை கட்டி இழுத்து வெளியே வந்து மோபைல் போனில் சிலர் படம் எடுத்துள்ளனர். அந்தக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அவர் ஒரு குற்றமிழைத்தவராக இருந்தால் கூட அவரை நீதி மன்றத்தில் நிறுத்தி அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் காட்டு மிராண்டித்தனமாக இவ்வாறு அவரைக் கொலைசெய்தால் அவருக்கும் புரட்சிப்படைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

கடாபி கொல்லப்படவேண்டும் என்பதும் புரட்சிப்படையின் விருப்பமாக இருக்கிறதோ இல்லையோ அமெரிக்காவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்திருக்கிறது. மேற்குலகிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கடாபியை ஒழித்துக்கட்டிய சந்தோஷத்தில் அமெரிக்கா மிதக்கிறது. ஆனால் இனித்தான் அந் நாட்டில் பாரிய பின் விளைவுகள் ஏற்படவிருக்கிறது என்பதனை எவரும் உணர்ந்த பாடாக இல்லை. பிரான்ஸ் நாடு மட்டும் சுமார் 20,000 வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை புரட்சிப்படைகளுக்கு வழங்கியுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் அதில் ஒன்றைக்கூட அவர்கள் பாவிக்கவில்லை. ஒன்றில் விலைமட்டும் பல ஆயிரம் டாலர்களைத் தாண்டும். அவற்றை புரட்சிப் படைகளில் உள்ளவர்கள் சிலர் விற்றும் வருகின்றனர். இவை அல்கைடா மற்றும் தலபான் தீவிரவாதிகள் கைகளில் சென்று கிடைக்கவிருக்கிறது என்பதனையும் எவரும் மறுக்க முடியாது.

கடாபியின் படைகளை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதற்காக மேற்குலகம் பல நவீன ரக ஆயுதங்களை புரட்சிப் படையினருக்கு வழங்கியது. ஆனால் அவை அனைத்தும் தற்போது எங்கே என்ற கேள்விகள் எழுந்துள்ளது. கடாபியின் மறைவிற்குப் பின்னர் நடக்க விருக்கும் பாரிய அழிவை மக்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கடாபி கொல்லப்பட்டது சரி என்றும் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினால் கூட அவருக்கு தூக்குத் தண்டனை தான் கிடைத்திருக்கும் என மேற்குலகின் ஊதுகுழலான சர்வதேச தொலைக்காட்சிகள் தெரிவித்துவருகின்றன. அனால் இதே மேற்குலகம் தான் , தாம் பாரிய ஜனநாயக நாடு என்று தம்மைத் தாம்மே சொல்லியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முன்னைய செய்தி (இணைப்பு 1,2)



நீண்ட நாள் போருக்கு பின் லிபியாவில் உள்ள "சிர்டேவில்" நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துள்ளார். சமீபத்தில் இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவோடு நடந்த இந்தப் புரட்சிப் படையினர் பல நகர்களைப் பிடித்தனர். தற்போது இறுதியாக அவர் தங்கியிருந்த நகர் புரட்சிப்படைகளால் இன்று முற்றுகைக்கு உள்ளாகியது. இருப்பினும் அவர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரட்சிப் படையினர் அவரை உயிருடன் பிடித்து பின்னர் சுட்டுக்கொண்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.பி.சி அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் இவர் இறந்ததை தெரிவிக்க இழுத்தடிக்கின்ற நிலையில் சிரியா மற்றும் அரபு நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அடிப்படியில் அவர் கொல்லப்பட்டார் என்பது உறுதியாகிறது. இதேவேளை புரட்சிப் படையினருக்கு ஆதரவாக நேட்டோப் படையினர் வான் தாக்குதலை நடத்தியதோடு ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

--
http://thamilislam.tk

. "அஷ்வத் பயங்கரமான ஆளு... அவனை முந்தானையில் முடிஞ்சிக்கோ...'

பட்டாம்பூச்சிகளின் கதை! (8)

அன்பு வாசகர்களே... "என்னடா­... எப்பப் பார்த்தாலும், பட்டாம்பூச்சிகளின் கதையில் ஒரே சோக கீதம்தான் வாசிக்கப்படுகிறது. கொஞ்சமும் இனிய கீதம் வாசிக்கப் படுவதில்லையே...' என, சிலர் எழுதியிருந்தீர்கள். உங்களுக்காகவே நான் சந்தித்த, இந்த வெற்றி ஜோடியின் வாழ்க்கையை எழுதுகிறேன்...
நம் கதாநாயகன், கோடிகளில் புரளும் கோடீஸ்வரனின் மகன். இளவட்டம்; அபார மூளை. தங்கள் குடும்ப தொழிலை, தன்னுடைய இளம் மூளையை பயன்படுத்தி, மிக, மிக உயரத்துக்கு கொண்டு வந்து விட்டார். இளம் வயதிலேயே அளவுக்கு மிஞ்சிய பணம், புகழ். பிறகென்ன, நட்பு வட்டாரம் சேர கேட்கவா வேண்டும்; ஏகப்பட்ட நண்பர்கள்.
ஹீரோவின் பெயர் அஷ்வத்; சரியான ஜாலி பேர்வழி. கிண்டல், சுண்டல் என, வாழ்க்கை ஜாலியாகப் போக, ஏகப்பட்ட பெண் தோழியர்.
அரசல் புரசலாக மகனின் செய்தி காதில் விழ, உஷாரானார் அப்பா. "மகனைச் சுற்றியுள்ள பெண்கள், அவனை மடக்கிப் போட்டுட்டா என்ன செய்வது...' என பயந்த அப்பா, சாதாரணமான மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த, அப்பாவி பெண்ணை பார்த்து, மகனுக்கு முடிவு செய்தார். "மிஸ் யுனிவர்ஸ்' போன்ற பெண்களுடன் சுற்றித் திரிந்த அஷ்வத், அப்பா சொல்லை தட்டாமல், அப்பிராணி பெண்ணை மணந்தார். இதுதான் நம் ஹீரோவின் சாதனை.
பிறகென்ன, வழக்கம் போல் ஜாலி லைப்தான். "அஷ்வத் பயங்கரமான ஆளு... அவனை முந்தானையில் முடிஞ்சிக்கோ...' என, புகுந்த வீட்டு சமையல்காரி முதல், அனைவருமே ஹீரோயினை எச்சரித்தனர்.
விழித்தாள் ஹீரோயின்; வயிற்றை பயம் சுருட்டி எடுத்தது. மிகவும் ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட ஹீரோயின், பூஜை, புனஸ்காரம், மாமியார், மாமனார், நாத்தனாரை அட்ஜஸ்ட் செய்து போவதில், கில்லாடியாக இருந்தாள்.
அஷ்வத் வெளியில் சுற்றினாலும், அன்பான, எதிர்த்துப் பேசாத, பிரச்னை இல்லாத மனைவியாக இருந்ததால், அவளை மிகவும் நேசிக்க ஆரம்பித்தான்.
"டேய் அஷ்வத்... உன் மனைவி அப்பாவியா இருப்பதால், நீ எங்கு போனாலும், வந்தாலும் கண்டுக்க மாட்றாங்க. நீ கொடுத்து வச்சவண்டா... எங்காளுங்கல பாரு... விடிந்ததும் லேடீஸ் கிளப், ஷாப்பிங், மாதர் சங்கம் என சுத்துறாளுக... பிள்ளைகளை ஒழுங்கா பாக்க மாட்றாளுங்க... பத்தாததற்கு அப்பப்ப போன் போட்டு, "நீ எங்க இருக்க... எவ கூட சுத்துற...' என, பாடாய் படுத்துறாளுக. இவள்களை வச்சிக்கிட்டு ஒருத்திய கூட, "சைட்' அடிக்க முடியல மச்சான்!' என, நண்பர்கள் புலம்பி தீர்த்தனர்.
இதற்கிடையில் அஷ்வத்துக்கு, இரண்டு குழந்தைகள் பிறந்தன. அப்பவும் குடும்பப் பொறுப்பில்லாமல், பிசினசில் மட்டும் சிகரத்தை தொட்டார் அஷ்வத். நம் ஹீரோயினின் தோழிகள், "என்னடீ... உன் கணவர் அப்படி, இப்படின்னு பேசிக்கிறாங்களே... உனக்கு கோபம் வரல... நீ சண்டை போட மாட்டியா? எப்படி இதை எல்லாம் தாங்கிக்கிற...' என்றனர்.
"என்ன செய்ய சொல்ற... எனக்கு எந்த விஷயமும் தெரியாது என உறுதியா நம்புறார். என் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வச்சிருக்கிறார். அதை நான் கெடுத்துக்க விரும்பல... அந்த பயம் அவருக்கு இருக்கட்டும். இதையும் மீறி நான் சண்டை போட்டால் என்னாகும்? " ஆமாம்... வச்சிருக்கேன்...'ன்னு, "முதல் மரியாதை' சிவாஜி ஸ்டைலில் சொல்லிட்டா என்ன செய்வது? என் பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் எல்லாமே, எங்களுடைய சண்டையால் பாதிக்கப்படும். புகுந்த வீட்டில் என்ன பிரச்னை என்றாலும், அதை வெளியே தெரியாமல், மூடி மறைத்து, குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டியது, ஒரு பெண்ணின் கடமை அல்லவா... என்னுடைய ஆத்திரத்தால், என் வாழ்க்கையை நானே அழித்துக் கொள்ள விரும்பவில்லை. என் பிள்ளைகளுக்காக, நான் இந்த தியாகத்தை செய்வதால், இன்று, எங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக போய்கிட்டிருக்கு...' என்றாள்.
"ஏய்... நீயா அப்பாவிப் பெண். கில்லாடி குயின்டி. எப்படி கில்லியா பேசுறா பாரு... நாமளும் தான் இருக்கோமே... எதுக்கெடுத்தாலும் கணவனை சந்தேகப்பட்டு, இல்லாததையும் இருப்பதாக கற்பனை செய்து, சண்டை போட்டு திரிகிறோம்... இது, எங்களுக்கும் ஒரு பாடம் டீ!' என்றனர் மேல்தட்டு மங்கையர்.
அஷ்வத்தின் குணமறிந்து, மிகவும் பக்குவமாக, அன்பாக நடந்து கொண்டதால், இன்று அஷ்வத்தும், "மை ஒய்ப்... மை ஒய்ப்...' என, விழுந்து கிடக்கிறான். மனைவிக்கு மசாஜ் பண்ணுவதென்ன... பணத்தையும், அன்பையும் கொட்டுவதென்ன என, ஆளே மாறி போயிட்டான்.
நண்பர்கள் எல்லாம் ஆச்சரியப்படுவது ஒருபக்கம் இருக்க, "நம்ப மருமகள் எத்தனை சமத்து... எத்தனை நல்லவள்!' என, குடும்பமே, தலையில் வைத்து கொண்டாடுகிறது. இன்று இவர்கள் மிகவும், "சக்சஸ்புல் ஜோடி!'
ஹீரோயின், தன் பிள்ளைகளையும், சில கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளைப் போல, தறுதலைகளாக வளர்க்காமல், நல்ல ஒழுக்கம், பக்தி நிறைந்த, நடுத்தர வீட்டு குழந்தைகளைப் போல் வளர்த்துள்ளது தான், "ஹை-லைட்'டான விஷயமே!
பாருங்கள்... சின்ன வயதிலேயே தன் மகனுக்கு மிடில் கிளாஸ் பெண்ணை தேர்ந்தெடுத்த அப்பா படுகெட்டி என்றால், அப்பாவின் பேச்சை தட்டாமல், "சுமார்' பெண்ணையும், மனமுவந்து ஏற்றுக் கொண்ட நம் ஹீரோ அஷ்வத், பயங்கரமான கெட்டிக்காரனாகத் தெரிகிறார் அல்லவா...
அதிலும், ஏணி வைத்தாலும் எட்ட முடியாத கோடீஸ்வர குடும்பத்தில் மருமகளாக நுழைந்து, கணவரின் சறுக்கல்களை கண்டும், காணாமலும், தன் பிள்ளைகளுக்காக தியாகம் செய்து, கணவரையும் தன் கைக்குள் போட்டுக் கொண்ட நம் ஹீரோயினுக்கு, "சாதனைப் பெண்மணி' பட்டம் கொடுக்கலாம் தானே!
புகுந்த வீட்டில் நுழைய இருக்கும் பட்டாம்பூச்சிகளே... நீங்களும், ஏன் இந்த வெற்றி பார்முலாவை கடைபிடிக்கக் கூடாது? 
— தொடரும்.

ஜெபராணி ஐசக் 
source:dinamalar

--
http://thamilislam.tk

Saturday, October 15, 2011

புலம்பெயர் தேசங்களில் தோற்கடிக்கப்படுமா மாவீரர் நினைவு தினம் ?

 

 

சொலமன் மன்னரின் அவையில் ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு பிள்ளைக்கு உரிமை கோரி இரண்டு தாய்மார்கள் அரசனிடம் நீதி கோரினார்கள். சொலமன் மன்னருக்கோ ஆச்சரியம். ஒரே பிள்ளைக்கு இரண்டு அம்மாக்கள் எப்படி இருக்க முடியும்? என்று அரசவை குழப்பமுற்றது. 

அந்தப் பிள்ளையை நானே பெற்றேன் என்று ஒரு தாயும், இல்லை... இல்லை, அந்தப் பிள்ளைக்கு நானேதான் தாய் என்று மற்றவரும் அடம் பிடித்தனர். முடிவாக, சொலமன் மன்னன் ஒரு தீர்ப்பை வழங்கினான். அந்தப் பிள்ளையை இரு கூறாக்கி, இருவரிடமும் பகிர்ந்து கொடுக்கக் கட்டளையிட்டான்.

போர் வீரன் ஒருவன் வாளை உருவி, அந்தப் பிள்ளையை இரு கூறாகப் பிளப்பதற்குத் தயாரானான். உடனே, ஒரு தாய் மன்னனின் காலில் வீழ்ந்து கதறினாள். 'மன்னா! அது என் பிள்ளையே இல்லை... அதனை அவளிடமே கொடுத்து விடுங்கள்' என்று கதறினாள். மற்றப் பெண்ணோ, மன்னனின் கட்டளையை நிறைவேற்றப்போகும் போர் வீரனின் கையில் பயத்துடன் வீறிடும் குழந்தையையும் பழிவாங்கும் நிறைவுடன் சிரித்தாள். 

மன்னன் எழுந்தான், வீரனைத் தடுத்து நிறுத்தினான். தன் காலில் வீழ்ந்து கதறிய அந்தத் தாயை ஆதரவுடன் தூக்கி நிறுத்தினான். பிள்ளையை அவளிடமே கொடுக்கும்படி கட்டளையிட்டதுடன், மற்றப் பெண்ணைச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான். 

இது இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுச் சம்பவம். அதே போன்றதொரு வரலாற்றுச் சம்பவத்தைப் புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அங்கே, போர் வீரன் கைகளில் அலறிய குழந்தையின் நிலையில்தான் எங்கள் தேசத்தின் ஆன்மாக்களின் மாவீரர் தினம் இன்னொரு கொலைக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கே, அந்தப் பிள்ளைக்கு உரிமை கோரிய இரண்டு தாய்மாரின் நிலையில், இங்கே இரண்டு அணிகள் மாவீரர் தினத்துக்கு உரிமை கோரி, மக்கள் முன் தங்கள் பக்க நியாயங்களைத் தெரிவித்து வருகின்றார்கள். மக்கள் மன்றத்தில் தீர்ப்புக்கான நாள் நெருங்கி வருகின்றது. பெற்றவள் ஜெயிப்பாளா? மற்றவள் ஜெயிப்பாளா? நீதி வெல்லுமா? அநீதி வெல்லுமா? என்று தமிழீழம் மௌனமாக அழுகின்றது. 

முள்ளிவாய்க்கால் வரையிலும், அதற்குப் பின்னர் நடைபெற்ற இரு மாவீரர் தினங்களையும் நாங்களே எழுச்சியுடன் நடாத்தினோம். எங்கள் மீது தவறு இருந்தால் தண்டியுங்கள். அதற்காக மாவீரர்களையும், தமிழ் மக்களையும், தேசியத் தலைவர் அவர்களையும் தண்டித்து விடாதீர்கள் என்று விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் கண்ணீர் விட்டுக் கதறுகின்றன. 
மறு பக்கத்தில், மாவீரர் தினம் எங்களுக்கே உரியது. நாங்கள்தான் அதை நடாத்துவோம் என்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் கே.பி.யினால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தலைமைச் செயலகம் என்ற இரு அணிகளின் கூட்டு உரிமை கோருகின்றது. 

அதற்காக, அவர்கள் சில குற்றச்சாட்டுக்களையும் தமிழ்த் தேசிய தளங்கள் மீது சுமத்துகின்றார்கள். மறு பக்கத்தில், தமிழ்த் தேசியத் தளம் சார்ந்தவர்கள், தேசியத் தலைவரின் அங்கீகாரத்துடனும், அனுமதியுடனும் இவ்வளவு காலமும் மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இதில், குற்றம் காண்பிப்பவர்கள் தேசியத் தலைவர் மீதே குற்றப் பத்திரிகை வாசிப்பது போன்றது என்கிறார்கள். குழுவாக இணைந்து நின்று தமிழ்த் தேசிய தளங்கள்மீது குற்றப்பத்திரிகை வாசிப்பவர்களில் பலர், கடந்த 2010 மாவீரர் தினம் வரையும், அதற்குப் பின்னரும் மாவீரர் தின நிகழ்வு நடைபெற்ற விதம் குறித்தோ, அதில் மாற்றம் தேவை என்பது குறித்தோ தமிழ்த் தேசிய தளங்களுடனோ, அல்லது மக்களுடனோ எந்தக் கருத்துப் பகிர்வும் நடாத்தவில்லை. இவர்கள், தற்போது உள் நோக்கத்தோடும், பின்புல அறிவுறுத்தலுடனும் மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்கும், மக்களைப் பிளவு படுத்துவதற்கும் முயற்சி செய்கின்றார்கள் என்று மக்கள் மத்தியில் பரவலாகக் கேட்பவர்களுக்கு இவர்கள் எந்தப் பதிலும் சொல்வதாக இல்லை. 

மாவீரர் தினம் நடைபெறும் விதம் குறித்த கருத்துப் பகிர்வு உள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு, அதில் மாற்றங்கள் தேவையானால் ஜனநாயக முறைப்படி தீர்மானங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். மாறாக, மாவீரர் தினத்தை நாங்கள்தான் நடத்துவோம். மக்களுக்குக் கணக்குக் காட்டுவோம் என்று கூறுபவர்கள், இந்த வருட பிற்பகுதியில் தாங்கள் நடாத்திய சில விழாக்களின் கணக்குகளை எதற்காக மக்கள் முன் வைக்கவில்லை என்ற கேள்விக்கும் பதில் தரத் தயாராக இல்லை. பிரான்சில் மட்டும், இவர்களால் நடாத்தப்பட்ட 'தமிழர் விளையாட்டு விழா'வில் ஒரு இலட்சம் ஈரோ வரை கிடைத்ததாக இவர்களே தெரிவித்திருந்தார்கள். அந்த ஒரு இலட்சம் ஈரோக்களுக்கு என்ன நடந்தது? என்ற தமிழ் மக்களது ஆதங்கத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. 

ஆகையால், இவர்களது கணக்குப் பார்க்கும் கணக்கில் எங்கேயோ இடிக்கின்றது. மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்காக இந்தக் கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது என்பதே மக்கள் மத்தியிலான பொது அபிப்பிராயமாக உள்ளது. 'தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக...' என்ற இவர்களது கோசமும் மாவீரர் தினச் சிதைவு முயற்சியின் ஒரு அங்கமே தவிர வேறொன்றும் இல்லை என்பதே பலரது அபிப்பிராயமுமாக உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவின்போதும், அதற்குப் பின்னரும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், எத்தனையோ ஊர்வலங்கள், எத்தனையோ நடை பயணங்கள் என தமிழ்த் தேசிய தளத்தில் தொடர்ந்து நடைபெறும் எந்தப் போராட்டங்களிலும் இவர்களது முகத்தைக் காணவில்லையே? தமிழீழ மக்களது விடிவுக்கான, தமிழீழ மண்ணின் விடுதலைக்காக என நடைபெற்ற அத்தனை போராட்டங்களையும் உதாசீனம் செய்த இவர்களா இப்போது போராடப் புறப்பட்டுள்ளார்கள்? என்ற பல கேள்விகளும் மக்கள் மத்தியிலிருந்து எழுப்பப்படுகின்றன. 

கேள்விகள் பல எழுந்தாலும், பிள்ளையைக் கூறுபோடுவதில் குறியாக இருந்த அந்தப் பழிகாரி போலவே, மாவீரர் தினச் சிதைவை நோக்கி இந்தக் குழுவினர் ஆவலுடன் நகர்கின்றனர். இந்த மாவீரர் தினச் சிதைவு முயற்சி தமிழீழ மக்களின் இறுதி நம்பிக்கைக்கு வைக்கப்படும் ஆணி என்பதை யாரும் நிராகரித்துவிட முடியாது. இந்த ஆணி உண்மையாகவே அடிக்கப்படுமானால், சிங்கள தேசத்திற்கான முள்ளைவாய்க்கால் வெற்றி பூரணப்படுத்தப்படும். சிங்கள தேசம் தமிழ்த் தேசியத்தின் இன்னொரு எழுச்சியை எதிர்பார்த்து அச்சப்படாத நிம்மதியைப் பெற்றுவிடும். ஏனென்றால், தமிழீழ மக்களின் உயிர் நாடியாகவும், தமிழீழ விடுதலைக்கான எழுச்சி வேதமாகவும் மாவீரர்களே உள்ளார்கள். 

அதனால்தான், சிங்கள அரசு மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றது. இங்கும், மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்காகக் களம் இறங்கியுள்ளது. இதில் யார் பக்கம் நின்று தமிழ்த் தேசியத்தையும், மாவீரர் கனவையும் தக்க வைத்து, தேசியத் தலைவர் அவர்களது இலட்சியப் பாதையில் பயணிக்கப் போகின்றோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். 

- அகத்தியன்


source:athirvu


--
http://thamilislam.tk

Friday, October 14, 2011

சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான இலங்கையின் ஆவணப்படம்: பிசு பிசுத்துப்போனது !

 

 

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது. நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கேசென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது.

இதனால் தமிழர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்க்கும் வாய்ப்பு இல்லாது போனது. இருப்பினும் சாதூரியமாக 3 தமிழர்கள் அந்த நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அதில் அதிர்வின் நிருபரும் அடங்குகிறார். முதலில் காணொளி காண்பிக்கப்பட்டது. பின்னர் அது குறித்த கேள்விகளை கேட்கலாம் என நேரம் ஒதுக்கபப்ட்டது. சுமார் பிரித்தானிய எம்.பீகளில் 4 பேரே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிலும் அந்த 4 எம்.பீக்களில் மூவர் வெளியே சென்று விட்டனர். 1 எம்.பியோடு இந் நிகழ்வு நடைபெற்றது. சனல் 4 தொலைக்காட்சி பிரிவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை அனுமதிக்கவேண்டாம் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதூரியமாக ஊடுருவி இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் சனல் 4 வீடியோவைத் தயாரித்த தயாரிப்பாளரான பெண் மணி ஒருவர் அங்கே வந்து இலங்கை அரசைக் கேள்விமேல் கேள்வி கேட்டு சிக்கலில் தள்ளினார்.

அவரைத் தொடர்ந்து அதிர்வு நிருபருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக்கு எதிராக நீங்கள் பிறிதொரு காணொளியை படம் பிடித்து காட்டுகிறீர்களே, அதனை மேற்குலக நாடுகளில் காண்பித்து ஆதரவு தேட முனைகிறீர்களே, ஏன் மேற்குலகு சொல்வதைப் போல சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது ? என்று அதிர்வு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதிலைக் கூறாது நழுவிய இலங்கைப் பேச்சாளர், மெளனம் சாதிக்க முன் வரிசையில் அமர்ந்திருந்த கம்சா அவர்கள் அதிர்வின் நிருபரை புகைப்படம் எடுத்து மற்றும் வீடியோவில் பதிவுசெய்து தாம் எல்லாவற்றையும் பதிவுசெய்வது போல மிரட்டினார். இதனையும் பொருட்படுத்தாது அதிர்வின் நிருபர் தொடர்ந்தும் தன் கேள்வியை முன்வைத்தார்.

அதற்குப் பின்னர் மற்றுமொரு தமிழர் எழுந்து தமிழ் பயங்கரவாதிகள் என்று ராஜீவ விஜயசிங்க குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டித்தார். தமிழ் பயங்கரவாதிகள் என நீங்கள் குறிப்பிடுவது அனைத்து தமிழர்களையும் தான் என்ற கருத்துக்கு அமைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து தாம் இவ்வாறு பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக ராஜீவ விஜயசிங்க தெரிவித்தார். சுமார் 150 சிங்களவர்கள் அமர்ந்திருந்த அவ்விடத்தில் 3 தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஒவ்வொரு முறை தமிழர்கள் பேச எழும் போதும் சிஙகவர்கள் கூச்சலிட்டும் நக்கலடித்தும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதை தமது வேலையாக நினைத்துச் செய்தார்கள். அங்கே வந்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக் களங்கள் தயாரிப்பாளரான் பெண் மணி பேச முற்படும்போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டனர். எள்ளி நகையாடினர்.

இறுதியாக இந் நிகழ்வு முடிவுக்கு வரமுன்னர் அனைத்து தமிழர்களும் எழுந்து வெளியே சென்றவேளை அவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிதுக் கொண்டனர். அதிர்வு நிருபர் உட்பட மற்றைய 2வரும் ஒருவாறாக வெளியே வந்து தமக்கு நடந்த அனுபவங்களை மற்றைய செய்தியாளர்களுக்கு பகிர்ந்துகொண்டனர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இலங்கையின் காணொளி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் பிரித்தானிய எம்பீக்கள் தூங்க ஆரம்பித்து விட்டனர். 4 எம்பீகள் மட்டும் சமூகமளித்த நிலையில் அவர்களில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரசின் ஊதுகுழல் பெண் மணி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்க உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 

மொத்தமாகச் சொல்லப்போனால் இலங்கையின் காணொளி நாடகம் பிரித்தானியாவில் பிசு பிசுத்துப் போனது என்பதே உண்மையாகும். 150 சிங்களவர்கள் வந்திருந்தாலும் 3 தமிழர்கள் எழுப்பிய கேள்விகள் சிங்கள அரசின் பேச்சாளர்களை கதி கலங்க வைத்தது என்பதே உண்மையாகும்.

source:athirvu


--
http://thamilislam.tk

Wednesday, October 12, 2011

வளரட்டும் கூகுள்! வாழ்த்துக்கள்!



சென்ற செப்டம்பர் 27ல் கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஏதேனும் சிறப்பு பெற்ற நாளாக இருந்தால், அதற்கேற்ற வகையில் தன் கூகுள் இலச்சினையை வடிவமைத்து வழங்குவது கூகுள் தேடுதளத்தின் சிறப்பாகும். இதனைத் தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கூகுள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டில், தன் பெயரான கூகுள் என்ற சொல்லுக்குப் பின்னர் ஓர் ஆச்சரியக் குறியினை அமைத்து டூடுலாகக் (Doodle) காட்டியது கூகுள் நிறுவனம். (ஆங்கிலத்தில் Doodle என்பது, பொறுப்பின்றி எதனையேனும் கிறுக்கலாக அமைக்கும் சொல்லைக் குறிக்கும்.) அத்துடன் இலச்சினையே மறைக்கும் அளவிற்கு பிறந்தநாள் கேக், அன்பளிப்புகள், தொப்பிகள் மற்றும் பலூன்கள் இருந்தன. இனி, கூகுள் நடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
1998: கூகுள் தன் பிறந்த நாளை செப்டம்பர் 27ல் கொண்டாடினாலும், செப்டம்பர் 15 அன்று தான், கூகுள் தளத்தின் இணையப் பெயர் பதியப்பட்டது. நிறுவனமாக உருவானது செப்டம்பர் 4. இரண்டு முறை இந்த இரண்டு தேதிகளை விலக்கி, கூகுள் தன் பிறந்த நாளை செப்டம்பர் 7ல் கொண்டாடியது. தன் தளத்தில் இதனை ஒரு டூடுலாக அமைத்தது அதன் நான்காவது பிறந்த நாள் (2002) கொண்டாடிய போதுதான். Larry Page and Sergey Brin ஆகிய இருவர் தான், இந்நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தனர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவர், இதில் ஒரு லட்சம் டாலர் தொடக்க முதலீடாகத் தந்தார். 
1999: சில மாதங்களே கார் ஷெட்டில் கூகுள் இயங்கியது. ஜூன் 1999ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக, 2 கோடியே 50 லட்சம் டாலர் மூலதன நிதியைக் கொண்டதாக கூகுள் வளர்ந்தது. 
2000: அதிசயப்படத்தக்க வகையில், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக இயங்கிய யாஹூ நிறுவனம், கூகுளின் சர்ச் இஞ்சினைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்து செயல்படுத்தியது. கூகுள் தளத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 10 கோடியைத் தாண்டியது. இதனைத் தொடர்ந்து தனக்கு வருமானம் ஈட்டித் தரும் AdSense புரோகிராமினைக் கூகுள் தொடங்கியது. 
2001: கூகுள் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இயங்கத் தொடங்கியது. முதல் முதலாக ஜப்பானில், டோக்யோவில் தன் அலுவலகக் கிளையைத் தொடங்கியது. Eric Schmidt இதன் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்று, நிறுவனத் தை வளர்ச்சியில் இமாலய மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
2002: புதிய சேவைகளை இணைத்து இலவசமாகவே வழங்கும் Google Labs தொடங்கப்பட்டது. ஷாப்பிங் தேடல்களுக்கு Froogle உருவானது. தொடர்ந்து Google News தொடங்கப் பட்டது. 
2003: பைரா லேப்ஸ் (Pyra Labs) நிறுவனத்தினை வாங்கி, வலைமனை (Blogs) வசதியைத் தரத் தொடங்கியது. இப்போது கூகுள் புக் சர்ச் (Google Book Search) என்று அழைக்கப்படுகின்ற கூகுள் பிரின்ட்ஸ் வசதி தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான நூல்கள் அதன் டிஜிட்டல் வடிவில் இலவசமாகக் கிடைத்தன.
2004: கூகுளின் தேடல் அட்டவணை பொருட்களின் எண்ணிக்கை (Search Index) 800 கோடியைத் தாண்டியது. கூகுள் ப்ளெக்ஸ் என்ற தன் சொந்தக் கட்டடத்திற்கு கூகுள் தன் அலுவலகத்தினை மாற்றியது. இந்த ஆண்டில் கூகுள் மேற்கொண்ட சிறப்பான மாற்றம், இணைய மெயில் வசதியான, ஜிமெயில் தளத்தைத் தன் ரசிகர்களுக்கு வழங்கியதுதான். இமெயில் சந்தையில் மட்டுமின்றி, மனித குல வரலாற்றிலும், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 
2005: கூகுள் மேப்ஸ் மீது தன் கவனத்தை கூகுள் திருப்பியது. அத்துடன் கூகுள் ரீடர் மற்றும் கூகுள் அனலிடிக்ஸ் என்ற இரு வேறு வசதிகளும் அறிமுகமாயின. Gmail, Blogger and Search ஆகியவற்றின் மொபைல் பதிப்புகளுக்கும் அடிப்படை அமைக்கப்பட்டது. 
2006: யு-ட்யூப் வசதியை வாங்கியது கூகுள் நிறுவனம். கூகுள் மேப்ஸ் விரிவு படுத்தப்பட்டது. கூகுள் டாக்ஸ், ஜிமெயில் ஆகியவற்றின் வாடிக்கையாளர் எண்ணிக்கை புயல் வேகத்தில் உயர்ந்தது. கூகுள் மேப்ஸ் உடன் இணைந்து, கூகுள் தெரு நிலை போட்டோ சேவையினை வழங்கியது.
2008: ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுடன் போட்டியிடும் வகையில், மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. குரோம் பிரவுசரை வெளியிட்டு, பிரவுசர் யுத்தத்தில் முன்னிலை இடம் பிடித்தது.
2009: தேடல், பிரவுசர் மற்றும் ஜிமெயில் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் பயன்படுத்து பவர் அனைவரையும் மடக்கிப் பிடிக்க, தன் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது கூகுள்.
2010: இணைய வெளியில் நீட்டத் தொடங்கிய தன் கரங்கள் தரும் சேவையினைப் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, ஒரு மிகப் பெரிய பலவானாக கூகுள் மாறியது.
2011: மோட்டாரோலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தன் நிறுவனத்தின் சேவைத் தளத்தில் பெரிய விரிவாக்கத்தினை கூகுள் ஏற்படுத்தியது. 
கடந்த 13 ஆண்டு காலத்தில், அனைத்து மக்களின் வாழ்வை எளிதாகவும், பொருள் பொதிந்ததாகவும் மாற்றுவதில் கூகுள் மிகப் பெரிய அளவில் உழைத்துள்ளது. ஒரு சில தவறுகளை கூகுள் ஏற்படுத்தி இருக்கலாம்; ஆனால் அவை தன்னைத் திருத்திக் கொள்ள ஏற்பட்டவையாக கூகுள் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பல வசதிகளை மனித இனத்திற்குத் தந்துள்ளது. "கெட்டதாக இருக்காதே, கெட்டவற்றிற்குத் துணை போகாதே' ("Don't be evil") என்ற தன் இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதில் தன் நேரம் பலம் அனைத்தையும் கூகுள் செலவழித்து வெற்றியும் கண்டுள்ளது. இந்த வெற்றி இனியும் தொடரும் என்ற நம்பிக்கை கூகுள் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, நமக்கும் ஏற்பட்டுள்ளது. வளரட்டும் கூகுள்! வாழ்த்துவோம் அத
னை


--
http://thamilislam.tk
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails