Sunday, October 26, 2008

ஒரிசா சம்பவம்;போலீசார் முன்னிலையில் என்னை கற்பழித்தனர்:கன்னியாஸ்திரி பரபரப்பு புகார்

 
 
lankasri.comஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 25ந்தேதி நடந்த கலவரத்தின்போது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார்.அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறியதாவது:-நான் திவ்யஜோதி சமூக சேவை மையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தேன்.

சம்பவத்தன்று 50-க் கும் மேற்பட்டோர் எங்கள் அலுவலகத்துக்குள் புகுந்து என்னை இழுத்து சென்றனர்.

முதலில் எனது கழுத்தை பிடித்து கோடாரியால் தலையை வெட்டுவதற்கு முயன்றனர்.ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டனர்.எனது பாதி ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக அழைத்து சென்றனர்.ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்படி இழுத்து சென்ற அவர்கள் வழிநெடுக அடித்து உதைத்தனர்.

அப்போது அந்த பாதையில் ஏராளமான போலீசார் நின்றனர்.அவர்கள் என்னை பாதுகாக்க முயற்சிக்கவில்லை.நான் போலீசாரிடம் கெஞ்சினேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.என்னை இழுத்து சென்றவர்களிடம் போலீசார் நட்பாக பேசினார்கள்.பிறகு அவர்கள் என்னை கற்பழித்தனர்.போலீசார் நினைத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224933500&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails