Saturday, February 28, 2009

தமிழ்மக்களை ஒட்டுமொத்தமாக கொன்றொழிக்க மகிந்தா கொடுர திட்டம்-திடுக்கிடவைக்கு தகவல்

நிஜமான காட்டுத் தீயையே ஆயுதமாக்கித் தாக்குகிற பயங்கரத் திட்டத்தில் இருக்கிறதாம் இலங்��

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொள்ளும் அராஜக நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகள்தான் இவ்வளவு நாளாகக் காட்டுத் தீயாக நம்மைப் பொசுக்கிக் கொண்டிருந்தது.

ஆனால், நிஜமான காட்டுத் தீயையே ஆயுதமாக்கித் தாக்குகிற பயங்கரத் திட்டத்தில் இருக்கிறதாம் இலங்கை அரசு. விடுதலைப் புலிகள் மட்டுமல்லாதுஸ அப்பாவித் தமிழர்களையும் சேர்த்தே காவுவாங்கக்கூடிய அந்த 'காட்டுத் தீ திட்டம்' குறித்து இலங்கையில் இருக்கும் சிங்களப் பத்திரிகையாளர் சிலர், உலகளாவிய மீடியாக்களின் கவனத்துக்குக் கொண்டுபோகும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

சமீபத்தில் இங்கிருந்து தப்பித்து மதுரைக்கு வந்த இலங்கைப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் தமிழக போலீஸாரால் வளைக்கப்பட்டார். இலங்கைப் பத்திரிகையாளர்களின் போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் அது. அதனால் உங்கள் எண்ணுக்கு வெளிநாட்டில் இருக்கும் வேறு சிலர் மூலமாகத் தகவல்களைச் சொல்கிறோம்ஸ" என அச்சத்தோடு சொன்னார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே பல தரப்பிலிருந்தும் சிங்கள ராணுவத்தின் அடுத்த கட்ட மூவ் குறித்து வந்த தகவல்கள், நம்மைக் குலைநடுங்க வைத்துவிட்டன!

"கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம். அப்போதே புலிகளின் கைவசம் இருக்கும் மொத்தப் பகுதிகளையும் வளைத்து, இரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தது இலங்கை. ஆனால், புலிகள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் ஊடறுப்புத் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவத்தின் டாங்கிப் படைகள் மீது வலிந்த தாக்குதலை நடத்திய புலிகள், அடுத்தடுத்த தாக்குதலில் ராணுவத்தின் 57-வது பட்டாலியனை கூண்டோடு அழித்தார்கள். இந்தக் கோபத்தில்தான் பாதுகாக்கப்பட்ட வளையத்தில் வந்து தங்கிய மக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்திப் பழிதீர்த்துக் கொண்டது ராணுவம். மக்கள் மீதான தாக்குதலை அரங்கேற்றினால்தான், புலிகளின் வேகத்துக்கு அணை போட முடியும் என நினைத்து, ராணுவம் தொடர்ந்து தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்துக்கொண்டு இருக்கிறது.

தற்போது புதுக்குடியிருப்பும், வன்னி காட்டுப் பகுதியும்தான் புலிகளின் வசம் இருக்கிறது. கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவு வரை அதிரடியாகக் கைப்பற்றிக்கொண்டு வந்த ராணுவம், புலிகளின் வசமிருக்கும் மீத பகுதிகளை நெருங்க முடியாமல் இருபது நாட்களுக்கும் மேலாகத் திண்டாடி வருகிறது. இதற்கிடையில் உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தி கோரிக்கை வைத்ததும், 'புலிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டார்கள். எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அவர்களை முடக்கிப் போட்டிருக்கிறோம். இந்த நேரத்தில் எங்களின் பல்லாண்டுக் கனவைத் தகர்த்து விடாதீர்கள்!' என்று சிங்கள அரசு ரகசியத் தகவல்களைப் பரப்பியது. இதனால் உலக நாடுகள் சில காலம் அமைதி காக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தன. ஆனால், சிங்கள அரசு பரப்பிய தகவல்களை நொறுக்கும் விதமாக கொழும்பிலும், கட்டுநாயகாவிலும் விமானத் தாக்குதலை நடத்தி உலகுக்கே தங்கள் பலத்தைச் சொன்னது புலிகள் தரப்பு. இதற்கு பதிலடியாக க்ளஸ்டர் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்திஸ புலிகள், மக்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் சகட்டுமேனிக்கு வெறித்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது ராணுவம். இந்நிலையில் அமெரிக்காவும், ஐ.நா-வும் ஒருசேர போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்த, அவர்களிடம் சில வார அவகாசம் கேட்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த அவகாசத்துக்குள் ராணுவம் அரங்கேற்ற வைத்திருக்கும் திட்டத்தைப் பற்றிய யூகங்கள்தான் மொத்த மீடியாக்களையும் மிடறு விழுங்க வைத்திருக்கின்றன!" என்றவர்கள், அந்த அபாயங்களையும் பட்டியல் போட்டார்கள்.

"வன்னிக் காடுகளுக்குள் அடியெடுத்து வைப்பது தான் சிங்கள ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் புலிகளின் படையணியினர் ராணுவம் முன்னேறும்போதெல்லாம் கடும் தாக்குதலை நடத்தி, ஆயுதங்களையும் அள்ளிச் சென்றுவிடுகிறார்கள். சமீபத்தில் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் அனைத்துமே சிங்கள ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டவைதான். தங்கள் ஆயுதங்களால் தாங்களே அழியும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் ராணுவத்தினர். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது வன்னிக்காடுகள்தான். இங்கிருக்கும் மிருகங்கள், கொடிய ஜந்துக்கள், விஷத் தாவரங்கள் என்று பலவும் ராணுவத் தரப்பை முன்னேறவிடாமல் பயமுறுத்துகிறது. அதனால் வன்னிக் காடுகளுக்குள் புகுந்து, புலிகளை அழிக்கும் திட்டத்தை ஒருபோதும் ராணுவத்தால் செயல்படுத்த முடியாது என்பது உறுதியாகிவிட்டது.

தற்போது புலிகளோடு ஆயிரக்கணக்கான மக்களும் வன்னிக் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புலிகளோடு கைகோத்துப் போரில் ஈடுபடுவார்கள் என உறுதியாக நினைக்கும் ராணுவம், ரசாயன குண்டுகள் மூலமாகத் தாக்குதல் நடத்தும் முடிவில் இருக்கிறது. மீடியாக்களை மொத்தமாக முடக்கிவிட்டு, ரசாயனத் தாக்குதல் நடத்தி, ஒரு சில தினங்களிலேயே லட்சக்கணக்கான மக்களை பஸ்பமாக்கும் திட்டம் ராஜபக்ஷேவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர் 'புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது இருப்பது வெறும் எழுபதாயிரம் மக்கள்தான்' என்று பொய்யான தகவலை மீடியாக்களிடமும் உலக நாடுகளிடமும் தெரிவித்தார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சரான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்திலும் வாசித்தார்.

வன்னிப் பகுதியில் இரண்டரை லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என செஞ்சிலுவை சங்கம் சொல்லி இருக்கிறது. ஆனால், வெறும் எழுபதாயிரம் மக்களே இருப்பதாகச் சொல்லப்படும் தகவலின் பின்னணியில்தான் சிங்கள ராணுவத்தின் சதிக்கான ஒரு முனை மறைந்து கிடக்கிறது. ரசாயன குண்டுகளைப் பயன்படுத்தியோ, காட்டுத் தீயை உருவாக்கியோ லட்சக்கணக்கான மக்களையும் புலிகளையும் ஒருசேர அழிக்க நினைக்கிறது ராணுவம். ரசாயன பாதிப்புகள் உலக நாடுகளையே கொந்தளிக்க வைத்துவிடும் என்பதால், இப்போது காட்டுத் தீ திட்டத்தை கையில் எடுக்கப் பார்க்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க பல நாட்கள் ஆனது போல, வன்னிக் காடுகளின் தீயை அணைப்பதும் சுலபமான காரியமாக இருக்காதுஸ" என்றார்கள் கவலை கொப்பளிக்க.

இதற்கிடையில், "ஜெர்மனியிலும் ருவாண்டாவிலும் நடந்த கொடூரங்களைக் காட்டிலும் எமகாதகக் கொடூரத்தை அரங்கேற்ற சிங்கள ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. அத்தகைய அபாயங்கள் அரங்கேறிவிடாமல் தடுக்க வேண்டும்!" என்று கோரி ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க, ரஷிய நாட்டுத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி, 'தமிழினத்தைக் காப்பாற்றுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் வைகோ உள்ளிட்ட ஈழ ஆர்வலத் தலைவர்கள்.

ஐம்பது, நூறு என அனுதினமும் ஈழத்தில் தமிழர்கள் மடியும் துயரம் போதாதென, ஆயிரக்கணக்கான மக்களை ஒருசேர அழிக்கிற முடிவில் இருக்கும் சிங்கள அரசை யார் கண்டிப்பதுஸ யார் தண்டிப்பது? இந்த கண்ணீர்க் கேள்விக்கு காலத்தின் பதில், மௌனமாகத்தானே இருக்கிறது!

 

http://www.tamilnews.dk/index.php?mod=article&cat=srilankannews&article=11892

கிளர்ந்தெழுவாய் மானுட சமுதாயமே!

 27/02/2009


தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கையின் உள்நாட்டுப் போரில் கடந்த டிசம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இப்பொழுது நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் கொலை செய்யப்படுவதை ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன. ஒருவர் குண்டடிப்பட்டு மரணமுற்றால் குறைந்தது ஐந்து பொது மக்கள் படுகாயம் அடைவார்கள் என்பது பொதுவானக் கணக்கு.

வன்னிப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெறும் தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கொல்லப்பட்டிருப்பது மூவாயிரமாக இருப்பின் மொத்தம் 15 ஆயிரம் பேர் காயப்பட்டிருக்க வேண்டும்.

நார்வே அரசாங்கம் முன்னின்று உருவாக்கிய போர் நிறுத்தத்தை முதலில் முறித்துப் போட்ட பின் தங்கள் சொந்த விருப்பத்தினால் இந்த போரை இலங்கையின் ராஜபக்ஷ அரசு நடத்துகிறது. தங்கள் கோரமான உருவத்தை மறைத்துக் கொள்ள புலிகளின் ஆபத்துக்கு எதிரான யுத்தம் என்ற புகை மண்டலம் ஒன்று இன்றைய இலங்கை அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. தமிழ் மக்களை முற்றாக அழித்து ஒழிப்பதற்கு இதை விடவும் வசதியாக வேறு எதுவும் இருக்க முடியாது. நீதிசார் சமூகத்தின் நியதிப்படிப் பார்த்தால் வெறி கொண்டு போரை நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசுதான் போர் தந்த பெரும் துயரங்கள் அனைத்துக்குமான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதனை ஏற்கவில்லை என்பது மட்டுமல்லாது கருணை கொண்டு உதவி செய்ய வருபவர்களையும் இலங்கை அரசு அச்சுறுத்தி விரட்டியடிக்கிறது என்பது தான் வேதனைக்குரியது.

மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து ஒரு குறுகிய இடத்தில் வாகனங்களும் பொது மக்க ளுமாகக் குவிந்து கிடக்கின்றனர். இந்த மக்கள் மூன்று லட்சம் வரை இருக்கலாம். பெரும் போராட்ட வாழ்வில் ஈழத்தமிழ் மக்கள் அரைப்பட்டினி வாழ்க்கைக்கு பழகியவர்கள் தான் என்ற போதிலும் முழுப்பட்டினியில் எத்தனை நாட்கள் தான் இவர்களால் உயிருடன் இருக்க முடியு ம்?  இதைத் தவிர குடி நீருக்காகவும் கழிப்பிட வசதிகளுக்காகவும் இந்த மனிதக் கூட்டம் சந்திக்கும் அவதியை விவரிப்பது சுலபமானதாகத் தெரியவில்லை.

2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதிக்குப் பின்னர் எந்த உணவுப் பொருளும் மருந்துப் பொரு ளும் வன்னிப்பகுதிக்குப் போய்ச் சேரவில்லை என்று ஐ.நா.வின் மேற்பார்வையில் செயல்படும் அமைப்புகள் கூறுகின்றன. உலக உணவு திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருள்கள் அங்கு செல்வதற்கும் இலங்கை அரசு முற்றாக தடை விதித்துவிட்டது. தமிழகத்திலிருந்து திரட்டி அனுப்பப்பட்ட பொருள்களில் ராணுவத்தினர் களவு எடுத்தது போக மீதி ஒரு சிறுபகுதி மட்டும் மக்களுக்குப் போய் சேர்ந்ததாகத் தெரிகிறது. விமான எறிகணை குண்டு வீச்சுத் தாக்கங்களில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் காக்கைக் கூட்டத்தைப் போல கத்திக் கத்திப் பார்க்கிறார்கள். பயன் எதுவுமில்லை. கொல்லப்பட்ட மக்கள் சாலையோரங்களில் அப்படியே கிடக்கிறார்கள்.

காயப்பட்டவர்களின் உயிர்காக்கும் மருத்து வமனைகளும் மனிதர்களைப் போலவே குண்டு களுக்கு இரையாகி மரணமுற்றுக் கிடக்கின்றன. புதுக்குடியிருப்பு பகுதியின் மருத்துவ மனையில் குண்டுகள் போடப்பட்டு 62 நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை புலம் பெயர்ந்த தமிழர்களின் தன்னார்வ உணர்வில் கட்டப்பட்ட நவீன வசதிகளைக்கொண்ட மருத்துவமனை. இது குண்டுகளுக்கு இலக்காகி முற் றாக அழிந்து கிடக்கிறது. மருத்துவமனை குண்டுகளுக்கு இலக்காகி பாழ்பட்டு போன பின்னரும் மருத்துவர்களும்இமருத்துவத்துறைச் சார்ந்த பணியாளர்களும் மிகுந்த மன உறுதி யுடன் ஆதரவற்ற மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுடன் 600 பேருக்கு உடனடியாக வெளியே றும் அதிரடி உத்தரவு இலங்கை அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் உயிர் இழப்பைப் பற்றி கவலை கொள்ளாத மனிதநேயம் கொண்ட மனித உயிர் காக்கும் மருத்துவத் துறையினரை அச்சுறுத்தி வெளியேற்றுதல் எத்தகைய கொடூரமான செயல். மனிதக் கேடயமாக பயன்படுத் தப்பட்ட மக்களை மீட்டு விட்டோம் என்று கூறிக்கொள்ளும் அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மக்களின் நிலை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஒரே குடும்பத்தைப் பிரி த்து இளைஞர்களை தனியாக அழைத்துச் சென்று கொல்லுவதாகவும் பெண்கள் பாலியல் பலா த்காரத்தில் சிதைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இதனை இல்லை என்று மறுக்கும் தார்மிகம் இலங்கை அரசுக்கு இல்லாமல் போய்விட்டது. காரணம் உள்நாட்டு வெளி நாட்டு ஊடகங்கள் அங்கு சென்று நேரில் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் சர்வதேச அமைப்புகளும் அங்கு அனுமதிக்கப்படுவதும் இல்லை.

மோதல் நிறைந்த உலகு என்று சிலப் பகுதிகளை இன்று சர்வதேச சமூகம் மதிப்பிட்டு வைத்து ள்ளது. இவைகளில் முக்கியமானவை ஆப்கானிஸ்தான் ஈராக் காங்கோ ஜனநாயகக் குடியரசு சோமாலியா இலங்கை போன்ற நாடுகள் ஆகும். இந்த நாடுகளிலேயே மிகவும் கூடுதலான மனிதப் பெருங்கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நாடு இலங்கை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மதிப்பிட்டுச் சொல்கின்றன. ஆயுத மோதல் தீவிரம் அடைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்று சர்வதேச விதிகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வளையங்கள் என்று அறிவித்தப் பகுதிகளில் தயக்கம் எதுவும் இல்லாமல் மக்கள் மீது குண்டு போட்டுக் கொல்லும் கொடுமையை இலங் கையின் ராணுவம் இப்போது செய்து கொண்டிருக்கிறது.

இறந்து போன மனித உடலை கெளரவத்துடன் அடக்கம் செய்தல் மானுடத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்று. இதைக்கூட இனவெறி பகைமையுடனேயே இலங்கை அரசு அணுகுகி றது. பெரும் தீமையாய் சுற்றிச் சுழன்றாடும் போரின் நெருப்பு தின்று முடித்த மனித உடல்கள் வன்னிப்பிரதேசம் எங்கும் கருகிப் போய்க்கிடக்கின்றன. இறந்து போன உடல்களுக்கு இறுதி கெளரவம் அளிப்பதற்கு அங்கு யாரும் மிச்சமாக இல்லை. நாளாக நாளாக இந்த உடல்களும் அழுகத் தொடங்கி விடுகின்றன. யாராக இருந்தாலும் இவர்களை கெளரவமாக அடக்கம் செய்வ தற்கு அல்லது பொறுப்பானவர்களிடம் ஒப்படைப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கம் இது நாள் வரை பொறுப்பேற்று செயல்பட்டு வந்தது. கபடம் மிகுந்த இலங்கை அரசு பொய்க் காரணங்களைக் கூறி அவர்களை இன்று கட்டாயமாக வெளியேற்றிவிட்டது. இதற்கு இலங்கை அரசு சொல்லும் காரணம் தான் நமக்கு பெரும் அருவெறுப்பைத் தருகிறது.

வன்னிப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் செஞ்சிலுவைச் சங்கம் மாதம்தோறும் 2500 சவப்பை களை தங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து பெற்று வந்தன. இந்த மாதம் 3500 சவப்பைகள் வேண்டும் என்று இது கடிதம் எழுதியிருக்கிறது. இலங்கை ராணுவத்திற்குத் தெரியாமல் பொது மக்கள் கொல்லப்படுவதை வெளி உலகிற்கு அறிவிக்கும் சதி என்று சங்கத்தை வெளியேற்றி யுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்தக் குற்றத்தை எவ்வாறு மன்னிக்க இயலும்?

தமிழகத்தில் கொதிநிலை அடைந்துள்ள மக்களின் பேரெழுச்சியும் புலம்பெயர்ந்த ஈழத்து மக்களின் சமரசமற்றப் போராட்டங்களும் புவிப்பரப்பெங்கும் அதிர்வுகளை எழுப்பியுள்ளன. இதற்குரிய கண்டனத்தை உலகில் பல நாடுகள் மிகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளன. அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய உலகம் ஜப்பான் முதலான நாடுகள் இந்த மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டித்துள்ளன. இதைப் போன்றே ஐக்கிய நாடுகளின் பல்வேறு துணை அமைப்புகளும் செஞ்சிலுவைச் சங்கமும் இதற்கான எதிர்ப்பை தெரிவித்துப் பார்த்துவிட்டன. உலக சமூகத்தின் இந்த வேண்டுகோள்களை அடங்கா திமிருடன் இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

மனிதர்களில் ஈரமில்லாத நெஞ்சு இருப்பவர்களைப் போலவே சில நாடுகளும் இருக்கின்றன. இவர்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் தனது சொந்த ஆதாயத்துக்காக பிறருக்கு எத்தகைய தீமை யையும் செய்யக் கூடியவர்கள். முதலில் அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் சுற்றி இருப்ப வர்களை அச்சுறுத்திப் பார்ப்பார்கள். பின்னர் மக்களின் பொது வீரத்தை மழுங்கடிக்க வைக்கும் தந்திரங்களின் மூலம் சமூகத்தை தங்கள் உலகத்தின் ஆளுமைக்குள் கொண்டுவர முயற்சி செய்வார்கள். நெஞ்சில் ஈரமில்லாத மனிதர்களைப் போலவே நெஞ்சில் ஈரமில்லாத நாடு என்றுதான் இலங்கையை அழைக்க வேண்டும்.

புரூஸ்பெயின் என்ற புகழ்பெற்ற அமெரிக்க வழக்கறிஞரின் கணக்குப்படி ராஜபக்ஷ ஆட்சி கால த்தில் 3700 பேர் சட்டத்துக்குப் புறம்பாக கொல்லப்பட்டுள்ளார்கள். 30 ஆயிரத்துக்கும் அதிகமா னவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். அங்கு நடைபெறும் ஆட்சியை ஒரு ஜனநாயக ஆட்சி என்று எப்படிக் கூற முடியும்? ராணுவ சர்வாதிகாரம் காட்டெருமையைப் போல அனைத்து ஜனநாயக மரபுகளையும் தனது காலில் போட்டு மிதித்துக் கொண்டே ஒரு சுயநல வெறிபிடி த்தக் குழுவின் உத்தரவின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் கள் மட்டுமே தான் இந்த உயர் நிலைக்குழுவில் அங்கம் பெறமுடியும். இத்தகைய இலங்கை இறையாண்மையின் மீது யார்தான் நம்பிக்கை வைக்க முடியும்? ராஜபக்ஷவை உலக நீதிமன் றம் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். வெட்கமற்று ஒரு மறைமுகமாக யுத்தத்தை நடத்திக்கொண்டே உள்நாட்டுப் போரை முடித்தவுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை ராஜபக்ஷ தருவார் என்கிறது இந்தியா. இவர்களை எவ்வாறு நம்புதல் இயலும்.

முழு மானுடமும் ஒன்றுபட்டு கிளர்ந்தால் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலையை சாத்தியப்படுத்த முடியும். இதற்கு மாறாக அரசியல் தீர்வு அளிக்கும் பொறுப்பை இலங்கையின் ராஜபக்ஷவிடம் அவர் ஆக்கபூர்வமான எதையும் முன் வைக்க மாட்டார்.


சி.மகேந்திரன்

 

http://www.tamilkathir.com/news/1097/58//d,full_view.aspx

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது:ஜாமீனில் வெளியே வாராத வகையில்

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை
இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப்பேசவந்த இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதாக புதுச்சேரி போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே சீமான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் நடந்த ஈழதமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார்.

புதுச்சேரி போலீசார் சீமானை கைது செய்வதற்கு தமிழக போலீசாரின் உதவியை நாடியது.

தமிழக சட்டசபையில் சீமான் ஏன் இன்னும் கைதாகவில்லை என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, இன்னும் 2நாட்களுக்குள் கைதாகிவிடுவார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவரை கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் விரைந்துவந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்.

புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. அச்சமயம், தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார்.

அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் ஆஜரானார். நெல்லை காவல்துறை ஆணையர் சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி நீதிமன்றத்தீர்ப்பின் படி அங்கே காலாப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.

பாளையங்கோட்டையில் பேசியபோதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நெல்லை போலீசாரும் சீமான் மீது வழக்கு தொடர்ந்தது.

க்ரைம் நம்பர் 308/2009, இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது

 

http://www.swisstamilweb.com/

Friday, February 27, 2009

ஐநாவிலிருந்து வேளியேறிவிடுவோம்:ஐநா,மற்றும் அமேரிக்காவுக்கு இலங்கை கடும் எச்சரிக்கை

எமது பிரச்சினையில் ஐ.நா. தலையிட முயன்றால் அங்கத்துவத்திலிருந்து வெளியேறி செயற்படவேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர்
ஐக்கி நாடுகள் சபை பலாத்காரமாக எமது பிரச்சினையில் தலையிட முனைந்தால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி இலங்கை சுயாதீனமான நாடாகச் செயற்படும் தீர்மானத்தை இலங்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

சுயாதீனமான நாடுகளை ஆக்கிரமித்து மனிதப் படுகொலைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க செனற் சபையில் ஆராயப்பட்டதுடன் ஐ.நா. போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருவது தொடர்பில் ஹெல உறுமய கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துகையிலேயே அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

நாடில்லாது நாடோடிகளாகத் திரிந்தவர்கள் செவ்விந்தியர்களை விரட்டியடித்து பலாத்காரமான ரீதியில் அமெரிக்காவை உருவாக்கினார்கள்.இவ்வாறானவர்கள் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கேலிக்கூத்தாகும்.

பல தசாப்த காலங்களாக எமது நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலி பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் இறுதித் தறுவாயில் நாம் இருக்கின்றோம். இந்தச்சூழ்நிலையில் அமெரிக்கா எமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தகக்கூடாது.

அப்பாவித் தமிழ்மக்களை பணயக்கைதிகளாக பிரபாகரன் பிடித்து வைத்துள்ளார். அவர்களை மீட்டு ஜனநாயகத்தை வழங்கவே இலங்கை அரசாங்கம் போராடி வருகின்றது. அம்மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் யுத்த சூனியப் பிரதேசங்களையும் அறிவித்துள்ளது.

அமெரிக்காவும், ஐ.நா.வும் ஏனைய நாடுகளும் அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அதைவிடுத்து இறையாண்மை உள்ள எமது நாட்டுப் பிரச்சினையில் பலாத்காரமாகத் தலையிட முனையலாகாது.

இராஜதந்திர ரீதியிலான அமெரிக்காவின் நட்புறவை நாம் வரவேற்கின்றோம். அதைவிடுத்து பலாத்காரத்தைப் பிரயோகிக்க முனைந்தால் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.

ஐ.நா.வுக்கும் இதே செய்தியையே தெரிவிக்க விரும்புகின்றோம். பலாத்காரம் பிரயோகிககப்பட்டால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி தனித்துவமான சுயாதீனமான இராஜ்ஜியமாக இலங்கையை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

 

 

கடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்படை!-27/02/2009

கடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்படை!

27/02/2009

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த  வாரம்     மூழ்கடித்திருக்கிறார்கள்.கடந்த 8 ஆம் திகதி         முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் -ஆழ்கடற் பரப்பில் இந்தத் தாக்குதல நடைபெற்றிருக்கிறது.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் 30ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலி ல் கடற்படையினரின் 'அரோ' ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர ரோந்துப் படகுகள் கடற்பு லிகளால் மூழ்கடிக்கப்பட்டன.அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதி, கடற்படையின்    P-434 இலக்க அதிவேகத் தாக்குதல் படகு கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.இந்தத் தாக்குத ல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை. கடற்புலிகளின் பலத்தை முறியடிப்பதற்கு கடல் நடவடி க்கைகள் மட்டும்  போதாது    என்று, தரைவழி     நடவடிக்கைகளை         இராணுவம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தான் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

 

மூன்றுவாரங்களுக்குள் கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும்,   இரண்டு அரோ ரக கரையோர ரோந்துப் படகுகளும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.கடற்புலிகளின் பலம் பற்றிய கேள்விகளை இந்தத் தாக்குதல்கள் எழுப்ப வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல் லை.இப்போது இந்தத் தாக்குதல்கள் பற்றியும் இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்.

முதலாவது தாக்குதல் கடற்கரும்புலிகள் இருவரால் நடத்தப்பட்டது.கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் - கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ரோந்து சென்று கொண்டிருந்த போது தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.இரவு 11.28 மணியளவில் கரும்   புலிகளின் தாக்குதல் படகு, கடற்படைப் படகுக்கு அருகே சென்று வெடிக்கும் வரை - கடற்புலிக ளின் நகர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.இந்தத் தாக்குதலில் கடற்படையின் 4 வது இலக்க அதிவேகத் தாக்குதல் படகு முற்றாகச் சேதமடைந்ததுடன், படையணியின் கட்டளை அதிகாரியான லெப். கொமாண்டர் அபேசிங்கவும் பலியானார்.அத்துடன் லெப். பெரேரா மற் றும் P-434 கடற்படைப் படகின் கட்டளை அதிகாரியான லெப். சம்பத் உள்ளிட்ட மொத்தம் 19 கடற்ப டையினர் கொல்லப்பட்டனர்.கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை அடுத்து கடற்படை முழு நேர மும் உசார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற்கரும்புலிகளின் படகு ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.அது கடற்படையினரின் கண்  ணில் பட்டுவிட அதைத் தாக்கியழித்தனர். இதில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைய நேரிட்டது.ஆனால், அதேதினம் முல்லைத்தீவுக் கடலில் ரோந்து சென்ற கடற்படையின் சிறப் புக் கொமாண்டோ அணியினரின் 'அரோ' கரையோர ரோந்துப் படகுகளை கடற்புலிகள் வழிமட க்கித் தாக்குதல் நடத்தினர்.15 வரையான கடற்படைப் படகுகள் கொண்ட அணியை வழிமறித்த இந்தத் தாக்குதல் காலை 10 மணியளவில் இடமபெற்றிருந்தது.இதில் இரண்டு 'அரோ' வகை கரையோர ரோந்துப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகப் புலிகள் கூறியிருந்தனர்.ஆனால், கடற் படையோ இது பற்றி மூச்சுக் கூட விடவில்லை.

இதன் பின்னர் தான் கடந்த 8ஆம்திகதிமுல்லைத்தீவுக் கடலில் மற்றொரு அதிகவேகத் தாக்கு தல் படகைக் கடற்கரும்புலிகள்   மூழ்கடித்திருக்கிறார்கள்.  இந்தச் சண்டை 8 ஆம் திகதி அதி காலை 5.30 மணி  முதல் 6 மணி வரை நடந்திருகிறது.     கடற்கரும்புலிகளோடு கடற்புலிக ளின் அணியும் சண்டையில் பங்கேற்றிருக்கிறது.இதில் கடற்படையின் ஒரு   'சுப்பர் டோறா' மூழ்கடிக்கப்பட்டதாகவும், மற்றொன்று பலத்த சேதத்தக்கு உள்ளானதாகவும்   புலிகள் கூறியுள்ளனர். இந்தப் படகில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும், 4 கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்ததாகவும் புலிகளின் தகவல்கள் கூறுகின்றன.இதை ஒரு வலிந்த தாக்குதல் என்று புலிகள் கூறியுள்ளனர்.ஆனால், முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவுக்குச் சென்று அவர்கள் வலிந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஏனெனில், கடற்படை முல்லைத்தீவைச் சுற்றி இப்போது நான்கு கட்டங்களாகப் பாதுகாப்பு வல யங்கள் அமைத்து தமது வெவ்வேறு விதமான 50 இற்கும் அதிகமான   போர்க்கலங்களை நிறுத் தியிருக்கிறது.அதுவும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள    கரையோரப் பகுதியானது - சாலைக் குத் தெற்கேயும் வட்டுவாகலுக்கு வடக்கேயுமாக 15 கி.மீ பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக் கிறது.இந்த நிலையில் கடற்படையால் கடற்புலிகளின் நகர்வுகளைத் தடுப்பது இலகுவான காரி யமாகவே இருக்கிறது.ஆனாலும், கடற்புலிகள் முல்லைத்தீவுக் கடலில் அடுத்தடுத்து தாக்குத ல்களை நடத்தி வருகின்றனர்.

கடற்படையின் 4 கட்டப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முதலாவதாக கரையோர ரோந்துப் படகு கள் மூலமும், அடுத்ததாக அதிவேகத் தாக்குதல் படகுகள் மூலமும், அதையடுத்து பீரங்கிப் பட குகள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.கடைசியும் நான்காவதுமான கண்காணி ப்பு வலயத்துக்கு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.கடற்புலிகள் வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு கரையோர ரோந்துப் படகுகள் அதிகளவில் கரைக்கு நெருக்கமாக வே நடமாடுகின்றன. அதற்கடுத்து கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவு வரையில் அதி வேகத் தாக்குதல் படகுகளின் நடமாட்டம் இருக்கிறது.அதற்கு அப்பால் பீரங்கிப் படகுகள், ஆழ் கடல் ரோந்துப் படகுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து சென்று கடற்புலிகள் வலிந் ததாக்குதல் நடத்த முற்படுவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

 

http://www.tamilkathir.com/news/1095/58//d,full_view.aspx

முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்

உக்கிரமடைகின்றது வன்னிப் போர்; முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
 
இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை தெரிவித்துள்ளதாவது:
புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 

 

Breaking News:விடுதலை புலிகள் சுட்டு வீழ்த்திய வான்படையின் விமானம்

சிறீலங்கா வான்படையின் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது


சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் உத்தியோகபூர்லமாக எதுவித அறிவித்தலும் விடவில்லை.

 

இதேவேளை பாதுகாப்பு ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளிடம் விமானத்தை சுட்டுவீழ்த்தக்கூடிய ஆயுதவல்லமை இல்லை எனவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

மேலதிக விபரங்கள் விரைவில்....

 

http://www.pathivu.com/news/534/54/.aspx

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் கெட்டதை விட்டுவிடவும்:ஏபிஜே.அப்துல்கலாம்

 ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்:அப்துல்கலாம்

மங்களூர் மங்களாதேவி டெம்பிள் ரோட்டில் உள்ள கார்பரேசன் வங்கி தலைமை அலுவலகத்தில் `நானும், எனது சமுதாயமும்' என்ற தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார். மங்களூரில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்துல்கலாமிடம் மாணவ-மாணவிகள் சரமாரியமாக கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு எல்லாம் அவர் நிதானமாக பதில் அளித்தார்.

அப்போது, ஸ்லம் டாக் மில்லினர் படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது பற்றி உங்களது கருத்து என்ன?என்று மாணவர்கள் கேட்டதற்கு,

''அந்த படத்தின் கதை மூலம் ஒரு நல்ல கருத்தை சொல்லி உள்ளனர். அந்த கருத்துக்கு கிடைத்த பரிசு தான் இவை. அந்த படத்தில் கெட்டது இருந்தால் அதை விட்டு விட வேண்டும். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

 

 

மீண்டுமொரு 87-க்காக காத்திருந்த இந்தியாவின் முகமும், முகமூடியும் - தாரகா

 

 

india_faceதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மகிந்த நிர்வாகத்தின் யுத்த நிகழ்சி நிரலின் பின்னால் இந்தியா இருப்பதொன்றும் இரகசியமானதல்ல என்ற நிலைமை இப்போது வெள்ளிடைமலையாகிவிட்ட ஒன்று.

ஆனாலும் இந்தியா தான் அணிந்திருக்கும் முகமூடியையே முகமாக காட்டி வருகின்றது.

இந்தியாவின் ஈழம் தொடர்பான அணுகுமுறை தொடர்பில் இதற்கு முன்னரும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அவற்றை இங்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளை படிப்படியாக சிறிலங்கா படைகள் கைப்பற்றியிருப்பதும், அதற்கு சகலவிதங்களிலும் இந்தியா ஒத்துழைப்பும் ஆலோசனைகள் வழங்கி வருவது குறித்துமே இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலைமையானது ஏலவே இந்தியா கடைப்பிடித்து வந்த இலங்கை தொடர்பான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

முன்னர் இந்தியாவின் விடுதலைப் புலிகள் தொடர்பான அணுகுமுறை தொடர்பில் அபிப்பிராயம் தெரிவித்து வந்தவர்கள் சிலர் இந்தியா முழுமையாக விடுதலைப் புலிகளின் அழிவு குறித்து அக்கறை கொள்ளவில்லை என்றும், ஆனால் அவர்களை பலவீனப்படுத்துவது குறித்தே அக்கறை கொள்கின்றது என்ற வகையான அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் இலங்கையின் அரசியலில் செல்வாக்குச் செலுத்த முடியாதளவிற்கு உருச்சிதைந்து போனால், சிறிலங்காவை கட்டுப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டை இந்தியா இழந்துவிட நேரலாம் என்ற அர்த்தத்திலேயே இவ்வாறான அபிப்பிராயங்களை அவர்கள் தெரிவித்திருக்கலாம்.

ஆனால் இன்று களநிலைமைகளை உற்று நோக்கினால் இந்தியா மகிந்தவின் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்தொழித்துவிட வேண்டுமென்ற முனைப்பிற்கு உறுதுணையாக இருப்பதாகவே தெரிகிறது.

குறிப்பாக 87 போன்றதொரு நிலைமைக்காக இந்தியா காத்திருப்பது போன்றே தெரிகிறது.

விடுதலைப் புலிகள் புதுக்குடியிருப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பல இராணுவ நோக்கர்களும் அபிப்பிராயப்பட்டு வரும் சூழலில்,

இந்தியாவின் சார்பில் பேசி வரும் இந்திய அதிகார மட்டத்தினர் பலரும் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக கூறி வருவதையும் இந்த இடத்தில் நாம் நினைத்துக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பின் பின்னணி என்ன என்று பார்ப்போம்.

கடந்த மாதம் (05.01.2009) டீடீஊ தமிழ் சேவைக்கு கருத்துத் தெரிவித்த தெற்காசிய விவகாரங்களுக்கான ஜவர்கால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சகாதேவன், இந்திய கொள்கை வகுப்பு தொடர்பில் ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, தற்போதைய நிலையில் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழல் இல்லை என்றும், அவ்வாறனதொரு கொள்கை முன்னெடுப்பினை மேற்கொள்ளக்கூடிய அரசியல் தலைவர்கள் எவரும் இந்தியாவில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக இப்போதைய இலங்கை தொடர்பான கொள்கைகளை அதிகாரிகளே திட்டமிடுவதாகவும் அதற்கு ஏற்பவே அனைத்தும் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதே சகாதேவன் முன்னர் கொழும்பில் பங்கு கொண்ட ஒரு கருத்தரங்கின் போது, இந்தியா தொடர்பில் குறிப்பிட்டிருந்த சில விடயங்களையும் இங்கு குறித்துக் கொள்வோம்.

தமிழீழம் உருவாகுவது இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகள் வலுப்படுவதை துரிதப்படுத்தி விடும் என்றவாறான அச்சங்கள் இந்தியாவிற்கு இல்லை என்றும் அது பிழையான வாதம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரம் தற்போது இந்தியா கடந்த கால அனுபவங்களில் இருந்தே இலங்கையின் அரசியல் விடயங்களை அவதானித்து வருகின்றது.

தன்னால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பதில் இந்தியாவிடம் தெளிவு உண்டு என்றும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கள் சில வருடங்களுக்கு முன்னர் அவரால் தெரிவிக்கப்படதாகும்.

ஆனால் இன்று, இந்தியா நடந்து கொள்வதை கருத்தில் கொண்டு பார்த்தால் அவரது கணிப்பு முற்றிலும் தவறானதாக இருக்கின்றது.

பொதுவாக இந்தியாவின் இலங்கை தொடர்பான அதிலும் குறிப்பாக தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளைச் செய்வோர், இந்தியாவின் ஆளும் கட்சியை கருத்தில் கொண்டு தமது கணிப்புக்களைச் செய்யாமல் பொது நிலையில் இந்திய மத்திய அரசு என்ற அடிப்படையிலேயே தமது கணிப்புக்களைச் செய்கின்றனர்.

இதன் காரணமாகவே அவர்களது கணிப்பு சிக்கலுக்குள்ளாகின்றது.

இந்தியாவின் மத்திய ஆட்சி காங்கிரஸ் தலைமையில் இருக்கும் போது ஈழத் தமிழர்கள் தொடர்பில் காட்டப்படும் தீவிரம், மத்தியில் ஆள்வது பாரதிய ஜனதாவாக இருக்கும் போது அதேயளவு தீவிரம் காணப்படுவதில்லை.

இந்தியா தொடர்பான மதிப்பீடுகளின் போது இந்த வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

(பாரதிய ஜனதா வந்தால் தமிழீழம் தந்துவிடுமென்பதல்ல இதன் அர்த்தம்) ஆனால் சகாதேவன் இந்திய கொள்கை வகுப்பு தொடர்பில் குறிப்பிட்;டிருக்கும் விடயம் சரியானதென்றே நினைக்கிறேன்.

சகோதேவன் வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும் தற்போது இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பினை முன்னெடுக்கும் அந்த அதிகாரிகள் நாராயணன் போன்றவர்கள் என்பதுதான் முக்கியமான விடயம்.

87 காலப்பகுதியில் ஐடீ என அழைக்கப்படும் உளவு அமைப்பான ஐவெநடடபைநவெ டீரசநயர இன் பணிப்பாளராக இருந்தவர்தான் தற்போதைய இந்திய பாதுகாப்பு ஆலோசகரான நாராயணன் என்பதையும், அன்று உள்நாட்டு பாதுகாப்பு அலுவல்களுக்கு பொறுப்பாக இருந்தவர்தான் தற்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்பதையும் குறித்துக் கொள்வோம்.

அதாவது, முன்னர் இலங்கை விடயத்தில் பங்குகொண்ட குறிப்பாக ராஜீவ் கால அரசியலை கையாண்ட அனுபவம் கொண்டவர்கள் பலர் இணைந்துதான் தற்போதைய இலங்கை யுத்தம் தொடர்பான இந்திய அணுமுறைகளை திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த பின்புலத்தில் பார்த்தால் தற்போது மகிந்த நிர்வாகத்தினால் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் உக்கிர யுத்தத்தை, நாம் மேலே பார்த்த வகையான இந்திய அதிகார வர்க்கம் ராஜீவ் கால அரசியலை தொடர்வதற்கான வாய்ப்பாக கருதுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது.

சந்தேகம் என்பதற்கு அப்பால் இதுதான் சரியான கணிப்பென்றே நான் கருதுகிறேன்.

தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க தலைமை பற்றி குறிப்பாக கருணாநிதியின் அரசியல் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் நாராயணன் போன்றவர்கள் அதற்கு ஏற்பவே இலங்கை தொடர்பான கொள்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழகம் மிகவும் தீவிரமான எதிர்ப்பலைகளை வெளிப்படுத்திய போதும் அதனை கருத்தில் கொள்ளாமல் இந்திய மத்திய அரசு இருப்பதற்கு மேற்படி அதிகார மட்ட கொள்கை முன்னெடுப்பே காரணமாகும்.

இந்த அதிகார மட்டத்தினருக்கு ராஜீவின் மனைவியும் காங்கிரஸ் தலைவியுமான சோனியாவின் முழுமையான ஆதரவு இருப்பதாகவே நாம் கணிக்கலாம்.

மேற்படி அதிகாரப் பிரிவினர் சோனியாவை பயன்படுத்துகின்றனரா அல்லது சோனியா இவர்களை பயன்படுத்துகின்றாரா என்பது பற்றி தெளிவான கணிப்பினை செய்ய முடியாதுள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் இருந்தது போன்று றோவின் முழு இயக்கமும் சோனியாவின் கட்டுபாட்டில் இருக்கிறதா என்ற கேள்வியையும் இந்த இடத்தில் நாம் கேட்டுக்கொள்ள முடியும்.

இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட இந்திய வெளி விவகாரங்களுக்கான புலனாய்வு அமைப்பும், இந்திய வெளியுறவுக் கொள்கையை திட்டமிடும் அமைப்புமான றோ (சுநளநயசஉh யனெ யுயெடலணiபெ றுiபெ - சுயுறு) இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்டதாகும்.

1968 இல் உருவாக்கப்பட்ட றோ இந்திராவின் ஆட்சிக்காலத்தில்; அவரது ஆட்சி நலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தியாவின் இன்றைய இலங்கை தொடர்பான அணுகுமுறையில் சோனியாவின் குடும்பம் சார்ந்த உணர்வுகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால், இந்த அணுகுமுறை இந்தியாவின் ஒட்டுமொத்த அணுகுமுறையல்ல என்பதை தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பாக்கிஸ்தான் இருக்கின்றது என்பது நிரூபணமான பின்னரும் கூட, ஒருவகையில் அதனை மன்னிப்பது போன்று நடந்து கொள்ளும் இந்திய காங்கிரஸ் தலைமை, விடுதலைப் புலிகள் விடயத்தில் மிகத் தீவிரமான வெறுப்பைக் காட்டுவதானது ஒருமித்த கொள்கை என்பதை விட ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பங்கள் செல்வாக்குச் செலுத்துவதையே குறித்து நிற்கிறது.

இன்றைய இந்திய அணுகுமுறையின் உள்ளடக்கமாக இரு விடயங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

ஓன்று ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் விடுதலைப் புலிகளை மீண்டுவர முடியாதளவிற்கு அழிப்பது குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரனை இல்லாதொழிப்பது.

இரண்டு 87 இல் இந்தியாவிற்கு பெருத்த அவமானத்தை குறிப்பாக இந்தியாவின் றோ செயற்பாட்டாளர்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்திய தோல்வியை சரிக்கட்டுவது.

அதாவது, ஈழத் தமிழர்களுக்கு பொருத்தமான தீர்வென அன்று ராஜீவ் முன்மொழிந்த தீர்வை மீளவும் உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்துவது.

இதில் முக்கியமான புள்ளி, விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது புலிகளால் கட்டமைக்கப்பட்டு பேணப்பட்டு வந்த நடைமுறை அரசை (னுந - கயஉவழ - ளவயவந) இல்லாதொழிப்பதாகும்.

குறிப்பாக நோர்வேயின் மத்தியஸ்தத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்தை தீர்வு எதனையும் நமது தேசத்திற்கு கொண்டு வராவிட்டாலும், பிறிதொரு வகையில் புலிகளால் பேணப்பட்டு வந்த நடைமுறை அரசை சர்வதேச மட்டத்தில் பிரபல்பயப்படுத்தியதுடன் அதற்கான இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் பங்காற்றியிருக்கின்றது.

பேச்சுவார்த்தை காலப்பகுதியில் தமிழர் தேசம் அடைந்த நன்மை என்றும் இதனைச் சொல்லலாம்.

ஆனால் இந்த விடயத்தை இந்தியா கூர்மையாக அவதானித்திருக்கின்றது என்பதை நாம் கணித்திருந்தோமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றே.

அதேவேளை, கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கமும் புலிகளால் பேணப்படும் நடைமுறை அரசை எவ்வாறாயினும் அழித்தொழித்து விட வேண்டுமென்பதில் குறியாகவே இருந்தது.

அதற்கானதொரு பொருத்தமான நபர் என்ற வகையிலேயே மகிந்தவின் பின்னால் கொழும்பு அணிதிரண்டது.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக கணிப்பிட்ட இந்தியா பொருத்தமான சந்தர்ப்பம் பார்த்து களமிறங்கியது.

சுருக்கமாக சொல்வதானால் கொழும்பு தனது நோக்கத்தை இந்தியாவின் மூலமும், இந்தியா தனது நீண்ட நாள் இலக்கை குறிப்பாக ஆளும் காங்கிரசின் இலக்கை கொழும்பின் மூலம் நிறைவு செய்வதற்கான முயற்சிதான் தற்போதைய தீவிர யுத்தம்.

ஆனால் இந்தியா தாராளமாக வழங்கி அவரும் அறிக்கைகளின் படி ஏலவே தோல்வியடைந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியுமா? இது பற்றி பிறிதொரு ஆய்வில் விரிவாக பார்ப்போம்.

 

http://www.nerudal.com/nerudal.1052.html

Thursday, February 26, 2009

லாப்டாப் கணினிகள் உபயோகிப்பவர்களா நீங்கள்:உங்களுக்கு ஒரு எச்சரிக்கை

கையடக்கக் கணினிகளால் உடலின் உறுப்புகளுக்கு பெரும் பாதிப்பு எச்சரிக்கை !

pycalswnrlcat0e3j5cag7267gca73agdscamwqswwcaxwp49ecaca3wj5can9zts6caxifeg0cacafs1ecaslyw4bcai00qbncaje63hecascqz61casb5edjca6nuhnkcaypwq4nகையோடு எடுத்துச் சென்று பாவிக்கும் லாப்டாப் கணினிகள் பாவனையாளருக்கு பல்வேறு உடலியல் சுகயீனங்களை ஏற்படுத்துவதால் இவற்றை தொடர்ந்து ஒரு நாளைக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பாவிக்க வேண்டாமென உடலியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தோள்பட்டை, கழுத்து, கை விரல்கள், முழங்கை, கை மூட்டுக்களில் சேதம் விளைவிக்கும் கருவிகளாக இவை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

http://www.nerudal.com/nerudal.1117.html

சிறுநீர் கழித்தவருக்கு $1,000 அபராதம்

 சிறுநீர் கழித்தவருக்கு $1,000 அபராதம்

 பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால், டாக்ஸி ஓட்டுநர் யாங் டென்ங் ஹுவாட்டுக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றத்திற்கு விதிக்கப்படும் அபராதங்களில் இதுவே ஆக அதிகமாகும். யாங் டென்ங் ஹுவாட், பாசிர் பாஞ்சாங் சாலையில் கடந்த ஆண்டு ஜூன் 27ம் தேதி சிறுநீர் கழித்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தன் டாக்ஸியிலிருந்து இறங்கிய யாங், ஒரு மின்சார பெட்டியின் பின்புறத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது அப்பக்கமாக காரில் சென்ற மற்றொரு ஆடவரும் அவரின் உறவினரும், கத்தினர்.
ஆனால் அவர்களை யாங் பொருட்படுத்தவில்லை.
டாக்ஸி எண்ணை எழுதிக்கொண்ட அந்த ஆடவர், மூன்று நாட்கள் கழித்து, நில போக்குவரத்து வாரியத்திடம் புகார் செய்தார்.
இந்த புகார், தேசிய சுற்றுப்புற முகவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

ஈழத்தமிழருர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் 20 பேர் தீக்குளிக்க முயற்சி

 



புதுக்கோட்டை அருகே தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் 20 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அப்பகுதியின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசை ஆனந்த் தலைமை தாங்கினார்.  (புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். இது புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)

திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவன்னண், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இடம்பெற்ற தட்டிகள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றிருந்தன. இந்த தட்டிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கூட்ட அமைப்பாளர்களிடம் கூறினார்கள்.

அப்போது கூட்டத்திற்கு தலைமை வகித்த விசை ஆனந்தின் தலைமையில் 5 பேர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக கூறினார்கள். இதையடுத்து போலீசார் அமைதியானார்கள்.

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி தலைமையில் காவல்துறையினரே பிரபாகரன் படம் இடம்பெற்றிருந்த தட்டிகளை, அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தேமுதிக பிரமுகர் மன்மதன் தலைமையில் 15 பேர் பொதுக்கூட்ட மேடையிலேயே மண்ணெண்ணெயை தங்களின் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.

இதையடுத்து தட்டிகளை அகற்றுவதை போலீசார் கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தமிழீழ விடுதலைப்புலிகளும் ,இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகளை மீறுகின்றன

இலங்கை அரசாங்கமும் துணைக்குழுக்களும் மனித உரிமைகளை மீறுகின்றன: அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மீறிவருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை அரசாங்கத்துடன் இயங்கும் துணைக்குழுக்களும் மனித உரிமைகளை மீறுகின்றன என தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்பட்டு வரும் ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களே இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கொலைகள், கடத்தல்கள் மற்றும் கைதுகள், காணாமல் போதல் போன்ற நடவடிக்கைகள், யாவும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் இடம்பெறுவதால், அரசாங்கமே இந்த சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் பிரதேசங்களில் உளவாளிகளாக செயற்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கொலை செய்தல் மற்றும் கடத்திச்செல்லல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது பிரதேசத்தில் ஆட்களை தடுத்து வைத்தல், பேச்சு சுதந்திரமின்மை, ஊடக சுதந்திரமின்மை மற்றும் சிறுவர்களை படைகளுக்கு சேர்த்தல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dvj0q0ecQG7r3b4P9Ei4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

புதுக்குடியிருப்பு:திணறுகிறது இலங்கை ராணுவம்

     
 
 

altஇலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை ராணுவம் திணறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையின் வடக்குப் பகுதியில் மிகவும் குறுகிய பரப்பளவுக்குள் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராணுவம் தெரிவித்தது. ஆனால் புலிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ராணுவம் முன்னேறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

புதுக்குடியிருப்பு என்ற பகுதி மட்டுமே புலிகள் வசம் தற்போது உள்ளதால், அதை தக்கவைப்பதற்கு அவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

 

இந்நிலையில் கொம்புவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை கடும் சண்டைக்குப் பிறகே ராணுவம் அப்பகுதியை பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்காக இதுவரை நடந்த சண்டையில் விடுதலைப் புலிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறிய ராணுவம், அவர்களின் எதிர்ப்பை சமாளிக்கமுடியாமல் திணறுகிறது.

 

ஆனால் அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மெதுவாக முன்னேறிவருவதாக ராணுவம் கூறுகிறது.

 

ஆனையிறவு அருகே உள்ள சலாய் என்ற இடத்தில் நடந்த சண்டையில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளதை இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

 

பலமட்டாளம் என்ற இடத்தில் புலிகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

http://www.swissmurasam.net/2008-10-17-05-11-45/12488-2009-02-26-10-02-15.html

Wednesday, February 25, 2009

விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள்

ஈழ மக்களை பாரிய அழிவுக்குள்ளாக தள்ளிக்கொண்டிருக்கும்  லங்கை அரசாங்கம் தன்னுடைய மனிதக்கொலைபாதகத்தை உலகம் பார்க்ககூடாது என்பதாற்காக புலிகள் மீது பல குற்றச்சாட்டுகளை எழுப்பிவருகிறது.அதில் ஒன்றுதான் விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயற்சி 
 
 
மேலும் வாசிக்க
 
 
மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்ய புலிகள் முயற்சி – அரசாங்கம்
மோசமான அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய இரசாயன ஆயுதங்களை சர்வதேச ஆயுத சந்தையில் கொள்வனவு செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செலயாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

தெர்மோபெரிக் எனப்படும் மிக மோசமான ஆயுதம் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை கொள்வனவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெர்மோபெரிக் ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் குறித்த பிரதேசத்தில் பாரிய தீப்பிழம்பு ஏற்படும் எனவும் சுற்று புறத்தில்காணப்படும் ஒட்சிசனின் அளவு வீழ்ச்சியடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான ஆயுதங்களின் மூலம் யுத்த களத்தில் பாரிய அழிவுகள் ஏற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைபேசி உரையாடல் மற்றும் வேறும் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்டதன் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை விரும்பவில்லை எனவும், குறித்த யுத்தநிறுத்த காலத்தில் தமது படைபலத்தை விரிவுபடுத்தவே முனைவதாக அவர்
தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் குறித்து முழுமையான கருத்து வெளியிட முடியாது எனவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் இது குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bP9ES34d3IWnT3b02r7GQe4d24YpDce0ddZLuIce0dg2hr2cc0vj0q3e

சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்

 
 
உதயன் மற்றும்  சுடரொளி செய்திதாள்களின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன்  இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்
கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்தவர்களால் பலாத்காரமாக வித்தியாதரன் கடத்திச்செல்லப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்
 
கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
 
அருகில் இருந்தோர் தடுத்தபோதும் அவர்களை தடுத்து விட்டு விசாரணைக்கு அழைத்துசெல்லவேண்டும் எனக்கூறியே  வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dvj0q0ecQG7r3b4P9EE4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e

புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

ஸ்ரீகாந்த்-நமீதா ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், `இந்திர விழா.' இந்த படத்தை கே.ராஜேஷ்வர் டைரக்டு செய்து இருக்கிறார்.  படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது.

விழாவில், கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ''ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரகுமானை பாராட்டி, உலகமே எழுந்து நின்று கை தட்டுகிறது. இந்திய திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, தமிழ் திரையுலகுக்கு வந்து இருக்கிறது.

உலக திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இந்திய திரையுலகுக்கு வந்து இருக்கிறது.

மலேசிய தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில், வேறு ஒரு பாடலை பாடினார்கள். இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ``நீராரும் கடலுடுத்த'' என்ற பாடலை அவர்கள் பாடவில்லை.

``நீராரும் கடலுடுத்த'' பாடலில், இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டு இருக்கிறது. அதை உலக தமிழன் எப்படி பாடுவான்? இந்த சிக்கலை தீர்க்க உலக தமிழர்களுக்காக, புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதப்போகிறேன்.

அந்த பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் சம்மதித்து இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.
 

விடுதலைப்புலிகளை ஒழித்துவிடுவோம் என்ற இலங்கை அரசின் கனவு பலிக்காது

விடுதலைப்புலிகளை ஒழித்துவிடுவோம் என்ற இலங்கை அரசின் கனவு பலிக்காது: வீரமணி



விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என்று இலங்கை அரசாங்கம் காணும் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மை என்றும், இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை உள்பட அனைத்து நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கையில், ஈழத் தமிழர்களை, தீவிரவாதத் தடுப்பு என்ற ஒரு பொய்க் காரணத்தைக் கொண்டு, பூண்டோடு அழிக்கவும், சொந்த நாட்டிலேயே அவர்களை நிரந்தர அகதிகள் முகாமில் கட்டாய வேலை செய்ய வைக்கும் கொத்தடிமைகளாக்கிடவுமான ஒரு நிலையை இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது ராணுவமும் அன்றாடம் செய்து வருகின்றன!

அங்கு நடைபெறுவது பச்சையான இனப்படுகொலைதான் என்பதை உலக நாடுகள் தங்களது கண்களை அகலமாகத் திறந்துகொண்டு பார்ப்பதோடு, இந்தப் போர் நிறுத்தப்பட்டு, அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, துரித முடிவு காணவேண்டும் என்பதை அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட அய்ரோப்பிய நாடுகள், அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன்

ஆகியோர் வெளிப்படையாகக் கூறியும், இலங்கை ராணுவம் தனது போரை நிறுத்தாமல், விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம், அழித்துவிட்டோம்! என்று கூறி, நாளும் ஆயிரக் கணக்கில் தமிழர்களைப் பலியாக்கி வருகிறது.


நேற்றுகூட இலங்கைப் போர் குறித்து, அய்ரோப்பிய கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அய்ரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளது.


விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா, அழைக்கவில்லை என்றாலும், தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளது அமெரிக்கா.

தொப்புள்கொடி உறவுள்ள நமது தமிழ்நாடு இந்திய யூனியனின் ஒரு முக்கிய மாநிலம். தமிழ் மக்கள் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில், இரு தரப்பும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் தமது உரையில் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பேச்சாளர் போர் நிறுத்தத்தினை ஏற்று பேச்சுவார்த்தைக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்து, கேலி பேசி, அவர்கள் தோல்வியால் இப்படி கூறுகிறார்கள் என்று கூறும் இலங்கை அரசுதானே இப்போது சண்டித்தனம் செய்கிறது. விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என்று அவர்கள் காணும் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மை!

அவர்கள் கொரில்லா முறையில் ஈடுபட்டால், இலங்கை அரசுக்கு எப்போதும் நிம்மதியோ, வெற்றியோ இருக்காது!

இந்தத் தோல்வி   குழப்பங்களால் வெறிபிடித்து அலையும் இலங்கை அரசும், இலங்கை இராணுவம் "கொத்து குண்டுகளை" வீசி கூட்டம் கூட்டமாய் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

ஏவுகணைமூலம் வீசப்படும் இக்குண்டுகள் சிறியவை; அதில் 2 ஆயிரம் குண்டுகள் வரை உள்ளே வைக்கப்பட்டு வீசப்படுகின்றன. என்னே கோரம்! எவ்வளவு கொடுமை! அய்.நா. உரிமை விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் சர் ஜான் ஹோம்ஸ் இலங்கையில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். வவுனியா பகுதியில் இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார்.

அப்படி ஆய்வு செய்த நிலையில் அவர் கூறியுள்ளார்: அகதிகளாக வாழும் அப்பாவித் தமிழர்களின் நிலைமை கவலை யளிப்பதாக இருக்கிறது. அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? அகதிகளாக அடக்கப்பட்டுள்ள மக்களுக்குக்கூட தேவையான உதவிகளை, வசதிகளை இலங்கை அரசு செய்யவில்லை என்பது விளங்க வில்லையா?

எந்த வகையிலும் ஈழத் தமிழர்களை ஒழிப்பது, அல்லலுக்கு ஆளக்குவது என்பதுதான் அந்த அரசின் வெறிபிடித்த நோக்காக இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டால், அங்கு என்ன செய்யப்படவேண்டும் என்கிற எண்ணமும், உணர்வும் ஏற்படாமல் போகாது. இத்தோடு தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கிட அய்க்கிய நாடுகளின் சபையும், வேறு சில நாடுகளும் முயற்சிக்கின்றன; இது மறைமுகமான இன அழிப்பு முயற்சியாகும். விடுதலைப்புலிகள் தான் அவர்களை மனிதக் கேடயங்களாக்கி வெளியேற அனுமதிக்காமல் தடுக்கிறார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் செய்கின்றது இலங்கை அரசு.

அதனை மற்ற நாடுகளும் சிந்தனா சக்தி சிறிதுமின்றி கிளிப்பிள்ளைப்போல பேசுகின்றன!

சர்வதேசப் பார்வையாளர்கள் முன்னிலையில் தமிழர்களை ஒப்படைக்கத் தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளாரே தமிழர்களைக் கேடயமாக விடுதலைப்புலிகள் வைத்திருந்தால் இப்படி கூற முன்வருவார்களா?

விடுதலைப்புலிகள் சில ஆயிரங்களே உள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது; பல லட்சக்கணக்கில் சுமார் 3 முதல் 4 லட்சம் தமிழர்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து நிறுத்துதல் (மனிதக் கேடயமாக) இயலுமா? ஒருபோதும் முடியாது. அந்த மக்கள் அங்கேயே சொந்த மண்ணிலேயே தங்களது வாழ்க்கை அழிந் தாலும் பரவாயில்லை என்றெண்ணித்தானே இருக்கிறார்கள்!

இருதரப்பில் ஒரு தரப்பு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு முன்வரும்போது, ஏற்காதவர்கள்மீதுதானே உலக நாடுகள் உரிய பொருளாதாரத் தடை, புறக்கணிப்பு, உதவிகளை நிறுத்தி வைத்தல் போன்ற கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறவேண்டும்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவைத் துணைக் குழு, நிலைமைகளை விளக்கியபோது அவர்கள் அதைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து உதவுவதாக சொன்ன முறையில் உண்மையான ஆதரவு நிலவரம் இருந்தது.

அதன் ஒரு பிரதிபலிப்பு தென் மாநிலங்களில் ஈழத் தமிழருக்கு மருந்து, உணவு முதலிய பொருள்களை காங்கிரஸ் கட்சி வசூலிக்கவேண்டும் என்ற அவரது அறிவிப்பை, நாம் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம்!

அவருக்குள்ள மனிதநேயம் ஆட்சியில் உள்ள சில அதிகாரிகள், சில அமைச்சர்களுக்கு இல்லாதது மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது. காரணம், இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளாக அவர்கள் இருப்பதே!

அங்கு விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டு அரசியல் தீர்வு என்பது ஏமாற்று வித்தை; எவரும் ஏற்கவே முடியாது! நடைமுறை சாத்தியமும் அல்ல.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4063

அமெரிக்காவில் அவமானப்பட்ட இலங்கைப் படைகள்

  


"ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது...."

 

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....

அங்கே ஒரு பிரச்சினை...

என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..

ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...

காட்டுக்குள் ஓடி விடும்..

இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......

உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் சிறப்புப் படைகள் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...

வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியல....

புலியின் அட்டகாசமும் குறையவில்லை. கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது. அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே.......

ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி அனுமதி அளிக்கப்பட்டது....

இலங்கை முப்படைகளும் அமெரிக்க காட்டுக்கள்...

நாள்கள் மாதங்களாயிற்று...

மாதங்கள் வருடங்களாயிற்று..

போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து... இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டுபடைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. கீழே இலங்கைப் படையினர் அப்பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர் "ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி" உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்.

ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர். அதற்கு பன்றி "பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான்பண்றாங்க" என்றது சிரித்தவாறு......

- ஆதவி

 

http://www.tamilkathir.com/news/1075/58//d,full_view.aspx

இதை சொல்வது சிறிலங்கா அரசின் தொலைக்காட்சி:விசுவமடுவில் கடுமையான மோதல்

விசுவமடுவில் கடுமையான மோதல்: சொல்வது சிறிலங்கா அரசின் தொலைக்காட்சி
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிற்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசுவமடுவுக்கு அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தை படையினர் கைப்பற்றி விட்டதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்று பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு ஒளிபரப்பான 'ரூபவாஹினி' செய்தியில் விசுவமடுவில் மோதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான செய்திகளை அரச தொலைக்காட்சி ஒளிபரப்புவதுடன் சில திரிபுபடுத்தப்பட்ட காட்சிகளை காண்பிப்பதாகவும் வன்னி கள நிலைமைகளை நன்கு தெரிந்த வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Tuesday, February 24, 2009

முக்கிய செய்தி:பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் திடீர் ரத்து.

கொழும்பு பயணத்தை தவிர்த்தார் முகர்ஜி
 
 
 
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார்.
முகர்ஜி மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இறுதித்தருணத்தில் அவரின் பயணம் ரத்துசெய்யப்பட்டிருப்பதாக "எக்கனோமிக் ரைம்ஸ்' தெரிவித்தது.
பயங்கரவாதம், பொருளாதார, நிதிஒத்துழைப்பு போன்ற விவகாரங்களுக்கு சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் முன்னுரிமை கொடுத்து ஆராயப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக இந்திய வெளிவிவகார இணையமைச்சர் ஈ அஹமட்டே கலந்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டில் முகர்ஜி கலந்து கொள்ளாதமைக்கு உள்நாட்டு அரசியல் சூழ்நிலையே காரணமென கருதப்படுகிறது.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இடம்பெறுகிறது.
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசு தூர விலகி நிற்கும் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் அவர்களின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக தமிழக கட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் தினமும் முன்னெடுத்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல கட்சிகளும் அமைப்புகளும் பல்வேறு வகையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்குமாறு இறைமையுள்ள மற்றொரு நாட்டிடம் இந்திய அரசால் வலியுறுத்த முடியாது என்று பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் இந்தியப் பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பது தமிழக கட்சிகளிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பாக அதிகமான வேலைப்பளுவாலேயே முகர்ஜி கொழும்புக்கு வருகை தருவது ரத்து செய்யப்பட்டிருப்பதாக டில்லிச் செய்திகள் தெரிவித்தன.
அதே சமயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாமெஹ்மூட் குரேஷியும் கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்.

 

 

ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று துடித்துக்கொண்டிருக்கிறோம்

ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று துடித்துக்கொண்டிருக்கிறோம்:வைகோ பேச்சு


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரையில் வக்கீல்கள் தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வக்கீல்களை தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர்  ராமதாஸ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.

மாலை 5 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசும்போது,


''தமிழீழ மக்களின் துன்பத்தை தவிர்க்க உறக்கத்தில் இருக்கும் தாய் தமிழகம் விழிக்காதா என்று நினைத்த நேரத்தில் தொப்புள்கொடி உறவினரான சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது.

எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது.

 அது இன்று ஐ.நா.சபையிலும் எரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக 4 மாதங்களாக போராட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் இருந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்பிரமணியசாமி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை.

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முட்டைகளை வீசி உள்ளனர். தேனி மாவட்டத்தில் 400 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன் உயிர்பிழைக்க மாட்டானா என்று அவனது தயார் போல நாமும் எப்படி ஏங்கினோம்.

அதேபோல இலங்கையில் தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று நாங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறோம். சென்னை ஐகோர்ட்டில் கற்களே இருக்காது.

போலீசாரே திட்டமிட்டு மூட்டை, மூட்டையாக கற்களை கொண்டு வந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்காப்புக்காக வக்கீல்களும் தாக்குதலில் ஈடுபட்டதில் தவறில்லை.

வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
 

எந்த நாட்டின் நிர்பந்தத்திற்கும் அடிபனிந்து யுத்த நிறுத்தம் அறிவிக்க முடியாதாம்-இலங்கையின் தெனாவெட்டு

எந்த நாட்டின் நிர்பந்தத்திற்கும் அடிபனிந்து யுத்த நிறுத்தம் அறிவிக்க முடியாதாம்: ரட்னஸ்ரீ விக்ரமநாயக்க.
 



 
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் செல்லுமாறு பல நாடுகள் அரசாங்கத்தகை கேட்டுள்ளன என்பதனை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாராகவில்லை என்பதனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (24.02.2009) தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் வாசிக்க‌
 
 
 

 

 
 

புலிகளின் குரல் வெளீயீடு:24.02.2009 நடந்த ஏறிகணைத்தாக்குதல்

002 001
002 001
 
 
002 003
 
002 003 new
 
 new
002 002
 
 

 
00002 006 new
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

002 004
002 004 new

002 005
002 005 new


 

002 007
002 007 new

002 008
002 008 new


 

002 010
002 010 new

002 011
002 011 new


 

002 013
002 013 ne
 
 
w
 
002 009
002 014
002 014 new
 
 
 
002 012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடைசி செய்தி: சிறிலங்காவும், புலிகளும் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி

புதுக்குடியிருப்பு நகரை பிடிக்க முனையும் சிறிலங்காவும், தடுத்து தாக்கும் புலிகளும் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது டிவிசன், 58 ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன.
 
கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப் பீட வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்தன.
 
இன்று மூன்றாவது நாளாக -
 
புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான கடும் ஐந்து முனை தாக்குதலில் சிறிலங்கா படையினரும், அவர்களை எதிர்கொண்டு கடும் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் தொடர்ந்தும் கடும் சமரில் ஈடுபட்டுள்ளன.

 

 

தமிழின அழிப்பை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும்

தமிழின அழிப்பை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும்:ராமதாஸ்

 

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் ராணுவத்தினரை கண்டித்தும், சென்னையில் வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், மதுரையில் மாவட்ட வக்கீல்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று மாவட்ட கோர்ட்டு முன்பு சங்கத் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் பேசிய பிறகு ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது,

''இலங்கையில் தற்போது தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த பிரச்சினையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கூறி வருகிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தமிழர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த பிரச்சினையில் இலங்கை அரசு என்ன சொல்கிறதோ அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது.

2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க., பா.ம.க. உட்பட 15 கட்சிகள் கையெழுத்திட்டு இருந்தோம். ஆனால் அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை பிரச்சனை தொடர்பாக நான் டெல்லியில் சோனியாகாந்தியை 35 நிமிடம் சந்தித்து பேசினேன். அவர் ஆர்வத்துடனும், இரக்கத்துடனும் இலங்கை தமிழர் பிரச்சினையை கேட்டறிந்தார். அதன் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப்முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார்.

ஆனால் நான் அவரை சந்திப்பதற்கு முன்பே அவர் வெளியிட்ட அறிக்கை 7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்து விட்டது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக 60 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதில் 30 ஆண்டுகள் சாத்வீகமாகவும், 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தி.மு.க., பா.ம.க. உட்பட பல கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது.

இலங்கையுடன் வெளியுறவு கொள்கையை வகுக்கும்போது எங்கள் கருத்துக்களை கேட்காமல் வகுக்கக்கூடாது. தமிழக முதல்வரை கலந்து பேசாமல் இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது. ஏனென்றால் ஜனாதிபதி உரைக்கு முரண்பாடாக பிரணாப் முகர்ஜியின் அறிக்கை அடுத்த நாளே அமைந்து விட்டது.

இலங்கையில் தற்போது தினமும் 100 பேர் வரை பலியாகி வருகிறார்கள். இப்போது நடக்கும் போர் தமிழ் இன அழிப்பு போராகும். இதை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்புதான் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும்.

இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பத்தான் போலீசார் ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி வழங்க மறுக்கப் படுகிறது. எனவே 27-ந்தேதி போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி கேட்டு உள்ளோம்.

இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க முதல்-அமைச்சர் கலைஞர் தலைமையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறினோம். ஆனால் அவர் நாங்கள் நாடகம் ஆடுவதாக கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற் காகத்தான் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று தெரிவித்தார்.

 

http://www.paristamil.com/tamilnews/?p=29519

புலிகள் புதுக்குடியிருப்பு நகரையும் இழந்துவிட்டார்கள்?

புதுக்குடியிருப்பு நகரினை கைப்பற்றி விட்டதாக கேகலிய தெரிவிப்பு
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெல,
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடுமையான மோதலின் பின்னர் புதுக்குடியிருப்பு நகர் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது என கூறினார்.
தற்போது புதுக்குடியிருப்பு நகரில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை அண்டிய கிராமங்களை கைப்பற்றும் முயற்சியில் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மோதல்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் இரண்டு உடலங்களை படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

 

http://www.swisstamilweb.com/

Monday, February 23, 2009

ஈழத்தமிழர்களுக்கு இஸ்ரேல் கற்றுத்தரும் பாடம்

 

israel_flagஅரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து,இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது.

இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக்காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் டேவிட் பென் கூரியன், இந்த தீர்மானம் மீதான விவாதத்தை எப்படியாவது இழுத்தடிப்பது என்று தீர்மானித்தார்.

விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்ததற்கு அடுத்த நாள், வீரச்சாவடைந்த அமெரிக்க இராணுவத்தினரை நினைவு கூரும் நாள்.

அன்றைய நாள் நிச்சயம் ஐ.நா. சபை கூடாது என்பது பென் கூரியனுக்கு தெரிந்திருந்தது. அவரது திட்டத்தின் பிரகாரம் காரியங்கள் நடந்தன. வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிற்போடப்பட்டது. இந்த இடைவெளிக்குள் வேகமாக செயற்பட்டார் பென் கூரியன். உலகெங்கும் பரந்து வாழ்ந்திருந்த யூத இன மக்களுக்கு ஒரு அறைகூவலை விடுத்தார்.ben_gou_speech

கிடைப்பதற்கான கடைசிச் சந்தர்ப்பம் எமது கைகளுக்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள எமது தேசத்தின் தலைவிதியை முடிவு செய்யும் தீர்மானத்தை எமக்குச் சார்பாக நிறைவேற்ற உங்கள், உங்கள் நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுங்கள்" - என்று அவர் கூறினார்.

உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் சிலிர்த்தெழுந்தார்கள். தத்தமது நாடுகளிலுள்ள நாடாளுமன்றை நோக்கி புறப்பட்டார்கள். தனியாக அல்ல. அந்த நாட்டு மக்களையும் அணிதிரட்டிக்கொண்டு சென்றார்கள். டென்மார்க் என்றால் அங்குள்ள யூதன் பத்து டெனிஷ் குடிமக்களை அழைத்துக்கொண்டு சென்றான். இவ்வாறு உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் சென்று அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களை முற்றுகையிட்டனர்.

'வளங்களை சுரண்டும் எண்ணத்துடன் செயற்பட்டு எமது தேசத்தின் தலைவிதியை மாற்றிவிடாதீர்" - என்று உலகெங்குமுள்ள யூதர்கள் தமது தேசபக்தியை பறைசாற்றினார்கள்.

அந்த ஒரே நாளில் நிலைமை தலைகீழானது. இஸ்ரேல் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, நிச்சயம் தமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரபு நாடுகள் எண்ணியிருந்த பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தன.முடிவு: இஸ்ரேல் தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விடுதலை வேண்டிப்போரிட்ட யூத இனம் தமக்கான நிலத்தை பெற்றுக்கொண்டது. உலகெங்கும் வாழ்ந்த யூத இன மக்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டிய பென்கூரியனின் முயற்சி மகாவெற்றி கண்டது. வல்லரசுகளின் தன் நேச திட்டங்கள் உடைத்தெறியப்பட்டன. அரபு நாடுகளின் சதி தவிடுபொடியானது.

அதாவது, புலம்பெயர்ந்து வாழ்ந்த யூத இன மக்களின் புரட்சி இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு பெரும் அடித்தளமானது.

இம் மாதிரியான ஒரு அடித்தளத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எமது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கி வருகின்றோமா?

இதுதான் எம்முன் வியாபித்து நிற்கும் கேள்வி.

02.

ஒற்றுமையின் பலம் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு எத்துணை முக்கியமானது என்பது வரலாறு எமக்களித்துள்ள மிகப்பெரிய பாடம். இதனை இன்று தாயகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் செவ்வனே செய்து வருவதால்தான் மற்றைய போராட்டங்களைப்போல தமிழ் மக்களின் போராட்டம் இலகுவில் நசுக்கி அழித்துவிட முடியாது பெரும் சக்தியாக நிலைத்து நிற்கின்றது.

சுதந்திர தாகத்தையும் விடுதலை வேட்கையையும் வெறுமனே நினைப்பில் கிடத்தி வைத்திருக்காது அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியதே புலம்பெயர்ந்து வாழும் எம்முன் பரந்திருக்கும் பாரிய வரலாற்றுக்கடமை.

இன்று சிங்கள மக்கள் தமக்கு ஆதரவாக மட்டுமன்றி தமிழ்மக்களுக்கு எதிராகவும் எவ்வளவு வேகமாக பிரச்சார வேலைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று.

மகாவம்சத்தை காண்பித்து அதுவே இலங்கையின் வரலாறு என்றும் தமிழ்மக்கள் இந்த நாட்டுக்கு உரித்துடையவர்க்ள அல்லர் என்றும் விடுதலைப் புலிகள் படுபயங்கரமான ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் பிரசாரப்படுத்தும் பல நூற்றுக்கணக்கான சிங்கள மற்றும் ஆங்கில இணையத்தளங்கள் இன்று பல மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு முழுவீச்சுடன் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் நோக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், சிங்கள மக்கள் தமது இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே தமது அடுத்த சந்ததியினரையும் வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காண்பிக்கின்றனர்.

இது எமக்கு ஒரு பெரிய படிப்பினை. பொய்யை பிரசாரப்படுத்துவதில் ஒரு இனம் காண்பிக்கும் வேகத்தை எமது இனம் உண்மையை பிரசாரப்படுத்துவதில் இன்னமும் காண்பிக்கவில்லை என்பது எமது பிரச்சார உத்தியில் காணப்படும் பின்னடைவே.

இன்று உலகெங்கும் எடுத்துப் பார்த்தால் சிறிலங்காவின் தூதரகங்கள் சுமார் 32 நாடுகளுக்கு குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலகங்கள் 60-க்கும் அதிகமான நாடுகளில் உள்ளதாக பிறிதொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தம்மாலான களத்தை அமைத்துக் கொடுத்து விட்டு, நடவடிக்கைகளை எதிர்பார்த்து களத்தில் உள்ள தமிழ்மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு இங்கு நிறைவேற்றப்படுகிறதா? எம்முள் எத்தனை பேர் எமது நாடுகளில் உள்ள ஒருங்கிணைப்புச் செயலகங்களுடன் தொடர்புகளில் உள்ளோம்?

எமது போராட்டம் பற்றிய கருத்து நிலையை முற்கொண்டு செல்வதில் எம்முன்னே கிடக்கும் தடைகளை உடைத்தெறிந்து எமக்கான சரியான பாதையை அமைத்துக் கொள்ளவேண்டும். போராட்டத்துக்கு மட்டுமன்றி போராட்டம் தொடர்பான பிரசாரத்துக்கும் இந்த வழி முக்கியமாகவுள்ளது.

எமது கருத்துக்களை முன்னெடுத்துச்செல்வதில் முதலில் எமக்குள் ஒற்றுமை வேண்டும். தனி மனித துதி பாடல், நீ முந்தி நான் முந்தி என்று தேவையில்லாத போட்டிகளின்பால் ஏற்படும் பொறாமை போன்ற விடயங்கள் நாம் ஆரம்பித்த முயற்சியை வேறு வழியில் திசை திருப்பிவிடுகின்றன. எமக்குள் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வேறொரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பது என்பது கனவிலும் நடைபெறாத ஒன்று.

தேசியத்தை முன்னெடுக்கும் முயற்சியுடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஆரம்பித்த எத்தனை தமிழ் வானொலிகள், பத்திரிகைகள் இன்று ஒற்றுமையுடன் செயற்படுகின்றன, எத்தனை ஒருவருக்கொருவர் சேற்றை வாரியெறியும் வேலையில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டுள்ளன என்பதை பார்த்தால் எமது மண்ணிற்கு விடுதலை கிடைத்தாலும் இவர்களுக்கு விடுதலை கிடைக்காது என்ற கவலையையே ஏற்படுத்துகின்றது.

தாயக மீட்புக்கான ஒரு புனிதப் பயணமாக புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது பிரசாரத்தை முன்னெடுக்கின்றோம் என்ற மனப்பாங்கு ஒவ்வொரு தமிழனிடமும் வரவேண்டும். மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட்டின் ஆட்ட நிலவரம் என்ன? யார் எத்தனை ஓட்டம் எடுத்தார்? என்று வெளியில் நின்று கேட்பது போல, என்ன சண்டை வருமோ? கிழக்கு மீள கிடைக்குமோ? யாழ். பிடிபடுமோ? என கேள்விகளை தொடுக்காமல், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சார்பான விடை கிடைக்கக்கூடிய வகையில் நீங்களும் போராட்டத்திற்கான பங்களிப்பை வழங்குவதில் முனைப்படைய வேண்டும்.

இதில் எமக்கு போட்;டி, பொய்யுரைத்து பிரசாரம் செய்யும் சிங்கள மக்களுடனேயே தவிர எமக்குள் அல்ல. இதனை உணர்ந்து தமிழ்த் தேசியம் தொடர்பான புரிதல் நிலையை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எமது உரிமைகளை பெறுவதைவிட தற்போது எமக்குள்ள தனிப்பட்ட கடமைகளே பெரியவை என்ற நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமாவது கீழ் இறங்க வேண்டும். தமிழ்த்தேசியம் தொடர்பிலான எமது நிலைப்பாட்டில் எந்த புறச்சக்தியுடனும் சமரசத்துக்கு இடமில்லை என்ற திடம் எமக்குள் பிறக்கவேண்டும்.

எமது அடுத்த சந்ததியை தேசியத்தின்பால் செயலூக்கமுள்ள - ஆரோக்கியமான - சந்ததியாக வளர்ப்பதில் எவரும் பின்னிற்க கூடாது. எமது இனத்துக்கான அடையாளத்தை துணிந்து சொல்வதில் உள்ள அச்சம் துடைத்தெறிப்பட வேண்டும். தான் சார்ந்த இனத்துக்கும் அந்த இனத்துக்கான போராட்டத்துக்கும் ஆதரவளிப்பது எந்த நாட்டிலும் குற்றமாகாது.

வேகமாக மாறி வரும் உலக அரசியல் பாதையில் எமது போராட்;டம் எப்போதும் எந்தச் சவாலையும் சந்திக்கலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு புலம்பெயரந்துள்ள ஒவ்வொரு தமிழனும் தயாராக இருக்கவெண்டும். எம் ஒவ்வாருவருக்கும் அந்த தார்மீக கடமை உள்ளது என்பதை ஈழம் கிடைக்கும் வரை எவரும் மறக்கலாகாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் செய்யும் பிரசார நடவடிக்கைகளே அந்தந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையின் ஆன்மாவை உலுக்கும் அதிரடி நடவடிக்கையாக இருக்;கும்.

முகமாலையிலும் மன்னாரிலும் காவலரணில் நிற்கும் போராளியே இதையும் வந்து செய்யட்டும். நாம் மறுபடியும் ஏ-9 பாதை திறந்த பிறகு ஊருக்கு போகும்போது 'கொஞ்சத்தை" கொடுப்போம் என்ற எண்ணத்தில் இருப்போமானால், எமது போராட்டத்தில் நாங்கள்தான் சபிக்கப்பட்டவர்களாக இருப்போம். எதிரியை விட எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் ஆவோம்.

 -ப.தெய்வீகன்-

 

http://www.nerudal.com/nerudal.890.html

 

ஆஸ்கார் விருதும் ,அல்லா இரக்கா இரகுமானும்

ஆஸ்கார் விருது

 

 
ஆஸ்கார் விருது
81வது ஆஸ்கார் விருதுகள்

விருதுக்கான
காரணம்
சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிறது
வழங்கியவர் Academy of Motion Picture Arts and Sciences
நாடு ஐக்கிய அமெரிக்கா
முதலாவது விருது மே 16, 1929
அதிகாரபூர்வ தளம்
 
 
ஏ. ஆர். ரகுமான்

 

 
அ. இர. இரகுமான்

பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் ஏ.சே.திலீப்குமார்
பிறப்பு ஜனவரி 6 1967 (வயது 42)
தொடக்கம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வகை திரைப்பட, மேடை இசை
தொழில் இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர்
இசைக்கருவிகள் Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், percussion, ஏனைய
இசைத்துறையில் 1992 – இன்று வரை
தளம் அதிகாரபூர்வ இணையத் தளம்

அ. இர. இரகுமான்(அல்லா இரக்கா இரகுமான்), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.

இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.

81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.[1]

 

 
 
 
  • குறிப்பு: "ஆண்டு", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.

பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:

[தொகு] திரைப்பட அல்லாத இசையமைப்புகள்

  • Return of the Thief of Baghdad (2003)
  • தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
  • செட் மீ ஃப்ரீ (1991)
  • வந்தே மாதரம் (1997)
  • ஜன கன மன (2000)
  • பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
  • இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
  • ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)

Tamilan

[தொகு] வெளி இணைப்புகள்

 
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails