Thursday, October 16, 2008

20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஜெயசூர்யா ஆட்டத்தால் இலங்கை வெற்றி-பாகிஸ்தானை வீழ்த்தியது

 
lankasri.comபாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, கனடா ஆகிய 4 நாடுகள் பங்கேற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கனடாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ் தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. தொடக்க வீரர் சல்மான் பட் 41 பந்தில் 44 ரன்னும், மிஸ்பா உல் ஹக் 23 ரன் னும் எடுத்தனர். அஜந்தா மெண்டீஸ் 3 விக்கெட்டும், மெகரூப், பெர்னாண்டோ தலா 1 விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து 5 விக்கெட்டில் வென்று கோப்பையை கைப் பற்றியது.

ஜெயசூர்யா 34 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்னும், உத்வதே 25 ரன்னும் எடுத்தனர். சோயிப் மாலிக் 2 விக்கெட் கைப்பற்றினார்.

ஜெயசூர்யா ஆட்ட நாய கனாகவும், மெண்டீஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர். லீக் ஆட்டத்தில் தோற்றதற்கு இறுதிப் போட்டியில் வென்று பாகிஸ்தானை இலங்கை அணி பழி தீர்த்துக் கொண்டது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails