Friday, March 27, 2009

தமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்.-தேர்தலுக்குள் தீர்த்துக் கட்டு!....

'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசுஇ தன்னுடைய ராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசினோம். ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால்இ புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.
 
கடந்த இரண்டு மாதங் களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால்இ இதையெல்லாம் மறைத்துவிட்டுஇ 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.
இந்திய ராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய ராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம்இ விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சிஇ பூநகரிஇ வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சிங்கள ராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பதுஇ எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள ராணுவம் மீட்டு வைத்திருந்தபோதுஇ பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தா என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து யானையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள ராணுவம் அஞ்சுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திரிகோணமலை மாவட்டம் புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில்இ இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள்.
அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் ரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழுஇ ஒரு மருத்துவமனையையே நிறுவியது. இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயகஇ 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார்.
அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல்இ 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.
சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த ராணுவ அதிகாரி ஒருவர்இ 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய ராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னஇ 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதையை போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார்.
இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள்இ இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.
''சிங்கள ராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய ராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத் தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய ராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத் தீவுக்கு அருகே நிற்கிறது. இந்தப் படைகள் ஒருசேர முல்லைத் தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன.
இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால்இ இந்திய ராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள்.
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன்இ 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடிஇ 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.
தமிழ் ஆர்வலர்களோஇ ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய ராணுவம்இ இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில்இ இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சத்தீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப் பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில்இ ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் அரசோ ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது.
மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?

 

http://www.seithy.com/breifNews.php?newsID=13078&category=TamilNews

Saturday, March 21, 2009

ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதை ஒரு முறை படியுங்களேன்.

 இணையதளத்தில் உலாவி வரும்பொழுது இந்த கட்டுரை காண நேர்ந்தது.என்னை மிகவும் கவந்தபடியினால் உங்களுக்காகவும் இதை இங்கு பதிவு செய்துள்ளேன்.இதை எழுதிய நண்பர் இரண்டு இணைய மலர்களை நடத்திவருகிறார்.
 
 

வானாந்திர‌ வ‌ழியாய் ச‌மாதான‌த்தைத் தேடி

பிரியமானவர்களே..,

கடவுளின் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன், இங்கே என்னைப் பற்றிய ஒரு சிறு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயதில் ஜெபிப்பதிலும் வேதம் வாசிப்பதிலும் பெற்றோரின் வழிகாட்டுதல் படி நடந்தவன், நான் பிறந்து 16 ஆம் நாள் முதற்கொண்டு 5 வயது வரை மிகவும் பெலவீணம்(5ஆவது வயதில் என் மருத்துவப் பதிவில் உள்ள என் எடை 8 கிலோ மட்டுமே) உள்ளவனாய் இருந்தேன், மேலும் எனக்கு இல்லாத நோயின் அறிகுறியே இல்லை என்று இப்போதும் என் உறவினர்கள் சொல்லக் கேட்பதுண்டு காசநோய் தொடங்கி காமாலை, ஆஸ்துமா, மாதம் ஒரு முறை கடும் காய்ச்சல் என மிகவும் அவதிப்பட்டேனாம், என்னுடைய 5ஆவது வயது வரை நான் மருத்துவமனை செல்லாத மாதமோ, மருந்து எடுத்துக் கொள்ளாத நாளோ இல்லை என்றே சொல்லி விடலாம், என் தகப்பனும் தாயும் என் படுக்கையில் வந்து மணிக்கனக்காய் ஜெபித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது,

அப்போது ஒருமுறை எங்கள் நகருக்கு சகோதரர் DGS தினகரன் அவர்கள் வந்திருந்தார், கூட்டம் நடந்த இடத்திற்கு என் தகப்பனார் என்னை அழைத்துச் சென்றார், அங்கே அவர் விபத்திலிருந்து மீண்டு கையில் கட்டோடு தம்மிடம் வருபவர்களுக்காய் ஜெபித்துக்கொண்டிருந்தார், அப்போது எனக்காகவும் அவர் ஜெபித்தார், அப்போது ஆண்டவராகிய கிறிஸ்துவின் மூலமாக அற்புத சுகம் பெற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து என் உடலில் அதிசய மாற்றங்கள் நிகழ்ந்தது பல நாட்கள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சொன்ன மருத்துவர்கள் மருந்து தேவையில்லை என நிறுத்திவிட்டார்கள், காச நோய் அறிகுறிகள் முற்றிலும் மாறின, ஆஸ்துமா அறவே இல்லை, ஆரோக்கியமான மற்ற குழந்தைகளைப்போல் கிறிஸ்துவே என்னை அதிசயமாய் மாற்றினார்,

இப்படி கிறிஸ்துவின் மூலம் அற்புதம் பெற்றுக்கொண்ட நான் அவருக்கு உண்மையாய் வாழ்தேனா? இல்லை என்றுதான் சொல்ல‌வேண்டும், என் 15ஆவ‌து வ‌ய‌தில் பெரியார் அவ‌ர்க‌ளில் க‌ருத்துக்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டேன், க‌ட‌வுள் ம‌றுப்பை என் கொள்கையாக‌ ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருத்து ஜெப‌த்தையும் கிறிஸ்துவ‌ ந‌ம்பிக்கையையும் கேலிசெய்வேன், கிறிஸ்து சிலுவையில் மாண்டிருந்தால் தானே உயிர்த்தெழுவதற்கு? அவ‌ர் ம‌ய‌க்க‌திலிருந்திருப்பார் என‌ வாதிடுவேன்.


இப்ப‌டியாக‌ என் வ‌ழிவில‌க‌ல் ஆர‌ம்ப‌மான‌து. ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து க‌ண்ண‌தாச‌னின் "அர்த்த‌முள்ள‌ இந்து ம‌தம்" (இந்த புத்தகம் கீழே கண்டெடுத்தேன் இரகசியமாக ப‌ள்ளியில் படிப்பேன்) என்ற‌ புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ நேர்ந்த‌து அவைக‌ளில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் நான் அனுதின‌ வாழ்க்கையில் சாதார‌ன‌மான‌ வ‌ழ‌க்கத்தில் இருந்த‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளாய் இருந்த‌ப‌டியால் அவைக‌ளின் ஆழ‌மான‌ உண்மைக‌ளை அறிந்து? ந‌ம் ப‌ண்பாட்டிற்கு க‌லாச்சார‌த்திற்கு இந்து ம‌த‌மே ச‌ரியான‌து என‌ நினைத்தேன், அந்த நினைவுகள் இந்து மத‌த்தின் மீது பற்றாக வளர்ந்தது, மற்ற மதங்கள் அது தோன்றிய பகுதிகளுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டிற்கு இந்து மதமே சரியானது என முடிவுக்கு வந்தேன்.


என்னுடைய நண்பர்கள் சிலர் இந்துக்கள் என்பதால் அவர்களோடு கோவில்களுக்குச் செல்லும் பழக்கம் உருவானது, அது மெல்ல மெல்ல என்னை அதன் ஆழங்களான சகுனம்பார்த்தல், ஜோதிடம், வாஸ்து ஜாககம் எனப் பரினாமம் அடைந்தது, நாளிடையில் நான் ஒரு பூரண இந்துவாக மாறிவிட்டேன், படங்களை இரகசியமாக வைத்து வழிபடுவது, சிறிய விநாயகர் சிலையை வீட்டில் மறைத்து வைத்து வழிபடுவது ந‌ண்ப‌ர்க‌ள் வீட்டில் புண்ணிய ஸ்த‌ல‌ங்க‌ளுக்குச் சென்றால் என‌க்காக‌ அர்ச்ச‌னை செய்யச் சொல்வ‌து அவ‌ர்க‌ள் த‌ரும் பிர‌சாத‌த்தை(குங்குமம், எலுமிச்சம்பழம் படங்கள்) வாங்கி வைத்துக்கொள்வ‌து, நாள் பார்ப்பது (அஸ்ட‌மி, ந‌வ‌மி, ச‌ந்திராஸ்ட‌ம‌ம், ஆகிய‌ நாட்க‌ளில் புதிய காரிய‌ம் செய்வ‌தில்லை)

க‌ல்லூரி நாட்க‌ளில் வீட்டிற்குத் தெரியாம‌ல் ஒரு ஜோதிடரிடம் சென்று என்னுடைய ஜாத‌கத்தை எழுதிக்கொண்டேன், மேலும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மேற்படிப்பு, அல்லது மற்ற ஏதாவது குழப்பங்கள் ஆகியவை நேரிடும் போது ஜோதிட‌ரிட‌ம் சென்று என்னுடைய‌ நேர‌ம் எப்ப‌டி என‌க் கேட்டுத் தெரிந்து அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பேன்,

நான் UG இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்கள் வீட்டின் முன் பகுதியில் அரசின் வீட்டு வசதி வாரியத் திட்டம் ஒன்று செயல் படுத்தப்பட்டது, அப்போது வீட்டிற்கு முன்னால் ஒரு சாலை அமைக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கு முன்னால் சாலையிருந்தால் அது "முச்சந்தி" "நேர்குத்து" ஆகும். இந்துக்கள் முறைப்படி தங்கள் தீட்டான பொருட்கள், மற்றும் திருஸ்டி கழித்த பொருட்களாகிய அசுத்தங்களை முச்சந்தியிலேயே கொட்டுவார்கள், இதனால் அதற்கு நேராக வாசல் இருக்கும் நாலாவது சந்தியான வீட்டிற்குள் அந்த அசுத்தங்கள் குடியேரும் என்பதும், இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆகாது என்பதும், அவர்களது நம்பிக்கை இந்த (மூட‌)நம்பிக்கையை நானும் நம்பினேன்.

இதனால் நான் என்னுடைய மூத்த நண்பர் ஒருவர் வாஸ்துவில் கைதேர்ந்தவர் அவரது உதவியோடு வாஸ்துவைக் கற்றுக்கொண்டேன் அவர் ஒரு இஸ்லாமியர். நாங்கள் இருக்கும் வீட்டை வாஸ்து முறைப்படி மிக மிக கவனமாக மாற்றி அமைக்க‌த் திட்டமிட்டேன். அயலாரின் தொடர்ச்சியான பயப்படுத்தலாலும், என்னுடைய விடாத நச்சரிப்பாலும், என் தகப்பனார் நான் வடிவமைத்திருந்த திட்டப்படி வீட்டை மாற்றியமைக்க அரை மனதாக ஒப்புக்கொண்டார், தொழில் முறை வாஸ்து பார்ப்பவரின் சரிபார்புக்குப் பிறகு வீடு மாற்றியமைக்கப்பட்டு விட்டது, எனக்கு ஏதோ உலக சாதனை செய்தது போல மன நிறைவு, இனி தான் எந்த தீங்கும் எங்கள் வீட்டை அனுகாதே? ஆனால் நடந்தது என்ன? வீடு மற்றியமைக்கப்பட்ட ஆறே மாதத்தில் என் தாயார் ஆரோக்கியமாக இருக்கும் போதே நினையாத நேரத்தில் மரணம் அடைந்தார். அவர் மரணம் அவருக்கே ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை தெரியாது. நான் இதை நம்பவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. என்னுடைய் மீருதல்களுக்கு எங்கள் குடும்பம் என் தாயாரின் உயிரை விலைக் கிரையம் செலுத்த வேண்டியதாயிற்று. அப்போதாவது மனம் மாறினேனா? அதுதான் இல்லை, என் பயனம் தீவிரமானதே தவிர பாதை மாறிவிடவில்லை, ஜோதிடத்தை நாடினேன் அவர்கள் உன் ஜாதகப்படி உன் தந்தையின் உயிருக்கு வேண்டுமானால் பாதிப்பு வரலாம், உன் தாய் நீடிய ஆயுள் பெற்றவர்கள் என்றே சாதித்தனர், (சமீப காலங்களில் ஜோதிடத்தை நம்பும் என் புற மத நண்பர்களிடம் என் ஜாதகத்தை கொடுத்து ஜோதிடத்தின் முகத்திரையை கிழித்த சம்பவங்களும் அர‌ங்கேற‌யிருக்கின்றன.)

நான் PG படிக்கும் போது ஒரு முறை என் நண்பன் ஒருவரின் வழிகாட்டுதலில் ஒரு வயதான ஜோதிடரை சந்திக்க நேர்ந்தது அவர் என் ஜாதகத்தை ஆராய்ந்த போது எனக்கு கால சர்பதோஸ‌ம் (இராகு தோசம்) இருப்பதாகவும், அது ஒரு பரம்பரைச் சாபம் எனவும், அதற்கு ஒரு யாகம் செய்தால் அதை நிவர்த்தி செய்யலாம், என்று கூறினார். நானும் அதை ஏற்றுக் கொண்டு யாகம் செய்தேன். அதிகாலை வேளையில் ஒரு புகழ்பெற்ற மலை மீது யாக குண்டம் முழங்க இரண்டு புரோகிதர்கள் ஒரு ஜோதிடர் உட்பட நான்குபேர் கலந்து கொண்டோம். சுமார் மூன்று மணி நேரம் யாகம் நடந்தது, மந்திரம் சொல்லச் சொல்ல புரோகிதர் கொடுக்கும் பொருட்களை நான் தீயிலிட்டேன் பிறகு முடிவாக ஒரு பாம்பு உருவத்தை மாவினால் செய்து அதனோடு சில பொருட்களை வைத்து அதை ஒரு நீர் நிலையில் கொண்டுபோய் விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வரச்சொன்னார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு என் தலையில் தண்ணீரை ஊற்றி புதிதாக வாங்கி வைத்திருந்த உடையை உடுத்திக் கொண்டேன்.


அன்று எனக்கு நடந்தது என்னவென்றால் ஒரு பாம்பின் ஆவியை அவர்கள் என்மீது ஏவி விட்டிருகிறார்கள், ஆனால் எனக்கு இது தெரியாது. காரனம் (அது எனக்கு கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகே எனக்கு தெரியவந்தது, இது பற்றி பின்பு விளக்கம் தருகிறேன்.) பொதுவாக நான் இந்து மதத்தின் கோட்பாடுகளை நம்பினாலும், அவர்கள் சொல்லும் மந்திரம், செய்வினை, ஏவல், ஆகியவற்றின் மீது எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை.

நாட்கள் கடந்தன ஒரு இந்துவாகவே வாழந்தேன். ஆனாலும் என்னையும் அறியாமல் ஓர் வெறுமை, சமாதானமின்மை காரணம் நான் இயல்பிலேயே மனதிடம் குறைவானவனாய் இருந்ததாலும் என்னுடைய தகப்பனாரும் சகோதரியும் என்னோடு ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களின் அன்பைப் பெற முடியாமல் போனேன், காரனம் என் வழி அவர்களின் வழியிலிருந்து முற்றிலும் வேறாய் இருந்தது. மேலும் நான் இந்துவாக இருந்தாலும் என் நெருங்கிய நட்பு வட்டம் கிறிஸ்தவ வட்டமாய் இருந்தது, அவர்களோடு நேரம் செலவிடுவதை தவிர்த்தேன். காரனம் அவர்களோடு தர்க்கம் செய்வதே. அதனால் நண்ப‌ர்களின் ஆதரவையும் இழந்தேன். அலுவலக கசப்புகள் ஒரு புறம் என்னை வாட்ட இவ்வுலகில் எனக்கு அடைக்கலம் இல்லாததைப் போல உண்ர்ந்தேன். சிறு பிர‌ச்ச‌னைக‌ளையும் எதிர்கொள்ள‌ முடியாத‌ கோழையாக‌ மாறினேன்.

திருச்சந்தூர், இராமேஸ்வரம், பழநி, மதுரை, சென்னிமலை, திருச்செங்கோடு, பொள்ளாச்சி, பண்ணாரி, பாரியூர், திருநள்ளாரு, என எல்லாக் கோவில்களுக்கும் சென்று வந்தேன், ஆனாலும் என் வெறுமை மாறவில்லை, வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பின் தரிசனம் சிறப்பானது எனக் கேள்விப்பட்டு, அதிகாலை ஒரு மனிக்கு எழுந்து அதையும் பார்த்தேன. ஆனாலும் வெறுமையும் சமாதானமின்மையும் மாறவில்லை. கார‌ன‌ம் நான் அங்கே சென்று பார்த்த‌வைக‌ள் வெறும் ம‌னித‌னின் க‌ற்ப‌னைக்கு உட்ப‌ட்ட‌ க‌ற்சிலைக‌ளாக‌வே இருந்த‌ன‌. அவைக‌ள் அழ‌காய்த்தோன்றுவ‌தாக‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொன்ன‌ போது நானும் அதை ஆமோதித்தேன் அரை ம‌ன‌தோடு, ஆனாலும் அவைக‌ளின் அழ‌கு எனக்கு ச‌மாதான‌த்தைத் த‌ர‌வில்லை.


நான் மிக‌வும் ந‌ம்பிய சகுணம் பார்ப்பது, வாஸ்து, ஜோதிட‌ம், ஜாத‌க‌ம், புண்ணிய ஸ்த‌ல‌ வ‌ழிபாடு, ஆகிய‌வைக‌ளில் உண்மையில்லை என்ப‌தை கசப்பான அனுப‌வங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.


ச‌ரி யோகா க‌ற்றுக்கொள்ள‌லாம் என யோகாவும் தியான‌மும் க‌ற்றுக் கொள்ள‌ ஆர‌ம்பித்தேன். அதுவும் என் வெறுமைக்குத் தீணி போட‌முடிய‌வில்லை. தியானமும் யோகாவும் இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்தாக பரவலாக அறியப்பட்டாலும் என்னைப் போன்ற சாமானியனுக்கு அதன் பயன் என்ன எனபதே அறியமுடியாமல் போனது. இதைப் படிக்கும் ம‌ருத்துவர்கள் தங்களிடம் வரும் "மன இருக்கமுள்ள நோயாளிகள் மிகவும் புத்தியுள்ள ஞானிகளா என அறிந்து யோகாவை அவர்களுக்குப் பரிந்துரையுங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாக இருக்கும், காரணம் அவர்கள் என்னைப் போன்ற பேதையாக இருக்கும் பட்சத்தில் அவைகளால் பலன் ஒன்றும் ஏற்படாது என்பதற்கு நானே ஒரு சான்று.

என் தேட‌ல் என்ன‌ என்ப‌தே என‌க்கு அறிய‌முடியாத‌ ப‌ரிதாப‌ நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்டேன். சரி க‌டைசியாக‌ ம‌ன ந‌ல‌ ம‌ருத்துவ‌ரை பார்க்க‌லாம் என‌ முடிவு செய்தேன், ஆனால் மருந்து வெறுமையையும் சமாதானமின்மையையும் எப்ப‌டிப் போக்கும் என எண்ணி, அம்முய‌ற்சியை கைவிட்டேன், க‌டைசியாக‌ த‌ற்கொலை ம‌ட்டுமே தீர்வு என‌த் தீர்மானித்த‌ நான், நாளும் குறித்துவிட்டேன். ஏற்கென‌வே எங்கள் தாயாரை இழ‌ந்து வாடும் என் குடும்ப‌த்திற்கு மீண்டும் ஓர் இழ‌ப்பை தெரிய‌ப்ப‌டுத்த‌ வேண்டாம் என‌ எண்ணி வீட்டில் நேர்முக‌த்தேவுக்குச் செல்வ‌தாக‌க் கூறிக் கொண்டு வேறொரு திசையில் ப‌ய‌னிக்க‌லானேன், நான் தற்கொலை செய்யத் தேர்வு செய்த‌ மாநில‌ம், இது வ‌ரை ப‌ழ‌க்க‌மில்லாத வேறு ஒரு வ‌ட‌ மாநில‌ம், காரண‌ம் என் த‌க‌ப்ப‌னாருக்கும் என் ச‌கோத‌ரிக்கும் என் ம‌ரண‌ம் தெரிய‌க்கூடாது என‌ நான் நினைத்த‌துதான்,

நான் ம‌னதில் ம‌ர‌ண‌ம‌டைய‌ப் போகிறோம் என்ற‌ க‌ல‌க்க‌ம் சிறிதும் இன்றி உற‌ங்க‌லானேன், இர‌வில் ஓர் க‌ன‌வு; "வீட்டிலுள்ள வேத‌த்தின் மீது என்னை என் தாயார் மிக‌ ஆக்ரோச‌மாக‌த் த‌ள்ளி விடுவது போல்"
உடலெல்லாம் ஒரே வலி, ஊர் பெயர் தெரியாத இடத்தில் இரங்கி மனம் மாறி வீட்டிற்கு வந்து விட்டேன்,

ஒரு சில நாட்கள் சென்றன, மீண்டும் வெறுமை....

இம்முறை மன நல மருத்துவரை சந்திப்பது என முடிவு செய்தேன். கிறிஸ்துவின் சித்தத்தால் நான் சந்தித்த மன நல மருத்துவர் ஓர் கிறிஸ்தவர், அவர் நான் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு முடித்து "உனக்குத் தேவையான மருந்து இயேசுகிறிஸ்துவே நீ இன்றே அவரிடம் சரனடைந்து விடு" எனச் சொன்னார். இதைக் கேட்டதும் தாங்க முடியாத கோபத்திற்குள்ளானேன். என் பெற்றோர் உறவினர், நண்பர்கள், எல்லார் சொல்லியும் கேட்காத நான் நீங்கள் சொல்வதைக் காசுகொடுத்துக் கேட்கவேண்டுமா? என்று காட்டமாகப் பேசிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

சில நாட்கள் முடிவு ஏதுமின்றி சென்றது மீண்டும் வெறுமை......


பசியில்லை, தூக்கமில்லை, எதிலும் ஈடுபாடில்லை, சமாதானமில்லாத எதையோ இழந்துவிட்டது போல ஒரு மாயை ஒரு நாள் நள்ளிரவு திடீரென ஒரு யோசனை "இயேசுவை முயற்சி செய்து பார்த்தால் என்ன?" என்று , ஆனால் யாரிடம் போய் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வது? தகப்பனார்....? உறவினர்கள்....? நண்பர்கள்...?


முடியாது முடியவே முடியாது..


காரணம் நான் அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்பட்டேன், ஏனென்றால் நான் அவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றி மிகக் கேவலமாக வாதிட்டிருக்கிறேன். சரி என்ன தான் வழி? அந்த மருத்துவரிடமே கேட்டுவிடலாம், என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், நான் திரும்பி வந்ததை பார்த்து சிரித்த அவர் பின்பு புன்முறுவலோடு கிறிஸ்துவை எனக்கு அறிமுகப் படுத்தினார், ஆனாலும் நான் தேடுவது கிறிஸ்துவிடம் தான் இருக்கின்றது என்ப‌தை உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை, வீட்டில் எப்போதும் போல இரகசியமாய் வேதத்தையும் கிறிஸ்தவ அறிஞர்களின் புத்தகத்தையும் படிக்கலானேன், இவைகளில் பெரும்பாலவைகளை நான் ஏற்கெனவே படித்ததுண்டு நான் முன்பு படித்தது விவாதத்திற்கும் குற்றம் கண்டுபிடிப்பதற்குமே தவிர வேறு எதற்கும் இல்லை. ஆனால் இப்போது நான் படிப்பது ஒரு தேடல் அடிப்படையில்.. ஆம் நான் இழ‌ந்து போன‌ ச‌மாதான‌த்தைத் தேடி


மெல்ல மெல்ல நான் தேடியது கிடப்பதாகத் தோன்றியது, ஆனாலும் இவைகள் உண்மையா? என்ற எண்ணம் என்னைக் குழப்பியது, குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்க ஒரு நாள் இயேசு அழைகிறார் புத்தகத்தில் கோவை காருண்யாவில் சகோ. தினகரன் அவர்களின் கூட்டம் பற்றிய அறிவிப்பு கண்ணில் பட்டது அங்கே செல்ல முடிவு செய்தேன். அங்கே சொல்லப்பட்ட சில வார்த்தைகள் எனக்காகவே கிறிஸ்துவால் சொல்லப்பட்டதாக உணர்ந்தேன், ஆனாலும் அடுத்தநாள் தான் அது எனக்காகச் சொல்லப்பட்டது என்பதை மிகவும் ச‌ங்கடப்பட்டு எனக்குள்ளேயே ஒத்துக் கொண்டேன். சில நாட்களிலேயே பழைய, புதிய ஏற்பாடுகளின் ஒற்றுமைகளை நண்பரொருவர் மூலமாய் அறிந்து கொண்டேன்.


சரியாக நான் தற்கொலை முடிவைக் கைவிட்ட மூன்றாம் மாதத்தில் இந்த உலகத்தில் நான் தேடிய நிம்மதியை கிறிஸ்துவே தரமுடியும் என முழு மனதோடு ஒத்துக்கொண்டேன், அன்றே என் பாவங்களை அறிக்கையிட்டு என் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுத்தேன். என்னிடம் இருந்த செப்புத்தகடுகள், எந்திரங்கள், தாயத்துகள் படங்கள், சிலைகள், ஆகியவற்றை தேடியெடுத்து தூக்கி எறிந்துவிட்டேன். ஆனாலும் என்னால் சரியாக ஜெபிக்க முடியவில்லை,

கிறிஸ்தவம் தொடர்பான என் சந்தேகங்களை நான் எப்போதும் கேட்டுத் தெளிவு பெறும் நண்பரிடம் நான் ஜெபம் செய்ய முடியாததை முறையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் முகம் பயம் கலந்த கலவரமாக மாறத்தொடங்கியது, எனக்கு எதுவும் தெரியவில்லை, பின்பு அவர் சுதாரித்துக் கொண்டு உனக்கும் பாம்புக்கும் என்ன தொடர்பு என்றார்? எனக்கு அவர் கேட்பது சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததால் நானும் குழம்பிவிட்டேன். பிறகு அவர் திரும்பத்திரும்பக் கேட்டதால் என் ஜாதகத்தில் கால சர்ப தோசம் என்ற ஒன்று இருப்பதாக சொன்னேன். அவர் அதையும் மீறி நீ பாம்போடு எதாவது ஒப்பந்தம் செய்திருக்கிறாயா? என்றார். நான் நான் பாம்பிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள நான் என்ன பாம்பா? நான் அந்த தோசம் நீங்க சில ஆண்டுகளுக்கு முன்னால் யாகம் வேண்டுமானால் செய்தேன் வேறொன்றுமில்லை என்றேன், அப்போது தான் அவர் ஒரு உண்மையைச் சொன்னார் நான் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு நான் தெரியவில்லை பாம்புதான் தெரிந்தது, என்றார் மேலும் அந்த பாம்பின் ஆவியை உடனே விரட்ட வேண்டும் என்றார்.


நான் ந‌ம்ப‌வில்லை ஆனாலும் அவ‌ர் வ‌ற்புறுத்த‌லினால் அரைமனதோடு ஜெப‌த்தில் அம‌ர்ந்தேன், அப்போது திடீரென என் உட‌லை என்னாலேயே க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ துடிப்பு என்னில் தோன்றி நேர‌மாக ஆக‌ அதிகமான‌து என் நாக்கு வெளியே வந்து விட்ட‌து ஆனாலும் என் ம‌ன‌ம் இது வேறொருவரின் இட‌ம் நான் இப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌க்கூடாது என‌ என் உட‌லைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ துடியாய் துடித்தது ஆனால் உட‌லை என்னால் சிறிதும் க‌ட்டுக்குள் கொண்டுவ‌ர முடிய‌வில்லை பிற‌கு சிறிது நேர‌த்தில் என் உட‌ல் என் க‌ட்டுக்குள் வந்த‌து. நான் PG படிக்கும் போது அந்த பிசாசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை என் ஆண்டவராகிய கிறிஸ்துவே முறித்துப் போட்டார், அன்றிலிருந்து நான் கிறிஸ்துவை என் முழு முதல் பரம தகப்பனாக ஏற்றுக்கொண்டேன்.


அன்றிலிருந்து நான் இழ‌ந்து போயிருந்த‌ ச‌மாதான‌ம் என்னில் நிலைபெற்று வ‌ள‌ர‌ ஆர‌ம்பித்த‌து, இதை வாசித்த சிலருக்கு இப்போது உனக்கு பிரச்சனைகள் இல்லையா? என ஒரு ஐயம் தோன்றும், ஒரு உண்மையைச் சொல்கிறேன் நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத நாட்களைவிட கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு தான் எனக்குப் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, பிரச்சனைகளைச் ச‌ந்திக்கும் தெம்பு எப்போதும் எனக்கு இருந்ததில்லை ஆனால் நான் கிறிஸ்தவனான பின்பு எனக்கு பிரச்சனைகள் வரும்போது நான் எந்த இடத்தில் எந்த நிலையில் இருக்கிறேனோ அதே நிலையில் என் இயேசப்பாவிடம் என் பிரச்சனைக்ளை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடுவேன்(1 பேதுரு 5:7). மேலும் அவர் எப்போது என்னோடு இருக்கிறார் என்ற அவரது உறுதிமொழியும், அவர் என்னைக்கை விடுவதில்லை என்ற வாக்குறுதியும்(ஆதி 28:15), தானாக எனக்கு தன்னம்பிக்கையைத் தருகின்றன இப்போது எனக்கு தேவையில்லா பயமும், நம்பிக்கையில்லாதால் உருவாகும் சமாதானமின்மையும், அரவே இல்லை, காரணம்: நான் இந்த உலகத்தை உருவாக்கிய சர்வ வல்லவரின் பிள்ளை, அவரிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்(சங் 121:2),


முடிவாக‌ "என் ஆத்மா தேடி அலைந்த‌து கிறிஸ்துவ‌த்தான், அவர் எனக்கு வைத்துவிட்டுப் போன சமாதானத்தைத்தான், என‌ இப்போதும் உண‌ர்கிறேன். மேலும் என் வாழ்க்கையில் இப்போது வெறுமையில்லை. நான் கிறிஸ்துவுக்குள்ளாக‌வே ம‌ரிக்க‌ விரும்புகிறேன், கார‌ண‌ம் நான் கிறிஸ்துவிட‌ம் தேடிய‌த்தை விட‌வும் கேட்ட‌தை விட‌வும் அதிக‌மாக‌வே பெற்றுகொண்டேன். பெற்றுக் கொள்கிறேன். பெற்றுக் கொள்வேன் என்றும் விசுவாசிக்கிறேன்.


இதைப் ப‌டிக்கும் ச‌கோத‌ர‌னே ச‌கோத‌ரியே ஒருவேளை நீங்க‌ளும் இதே போன்ற‌ ச‌மாதான‌மில்லாத‌ ஒரு வெறுமையான‌ வாழ்க்கையை வாழ்ந்து கொன்டிருக்க‌லாம், உங்களுக்கு நிரந்தரமான‌ ச‌மாதான‌த்தையும் நிம்ம‌தியையும் கிறிஸ்துவே த‌ர‌முடியும். என்னை நேசிக்கும் இயேசு கிறிஸ்து உங்க‌ளையும் நேசிக்க‌ ஆய‌த்த‌மாய் இருக்கிறார்(யோவான் 6:37). ஒரு முறை.... ஒரே ஒரு முறை.... கிறிஸ்துவுக்குள் உங்க‌ள் முழு ம‌ன‌தோடு வந்து உங்க‌ள் குறைவுக‌ளை ஒப்புகொடுங்க‌ள், க‌ட்டாய‌ம் ஒரு மாற்ற‌த்தைக் காண்பீர்க‌ள். அவ‌ர் உங்க‌ள் குறைவுக‌ளையெள்ளாம் நிறைவாக்குவார்(பிலிப்பியர் 4:19). அவ‌ர் என்றென்றும் மாறாத‌வராக இருக்கிறார்(எபிரெயர் 13:8), அவ‌ர் பொய் சொல்லாதவர், மனிதனைப்போல மனம் மாறுகிறவர் அல்ல‌ (எண்ணாகமம் 23:19). என‌வே நீங்க‌ள் ஒருமுறை அவ‌ரை முழு ம‌ன‌தோடு தேடிப்பாருங்க‌ள், நீங்க‌ள் நினைப்ப‌த‌ற்கும் வேண்டிக்கொள்வ‌த‌ற்கும் அதிக‌மான‌தைச் த‌ருவார், செய்வார். ஆமேன்.

Friday, March 20, 2009

புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம்

 
இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாற்ரை காட்டுபகுதியை முற்றூகை யிட இன்னும் ஒரு பிரிவினர் புல்மோட்டையில்இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி , பல்குழல் ஏவுகனை , ஆட்லறீகலாலும்....
அறூபது கிலோ மிற்றர் சென்றூ தாக்கும் ஏவுகனைமூலமாகவும் (இவ் ஏவுகனை ஜந்து கிலோ மிற்றர் பகுதிகளய் முற்றாக தாக்கி துவசம் செய்யக்கூடியது இவ் ஏவுகனையில் இருந்து எந்த உயிரினமும் தப்பமுடியாது) இந்தியப்படைகள் தாக்குதலை நடத்திக் கேண்டு நகர்வை மேற்கோண்டுள்ளதாக நம்பகரமான சிங்கள அதிகாரி உறூதிப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/view.php?2adsQG7DD4cc2e5ZLu6b04dc2gE9ZTcd0eb5Vj06e24d20C6QVtde0bd4Ph2gO4ce0ecuWnZB03b42fDpYUcae

சுதந்திர ஈழம் மலரும் நாள் அண்மிக்கிறது.... ஒரு ஆய்வு

 
ராஜபக்சவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான்.

ஏனென்றால் போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்த இவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. 50,000 இராணுவத்தினர், ஏராளமான ஆயுதங்களை வைத்து சண்டையிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற இவர்களின் எண்ணம் புலிகளின் தந்திரங்களில் சிக்கி மண்ணாகிப் போனது. ஒட்டப் பந்தயங்களில் முதலில் ஒடுபவர்கள் கடைசியில் மூச்சு வாங்கி திணறுவதைப் போல முதலில் எல்லா வளங்களையும் உபயோகித்த இராணுவம் இப்போது ஆளணி இல்லாமல் திணறுகிறது. புலிகளோ எல்லா வளங்களையும் அப்படியே காப்பாற்றி வைத்திருந்து இப்போது உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த இரு வார காலமாக இராணுவம் செமத்தியாக அடி வாங்கிக் கொண்டுள்ளது. இத்தனை காலமும் புலிகளுக்கு மிகப் பெரும் இழப்பு. அதே சமயம் இராணுவத்திற்கு சிறிதளவு இழப்பு என்று கதை விட்டுக் கொண்டிருந்த இராணுவம் கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது.

இன்னும் புலிகளிடம் என்னென்ன இரகசியமான ஆயுதங்கள் உள்ளன என்று தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்து கடைசியில் அவைகளை உபயோகப்படுத்தக் கூடும். எப்படியாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்று விடலாம். அதன் பின்பு தொடர்ந்து குடும்ப ஆட்சியை நாமே நடத்தலாம் என்று ராஜபக்ச கணக்கு போட்டார். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி வலிமையான நாடுகளையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே வல்லரசு நாடுகளே சிரமப்படுகின்றன. இந்த இலட்சணத்தில் சுண்டைக்காய் இலங்கை நாடு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் பெருமளவு பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரமோ அதல பாதாளத்திற்கு போய் விட்டது.

புலிகள் விட்டுச் சென்ற இடங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு வெற்றி பெறுகிறோம் என்ற மாய வலைக்குள் மக்களை ராஜபக்ச ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குதான் இப்படி ஏமாற்ற முடியும்? கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கணணி கூட திணறும் போலிருக்கிறதே? இ ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார்? இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார்? . பிரபாகரன் வேறு நாட்டிற்கு ஓடி விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சதான் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு நாட்டிற்கு ஓடப் போகிறார். ஏனென்றால் பலவீனத்தையும் பலமாக மாற்றும் சக்தி தேசியத் தலைவருக்கு உண்டு. இந்திய காங்கிரஸ் அரசின் ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அரசும் இந்த போரை முட்டு கொடுத்து தூக்கி விட முடியாது. பணம், ஆயுதம் கொடுத்து உதவ முடியாது. புலிகளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு இராணுவத்தினரிடமிருந்து பிடுங்கப்படும் ஆயுதங்களே போதும்.

இலங்கை அரசு போரை வெற்றி கொள்ள வேண்டுமானால் புலிகளின் மரபுவழிப் படைத்திறனையும் ஆளணியையும் அழிக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு வசதிகள் உடைக்கப்பட வேண்டும். மக்களையும், புலிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அப்படியே இராணுவம் பிரிப்பதில் வெற்றி கண்டாலும் புலிகள் மீண்டும் கொரில்லா படையாக மாறுவார்கள். காலத்திற்கும் தலைவலியாய் இருப்பார்கள். வன்னி மக்களோ புலித்தலைவரை விட்டு அகல மறுக்கின்றனர். ராஜிவ் மரணத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவு எழுச்சி தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 11 இளைஞர்கள் இதுவரை உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் பிற நாடுகளை முடக்கும் வண்ணம் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

போர் நீண்டு கொண்டே செல்வதால் இலங்கை இராணுவத்தினர் சோர்ந்து போய் உளவுரண் பாதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் ஏற்கனவே புலிகளின் சிறப்புப் படையணிகள் ஊடுருவி விட்டனர். ஆளணி பற்றாக்குறையால் ஊர்காவல் படைதான் அங்கு பாதுகாப்புக்கு நிற்கப் போகிறது. மக்கள் எழுச்சியுடன் புலிகள் ஒரு பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நிகழ்த்தும் போது இலங்கை இராணுவம் இறுதி மூச்சை விடும். வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கப்படும். காலம் நமக்கு சாதகமாக கனிந்து வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக் கூடாது. ஆகவே தனியரசை நிறுவ நமது மக்கள் மன உறுதியை இழக்காமல் எழுச்சியுடன் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஈழத்தை வென்றெடுக்கலாம். அந்த பொன்னாள் வெகு தொலைவில் இல்லை.

தமிழ்நாட்டிலிருந்து அதிபதி.

 

http://www.swisstamilweb.com/

Thursday, March 12, 2009

ஈழத்தமிழருக்கு ஆதரவு தேர்தல் விதிகளுக்கு எதிரானதா?

ஈழப்போரட்டத்தினால் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறும் என்று அறிந்துகொண்ட இந்திய பாசிச சக்திகள் ஈழத்திற்கு ஆதரவான பதாகைகளோ,சுவரொட்டிகளோ எதுவும் வெளியிடக்கூடாது எனவும் அப்படி மீறினால் அவர்கள் மேல் காவல் துறையினரிடம் புகார் செய்யப்படும் என்றும் மிரட்டி வருகின்றனர்.இந்தியா ஒரு ஜனநாயக நாடு என மார்தட்டிக்கொ0ண்டுள்ள இந்திய பெருங்குடிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய அவமானத்தையும், வெட்கத்தையும் கொண்டுவந்துள்ளது.

Wednesday, March 11, 2009

அகலக்கால் பதித்துள்ள இராணுவமும் ஆழ ஊடுருவியுள்ள விடுதலைப்புலிகளும்

 

11/03/2009

சமச்சீரற்ற களமுனைகளின் ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்வதில் சிறப்பு படையணிகளின் பங்கு அளப்பரியது. பெரும் படை வளங்களை ஒருங்கிணைத்து போரிடும் எதிர்த்தரப்பின் உளவுரனையும், படைத்துறை வளங்களையும் சிதைவுறச் செய்வதில் சிறிய குழுக்களாக எதிரியின் பின்னனி நிலைகளுக்குள் ஊடுருவும் சிறப்பு தாக்குதல் அணிகளின் பங்குகள் முதன்மையானவை.

மரபுவழியிலான படை நடவடிக்கைகளில் கூட சிறப்பு படையணிகளின் பங்களிப்புக்கள் அவசியமானவை. இந்த அணிகள் எங்கு எப்போது தாக்குதலை நடத்தும் என்பதை எதிர்த்தரப்பு அறிய முடியாததனால் சிறப்பு படையணிகளின் நடவடிக்கை பாரிய உளவியல் தாக்கங்களையும் எதிர்த்தரப்புக்கு ஏற்படுத்துவதுண்டு.

இந்த தாக்குதல் உத்திகளை கருத்தில் கொண்டே சிறீலங்கா இராணுவம் 2006 ஆம் ஆண்டு நாலாம்கட்ட ஈழப்போர் உக்கிரமடைந்த போது ஆழஊடுருவும் சிறப்பு தாக்குதல் அணிகள் பலவற்றை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்த முற்பட்டிருந்தது.

இவ்வாறு ஊடுருவிய ஆழ ஊடுருவும் படையணிகளின் தாக்குதல்களினால் கடந்த வருடங்களில் வன்னி பகுதியில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், விடுதலைப்புலிகளும் சில உறுப்பினர்களை இழந்திருந்தனர். ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் வசம் இருந்த ஏறத்தாள 15,000 சதுரகிலோமீற்றர் பரப்பளவுள்ள பகுதிகளில் சிறீலங்கா இராணுவத்தின் 8 தொடக்கம் 12 பேர் கொண்ட ஆழ ஊருவும் படையணிகளை கண்டறிவது சிரமமானது.

எனினும் விடுதலைப்புலிகள் அங்கு வசித்த 400,000 மக்களின் துணையுடன் சிறீலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணியின் பல நடவடிக்கைகளை முறியடித்திருந்தனர். கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் படை நடவடிக்கைகளை வழிநடத்தி வந்த லெப். கேணல் லலித் ஜெயசிங்காவும் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

தற்போது விடுதலைப்புலிகளையும், ஏறத்தாள 250,000 மக்களையும் 50 சதுரகிலோமீற்றர் பரப்பினுள் முடக்கிவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்து வருகின்றது. அதாவது 15,000 சதுரகி.மீ பரப்பளவில் இருந்து விடுதலைப்புலிகளின் பிரதேசம் 50 சதுரகி.மீ ஆக குறைந்துள்ளது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே படைத்தரப்பு 14,950 சதுரகி.மீ பரப்பளிவினுள் மேலதிகமாக நிலைகொண்டுள்ளது என்பதே அதன் பொருள்.

ஆனால் பெருமளவில் காடுகளையும், குளங்களையும், கிராமங்களையும், ஆறுகளையும் கொண்ட இந்த பாரிய பிரதேசத்தை தக்கவைக்க தேவைப்படும் படை பலம் அதிகம். விடுதலைப்புலிகளின் அணிகள் இராணுவ நிலைகளுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல்களை ஆரம்பிக்கும் வரையிலும் இராணுவம் இந்த யாதார்த்தத்தை உணர்ந்து கொள்ளவில்லை. இவ்வாறான தாக்குதல்களை படைத்தரப்பு உணர்ந்து கொள்ளும் போது அதனை எதிர்கொள்வதும் படைத்தரப்பினால் முடியாத காரியம்.

அம்பாறையில் இருந்து மொனராகல காடு வரையிலும் ஆழ ஊடுருவி தாக்குதல்கைளை மேற்கொண்டு வரும் விடுதலைப்புலிகளுக்கு வன்னியில் ஊடுருவுவது அதிக சிரமமமானது அல்ல. அது அவர்களுக்கு நன்கு பரீட்சயமான பகுதி. மேலும் விடுதலைப்புலிகள் வசம் ஆழஊடுருவும் திறன் கொண்ட பல சிறப்பு அணிகளும் உள்ளன. தற்போது புதிதாக லெப். கேணல் அறிவு ஆழ ஊடுருவும் படையணி ஒன்றையும் உருவாக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விடுதலைப்புலிகளின் சிறப்புத்தாக்குதல் அணிகள் பல இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்குள் ஆழஊடுருவி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ஊடுருவிய அணிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பல பகுதிகளில் கடந்த வாரம் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒட்டுசுட்டான், இரணைமடு சந்தி பகுதி ஆகியவற்றில் கிளைமோர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், முல்லைத்தீவு பகுதியில் நேரடி மோதல்களும் நடைபெற்றுள்ளன.

இரணைமடு சந்தி பகுதியில் படையினரை எற்றி சென்ற பேரூந்து ஒன்றின் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்ட போதும், கவசத்தகடு பொருத்தப்பட்ட பேரூந்துகளை படையினர் பயன்படுத்தி வருவதனால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதும் முள்ளியவளை பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப்புலிகளின் விக்டர் கவச எதிர்ப்பு சிறப்பு படையணியினர் ரீ-55 ரக டாங்கி ஒன்றை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் முல்லைத்தீவுக்குள் ஊடுருவிய விடுதலைப்புலிகளின் 15 பேர் கொண்ட அணி ஒன்று கடந்த வாரம் 59 ஆவது படையணியின் 1 ஆவது சிங்கறெஜிமென்ட் படையினரை எதிர்கொண்ட போது கடுமையான சமர் வெடித்திருந்தது. 1 ஆவது சிங்க றெஜிமென்டை சேர்ந்த பல கொம்பனி இராணுவத்தினர் மேஜர் ரட்ணப்பிரியா பண்டு தலைமையில் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகளை தேடிய போது மீண்டும் அங்கு மோதல்கள் இடம்பெற்றதுடன், இந்த படையணியின் டெல்ற்றா கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் தேவபிரியா உட்பட 7 படையினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த மோதல்களின் போது காயமடைந்த படையினரை மீட்பதற்கு முயன்ற கேணல் லக்சிறீ வடுகேயின் வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததுடன், 59 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் நந்தன உடுவததவும் இந்த தாக்குதலில் சிக்கி கொண்டார். நிலமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா 57-4 ஆவது பிரிகேட்டை அந்த பகுதிக்கு நகர்த்தியதுடன், சிறப்பு படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் சாகி கலகேயும் 59 ஆவது படையணியிருக்கு உதவும் பொருட்டு அங்கு அனுப்பப்பட்டிருந்தார்.

ஊடுருவிய விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகளை படைத்தரப்பு அதிக வளங்களை பயன்படுத்தி தேடிக்கொண்டிருந்த போது, முல்லைத்தீவு பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அண்மையாக பயணித்து கொண்டிருந்த ஜீப் வாகனத்தின் மீதும் தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. 11 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரி மேஜர் திஸந்த பெர்னாண்டோவின் அந்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அதன் சாரதி கொல்லப்பட்டதுடன், வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

அதிகாரியை இறக்கிவிட்டு வாகனம் திரும்பி வந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றதனால் அவர் உயிர் தப்பியுள்ளார். விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், கனரக ஆயுதங்கள் சகிதம் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அதிகளவில் ஊடுருவியுள்ளதாக படையினரின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. வன்னியில் இருந்து மதவாச்சி வரையிலுமான பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்வதே இவர்களின் நோக்கம் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) மீண்டும் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் கோணமுறிப்பு பகுதியில் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இராணுவத்தினாரின் பாதுகாப்பு நிலைகளுக்கு விநியோக பொருட்களை எடுத்து சென்ற யுனிகோன் ரகத்தை சேர்ந்த துருப்புக்காவி வாகனம் கிளைமோர் குண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகியதுடன், அதில் இருந்த 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை காலை ஆனையிறவுக்கு கிழக்கேயுள்ள வண்ணாண்குளம் பகுதியில் தற்கொலை தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் அணி ஒன்று ஆனையிறவுக்கு கிழக்காகவும் வெத்திலைக்கேணிக்கு தெற்காகாகவும் உள்ள கெவில் பகுதிக்குள் ஊடுருவியிருந்ததாகவும், அந்த அணியில் இருந்த ஒரு பெண் கரும்புலி உறுப்பினர் 55 ஆவது படையணியினர் மீது கரும்புலித்தாக்குதலை நிகழ்த்தியதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

எனினும் இந்த தாக்குதலின் இழப்புக்கள் குறித்து படைத்தரப்பு தகவல் எதனையும் வெளியிடாத போதும், வெத்திலைக்கேணிக்கு அண்மையாக விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையினருக்கும் இடையில் திங்கட்கிழமை கடும் சமர் இடம்பெற்றதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது. விடுதலைப்புலிகள் 55 ஆவது படையணியின் பின்னனி விநியோக தளத்தை தாக்கியதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் படையினாரின் பின்னனி நிலைகளுக்குள் பெருமளவில் ஊடுருவியுள்ளதை தொடர்ந்து படைத்தரப்பு தமது பின்னனி நிலைகளை தக்கவைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறத்தாள 15,000 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாலும், பெருமளவான மக்கள் பாதுகாப்பு படையினராலும் பாதுகாக்கப்பட்டு வந்த 15,000 சதுர கி.மீ பரப்பளவான நிலத்தை தற்போது படையினர் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இந்த பகுதிகளை நிர்வகித்த காலப்பகுதியில் அங்கு ஏறத்தாள 400,000 மக்களும் வாழந்து வந்தனர். ஆனால் தற்போது மக்கள் முற்றுமுழுதாக வெளியேறிய நிலையில் இந்த பிரதேசங்களின் பாதுகாப்புக்களை பேணுவது என்பது இயலாத காரியம்.

படைத்தரப்பை பொறுத்தவரை தன்னிடம் உள்ள படை வளங்களை பயன்படுத்தி முக்கியமான நெடுஞ்சாலைகளையே பாதுகாக்க முயன்று வருகின்றது. ஓமந்தையில் இருந்து புளியங்குளம் வரையிலான பகுதிகளின் பாதுகாப்புக்களுக்கு ஏறத்தாள 2500 வான்படையினரையும், சிறப்பு அதிரடிப்படையினரையும் நிறுத்தியுள்ள அரசு முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளுக்கு ஊர்காவல் படையினரை நகர்த்தியுள்ளது. 26 ஆவது தேசிய பாதுகாப்பு படைப்பிரிவு முல்லைத்தீவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா அனைத்துலக விமானநிலையத்தை கொழும்புடன் இணைக்கும் நெடுஞ்சாலை, அம்பாறை மாவட்டம், பொலநறுவை மாவட்டம் போன்றவற்றின் பாதுகாப்புக்களும் ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்கா அனைத்துலக விமானநிலையத்தை கொழும்புடன் இணைக்கும் நெடுஞ்சாலையின் பாதுகாப்புக்களை பேணிவரும் ஊர்காவல் படையினரின் வத்தளை பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த வருடம் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததும் நாம் அறிந்தவையே.

வான்படையினருக்கும், கடற்படையினருக்கும் என படையினரை சேர்க்கும் அரசு அவர்களை களமுனைகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தி வருகின்றது. அதிக அனுபவம் வாய்ந்த படையினரை களமுனையில் இழந்து வரும் படைத்தரப்பு தனது பின்னனி நிலைகளை அனுபவமற்ற படையினரையும், ஊhகாவல்படையினரையும் கொண்டு ஈடுசெய்ய முயற்சித்து வருகின்றது. ஆனால் படையினரின் இந்த முயற்சியானது படைத்துறை ரீதியாக பேரழிவுக்கே வழிவகுக்கும் என்பதை வருங்கால மோதல்கள் எடுத்துக்காட்டும்.


வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி: ஈழமுரசு (07.03.2009)

 

http://www.tamilkathir.com/news/1183/58//d,full_view.aspx

Tuesday, March 10, 2009

மட்டக்களப்பில் காவலரண் மீது தாக்குதல் – படையினர் இருவர் படுகாயம்

 


மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சீறீலங்காப் படையினனர் அதிரடிப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட பிரிவினர் பதிவு இணையத்திடம் தெரிவிக்கையில்:

மட்டக்களப்பு மாவட்டம் கோப்பாவெளிக்கும் உறுகாமத்திற்கும் இடையில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது நேற்று (திங்கட்கிழமை) இரவு 08.45 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 

இந்தத் தாக்குதலில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலை புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

http://www.pathivu.com/news/754/54//d,view.aspx

தேவிபுர ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் பலி! 1000-க்கு அதிகமான படையினர் காயம்!

 


விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் 500-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைக்கு தெற்கே அமைந்துள்ள தேவிபுரத்தினுள் ஊடறுப்புத் தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் சிறீலங்காப் படையினருக்கு பலத்த ஆழணி உயிரிழப்புகளை ஏற்பட்டுத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாள் நடந்த ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

ஊடறுப்புப் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறீலங்காப் படையினரின் படைக் கருவிகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறீலங்காப் படையினரின் படைக்கருவிகளை பயன்படுத்தி கடந்த இரு நாட்களும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, பல சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ந தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் கடந்த திங்கட்கிழமை இரவு தளம் திரும்பியுள்ளன.
 

மூங்கிலாறு ஆட்டிலறி ஏவுகணைத் தளம் புலிகள் வசம்! 6 ஆட்டிலறிகள் புலிகளால் அழிப்பு!

 

சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மூங்கிலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினால் ஆட்டிலறித் தளம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணி ஒன்று மூங்கிலாற்றில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் அமைக்கப்பட்ட ஆட்டிலறி ஏவுகணைத் தளத்தில் இருந்த  6 ஆட்டிலறிகளைக் (122 மில்லி மீற்றர் - பற்றி ) கைப்பற்றியுள்ளனர்.

ஆட்டிலறியைக் கைப்பற்றும் நோக்கில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் 25-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் காயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

ஆட்டிலறித் தளத்தில் எந்த நேரம் தாக்குதலை நடத்தத் தயாராக இருந்த 6 ஆட்டிலறிகளைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள், ஆட்டிலறித் தளத்தில் களஞ்சியப் படுத்திய 1000 அதிகமான எறிகணைகளை சிறீலங்காப் படையினர் இலக்குகள் நோக்கி ஏவியுள்ளனர்.

நேற்று நண்பகல் வரை இப்பகுதியில் நிலைகொண்ட விடுதலைப் புலிகள், எறிகணைகள் தீரும் வரை எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, 6 ஆட்டிலறிகளையும் தகர்த்துவிட்டு, எந்தவொரு உயிரிழப்புகள் இன்றி மீண்டும் தளம் திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஏவிய எறிகணைகளே சிறீலங்காப் படையினரின் இலங்குகளிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. இவ் எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்தே சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 129 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வன்னி நிலப்பரப்பில் கடந்த சனவரி மாதம் முதல் நேற்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் கருப்பட்டமுறிப்பு, இரணைமடு, ஒட்டிசுட்டான், குமிழமுனை, மற்றும் மூங்கிலாறு பகுதிகளிலேயே 20 ஆட்டிலறிகள் தகர்கப்பட்டுள்ளன. 3 ஆட்டிலறிகள் கடுமையாகத் தேசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான விநியோக வாகனங்களும் பலவும்தாக்கி அழிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
 

விடுவமடுவில் ஆட்லெறி பீரங்கித் தளம் விடுதலைப் புலிகளால் அழிப்பு

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:
விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை மறுநாள் அதிகாலை வரை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.
இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
இத்தாக்குதலில் சிறிலங்கா படையினர் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர் என வன்னி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு

 
 
இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே!

ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்களில் மறைமுகமாகவும் ஒரு இனப்படுகொலையையே நடாத்திக் கொண்டிருக்கின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது சற்று மட்டுப்படுத்துவதற்கோ எந்தவொரு சர்வதேச நாடும் முன்வரவில்லை. எதிர்மாறாக, பலநாடுகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று சொல்லிக்கொண்டு மகிந்த அரசு நடத்தும் கொலைவெறிப் போருக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றதோடு தோளோடு தோள் கொடுப்பதாய் ஆயுத,பண,படைபல உதவிகளை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்கின்றன. தட்டிக் கேட்க வேண்டிய நாடுகள்கூட தமிழரை தனியாய் தவிக்கவிட்டுவிட்டன. ஒரு இனமே அழிவின் விளிம்பில் நிற்கின்றது. துக்கம் விசாரிக்கக்கூட ஒரு துணையில்லை.

இவற்றிற்கிடையில் ஒரேயொரு ஆறுதல் தமிழக மக்கள் உள்ளிட்ட உலகத்தமிழர்களின் பேரெழுச்சிமிக்க ஆதரவுதான் தமிழகத்தில் முத்துக்குமாரின் தியாகத்துடன் அது இன்னும் அதிகமாகி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஏன் சாதரண மக்கள்கூட பேரெழுச்சியுடன் ஈழத்தமிழர்களுக்காக தங்களின் ஆதரவுக்குரலை மிக வீரியத்துடன் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த எழுச்சிகளுக்கெல்லாம் தான்தோன்றித்தனமாக நடந்துவரும் இலங்கையரசு அடிபணியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆயினும் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஏழுகோடி தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இருக்கிறார்கள் என உணர்த்துவதற்கு வேண்டுமானால் அவை உதவலாம். மொத்தத்தில், புலம் பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் என அனைவரும் எழுச்சி பெற்று ஒரே குரலில், வன்னியில் அவலப்படும் மக்களுக்காகவும், தமிழகத் தீர்வுக்காகவும் குரல்வளை வலிக்க குரலெழுப்பியும் அது யார் செவியிலும் விழவில்லை. அது அனைத்துத் தமிழர்க்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தினைக் கொடுத்திருந்தது.

எழுச்சிக் கோரிக்கைளை எழுப்பி எழுப்பி களைத்துப்போய் அந்த எழுச்சிக் குரல்களின் இயலாமை இன்று தமிழர் மனதில் ஒரு வெறியாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. சிங்கள அரசின் வெற்றிப் பரப்புரைகளினால் தமிழர் படை தோற்றுப் போய்விடும் என்றொரு மாயத் தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழன் தோற்றுப் போகக்கூடாது; தமிழன் தோற்றுப் போனால் தமிழனின் எதிர்கால வரலாறு "அடிமை வரலாறு" ஆகவே எழுதப்படும்;

எனவே இது நடக்காமல் தடுக்க தமிழர்களின் காவலர்களான புலி மறவர்களின் பின்னால் அணி திரள்வது: தமிழர்களுக்காக போராடும் புலிகளை சர்வதேச ரீதியிலும் பலப்படுத்துவது மற்றும் சகலவழிகளிலும் அவர்களுக்கு உதவுவது, என்னவானாலும் பரவாயில்லை... இதுவொன்றுதான் தமிழன் வெற்றிபெற ஒரேவழி. இதற்காக தன்மானமிக்க தமிழனாய் இயன்றவரை போராடவேண்டும். அவ்வாறு செய்தால் நானும் ஒரு விடுதலைப் போராளிதான் என்ற எண்ணமும் என் தேசத்திற்காக அதன் விடுதலைக்காக எதையாவது செய்தாக வேண்டும் என்ற வெறியும் ஒவ்வொரு உண்மைத் தமிழனின் மனதினுள்ளும் உருவாகிவிட்டது.

இப்பொழுது அனைத்துத் தமிழரினதும் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் அவர்கள் மத்தியில் எழும் சந்தேகங்களும் பலவழிகளில் அறியப்படும் போர்ச் செய்திகளும் அனைவரையும் ரொம்பவே குழப்பிவிட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது இறுதிப்போர். இறுதிப்போரில் தமிழன் தனியாய் நின்று போராடிக் கொண்டிருக்கின்றான். இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தால்தான் தமிழனுக்கு வாழ்வும் வரலாறும். இல்லையேல்... "அகதி" என்ற பெயரோடு "அடிமை" என்ற பெயரையும் தமிழன் தனதாக்க நேரிடும்.

உலகமே சிங்கள அரசின் பக்கமாக அணிதிரண்டு நிற்க, தமிழர்படை தனித்து தன்மானத்தோடு, உறுதியோடும். தீரத்தோடும் எதிர்த்து நிற்கின்றது. வாழ்வா? அல்லது சாவா? என்ற நிலைப்பாட்டுடனான இ;ந்த இறுதியுத்தத்தின் யாதார்த்த நிலைமைகள் என்ன? அதன் பரிமாணங்கள் என்ன? என சற்று ஆராயலாம்.

'இப்போரானது வன்னி நிலப்பரப்புக்குள் மட்டுமே நடக்கிறது" என யார் கூறினாலும், அது அவர்களின் அறியாமையே! இப்போரானது இன்று பல பரிமாணங்களில் உலகமெங்கும் வியாபித்து நிற்கின்றது. "தமிழீழப் போராளிகள்" இப்போது புலிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனும், புலம் பெயர்தேசங்களிலுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தமிழீழப் போராளியாக உருவாகி நிற்கின்றான். சர்வதேசத்தின் காதுகிழியக் கத்திக் கொண்டிருந்தவன், இன்று அதன் கழுத்தைப் பிடித்துக் கேட்கும் தூரத்திற்கு வந்துவிட்டான்.

சர்வதேசம் நமக்கு நீதித்தீர்வினை தந்தாகவேண்டும்! என்ற நிலைமையை உருவாக்க முனைந்துகொண்டிருக்கிறான். உருவாக்கியே ஆகவேண்டும். இதுதான் இன்றைய நிலைமையில்,போராளியாக உருமாறி நிற்கின்ற ஒவ்வொரு தமிழனினதும் கடமை. இது இவர்களின் கடமையென்றால், ஈழத்தில் புலிகள் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுகிறது.

"தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற அமைப்பின் கடந்தகால வரலாறுகள்... அவர்களின் திறமையையும், விவேகத்துடன் கூடிய வீரத்தினையும், மன உறுதியையும் கொள்கை தவறாத உளவுரத்தையும் நன்கே பறைசாற்றும். புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து முழு உலகமுமே அதிர்ச்சியில் உறைந்துபோய் வியந்துநிற்கின்றது. அந்த வழியில் இறுதியாக கொடுத்த அதிர்ச்சி மருந்துதான், அண்மையில் கொழும்பில் நடாத்திக் காட்டப்பட்ட வான் கரும்புலித்தாக்குதல், வான்கரும்புலிகள் விடுதலைப்புலிகளின் பலத்தினை ஒருபடியல்ல பலபடிகள் மேலே உயர்த்தியிருக்கிறார்கள்.

இன்னும்பல அதிர்ச்சிகள் காத்துக்கிடக்கின்றன. இவற்றையும் மீறி புலிகள் பலமிழந்து விட்டார்களா? என கேள்வி எழுப்புவர்களும் இருக்கிறார்கள.; அவர்கள் நினைப்பதுபோல உண்மையிலேயே புலிகள் பலமிழந்து விட்டார்களா? (!) என பார்ப்பின்… இன்று புதுக்குடியிருப்பு வாசல்வரை வந்து நிற்கின்றது சிங்கள இராணுவம். இராணுவ நடவடிக்கை கிழக்கில் ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது புதுக்குடியிருப்புவரை புலிகள் நிலத்தினை மட்டும்தான் இழந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய போராளிகளையும் ஆயுததளபாடங்களையும் அதிக இழப்புக்களின்றி நாம் திட்டமிட்டபடி பாதுகாப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். புலிகளின்

பலம் அப்படியே பேணப்பட்டது மட்டுமன்றி ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்டு தற்பொழுது மிகவும் செறிவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் பரந்து விரிந்து கிடந்த புலிகளின் பலங்கள் இப்போது இறுதிப்போர் நடக்கப்போகும் இடத்தில் செறிவாகக் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுவே உண்மை.
இந்நிலையில் புலிகளின் பின்வாங்கல் கிளிநொச்சியுடன் நின்றுவிடும் என்றுதான் அநேகர் நினைத்திருந்தனர். ஆனாலும் அதற்கு எதிர்மாறாக புலிகள் தங்களின் கோட்டையான முல்லைத்தீவு வரையும் இராணுவத்தினை முன்னேற அனுமதித்தது... அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இராணுவ ஆய்வாளர்கள் கூட தங்கள் தலைகளை பிய்க்கத் தொடங்கிவிட்டனர். 'ஏன் புலிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?;" என்பது அனைவரிற்கும் புரியாத புதிராகவே இற்றைவரை உள்ளது.

விடுதலைப்புலிகள் முற்றிலும் வித்தியாசமானவர்கள்... அவர்களின் திட்டமிடல் மற்றும் போர்த்தந்திரங்கள் வித்தியாசமானதாக இருக்கும்... யாரும் இலகுவாய் ஊகிக்கக்கூடிய விடயங்களை அவர்கள் செய்யமாட்டார்கள்... எதிர்பார்க்காத ஒன்றினை எதிர்பாராத தருணத்தில் செய்வார்கள்... அது அவர்களின் தனிப்பாணி. இது புலிகளை பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.

புலிகள் ஏன் காத்திருக்கிறார்கள்? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்த்திருக்கும் தருணம் எது? எப்பொழுது அவர்களின் முழு அளவிலான பதில்த்தாக்குதல் ஆரம்பமாகும்? அவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கும்? இன்று இக்கேள்விகளுக்கான விடைகளைத்தான் அனைத்துத் தமிழர்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்...

இன்று உலக நாடுகளில் பெரும்பாலானவை, இலங்கை அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு நிற்கின்றன. புலிகள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என புராணம் பாடிக்கொண்டு நிற்கின்றன. ஐ.நா சபை கூட இதற்கு விதிவிலக்கல்ல இன்னும் சில நாடுகளுக்கு புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து வியந்துபோய், இது தொடர்ந்தால் என்னவாகும் என்ற பயம் உருவாகிவிட்டது. எதிர்காலத் தமிழீழ தனியரசு பற்றி நினைப்பே, அவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது போலும்! அதனைத் தடுப்பதற்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி புலிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டலாம,; அதன்மூலம் தமிழீழம் என்கிற தனிநாடு உருவாவதை தவிர்க்கலாம் என்ற கனவில் இலங்கை அரசிற்கு சகல வழிகளிலும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் புலிகள் தனித்தே நிற்கின்றார்கள். அவர்களுக்கான ஒரேயொரு ஆதரவு உலகம் பூராவும் பரவிவாழும் தமிழ் மக்கள்தான் மட்டும்தான். ஆதலால்தான் புலிகள் தங்களது முதற்கட்ட காய்நகர்த்தல் நடவடிக்கையாக 'உலகத்தமிழ் மக்களைக்கொண்டு சர்வதேசம் நோக்கிய வேண்டுகோள்" என்ற ரீதியான காய்நகர்த்தலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்காக வன்னிமக்கள் படும் பேரவலங்களை உலகறிய வெளிக்கொணர்ந்தார்கள.; அவற்றைக்கண்டு பொங்கியெழுந்த தமிழினம் சர்வதேசத்தினை தட்டிக் கேட்கத் தொடங்கியது. இதன் ஆரம்பத்தில் சர்வதேசத்தால் அவை கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் விடப்பட்டன.

ஐ.நா.சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் மௌனம் சாதித்தன. ஆனாலும் கொதித்தெழுந்த தமிழ்மக்கள் இடைவிடாமல் போராடத் தொடங்கினார்கள். தீக்குளிக்கும் அளவுக்கு தியாக உணர்வும் துணிவும் கொண்டார்கள். இதை பார்த்து சர்வதேசம் சம்பிரதாயத்திற்கு ஓரிரெண்டு கோரிக்கைகளை 'யுத்த நிறுத்தம் செய்யலாமே!" என்ற மாதிரிக்கு இலங்கை அரசை நோக்கித் தெரிவித்தது. ஆனால் இலங்கையின் மகிந்தராஜபக்ஸ தலைமையிலான தான்தோன்றித்தனமான அரசு தனது காட்டமான எதிர்ப்பு மற்றும் அவர்களின் கோரிக்கை நிராகரிப்பு அறிக்கைகளை கூறி அந்தந்த நாடுகளையும், ஐ.நாவையும் முகங்கோண வைத்திருக்கின்றது.

இதன் எதிர்விளைவுகள் நமக்கு சாதகமாக அமைந்தால் அது புலிகளின் முதற்காய்நகர்ந்தலுக்கான வெற்றி என்றுதான் பொருள்படும.; மறுவளமாக அதன் பாதிப்புகளை சிங்கள அரசு அனுபவிக்கவும் நிர்ப்பந்திக்கப்படும். அத்தோடு முக்கியமாக, பலர் சொல்வதனைப்போல அமெரிக்காவின் ஓபாமா அரசின் பரிவான பார்வைக்காகவும். இந்தியாவில் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலினால் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிச்சயமில்லாத ஆட்சிமாற்றத்திற்காகவும் புலிகள் காத்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். புலிகள் தங்களது திட்டப்படி தங்களது தந்திரபாயமான கால்நகர்த்தலினாலும் உலகத்தமிழர்களினது உணர்வெழுச்சியினாலும் சர்வதேச நாடுகளை தம்பால் திசை திருப்பவே முயலுவார்கள்.

உலகம் பூராவும் மக்களின் பேரெழுச்சி தொடர்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் களத்தில் ஈட்டப்படும் வெற்றிகளைவிட புலத்தில் ஏற்படும் பேரெழுச்சிகளால் மிகவும் சாதகமான விளைவுகளைப் பெறலாம் என்பதை புலிகள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இச்சாதகமான விளைவுகளை பெற்றேயாக வேண்டும் என்ற காரணத்தினால்தான் புலிகள் தாங்கள் அண்மையில் பெற்ற இருபெரு வெற்றிகளைப்பற்றி எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை. அவற்றில் ஒன்று கல்மடுக்குளம் உடைப்புத் தாக்குதல், மற்றையது புதுக்குடியிருப்புத் தாக்குதல் இவ்விரண்டு சண்டைகளிலுமே சிங்கள இராணுவம் மிகபபெரும் இழப்புகளை சந்தித்ததோடு ஆயுத தளவாடங்களையும் பெருமளவில் இழந்திருந்தது.

இவ்வெற்றிச் செய்திகளினை வெளியிடுவதினால் உலகத் தமிழரின் பேரெழுச்சி மற்றும் வன்னி மக்களுக்கான குரல்கள் அடங்கிவிடக்கூடாது என்பதானலேயே மிகவும் புத்திசாலித்தனமாக அச்செய்திகளை வெளியிடுவதனை தவிர்த்திருந்தார்கள். இன்றைய சூழ்நிலையில், புலிகள் அதற்கான நற்பலன்களை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் என்றே கருத வேண்டும். உலகத்தின் பார்வை ஈழத்தின்மேல் நோக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன்வழியில் இலங்கையரசின் வெற்றிப்பரப்புரைகளைத் தாண்டி சில நாடுகள் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளன. இது உலகத் தமிழருக்கும் புலிகளுக்கும் கிடைக்கத் தொடங்கயுள்ள வெற்றி என்றே சொல்லலாம். இவ்வெற்றிகள் இன்னும் தொடரும் என்பது உலகத் தமிழரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இனி... புலிகள் நிறைவுறச்செய்யும் தறுவாயில் கொண்டு வந்திருக்கும் மற்றொரு காய்நகர்த்தல் என்ன என்பதைப்பற்றியும் அதன் பலாபலன்கள் எப்படியிருக்கும் என்பதைப்பற்றியும் பார்க்கலாம்...

முன்னேறிவரும் இராணுவத்தினை அதன் கட்டமைப்புரீதியாகவும் படையினரின் உளவுரண்ரீதியாகவும் இயன்றவரை பலவீனப்படுத்துவதென்பதே அக்காய்நகர்த்தலின் தந்திரோபாயதத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அதாவது தம்மை நோக்கி முன்னேறி வரும் எதிரியை வரும்வழியிலேயே முடிந்தவரைக்கும் இழப்புகளை ஏற்படுத்தி பலவீனப்படுத்தி தம் வாசல்வரை வரவைப்பது. தாம் திருப்பித் தாக்கத் தொடங்கும்போது அவனால் திருப்பி ஓடக்கூட முடியாமல் திணறும்போது எதிரியை ஒட்டு மொத்தமாக அழிப்பது என்பதுவே அதன் திட்டம். இப்பொழுது அத்திட்டம் ஈடேறிவரும் நிலையில்...
இந்த மிகமுக்கியமான தருணத்திற்காகத்தான் புலிகள் எதிரியை தங்கள் வாசல்வரை வரும்வரைக்கும் அனுமதித்து இதுவரை பின் வாங்கியிருக்கின்றார்கள்.

இலங்கை அரசும், இராணுவமும் சொல்வதனைப் போலல்லாது, உண்மையிலேயே சிங்கள இராணுவம் மிகவும் பலமிழந்து, ஆளணியிழந்து, களைப்படைந்து உளவுறுதியில்லாமல் மிகவும் சோர்வடைந்து வந்து நிற்கிறது. வாசல்வரை வந்துவிட்டோம்... கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நப்பாசையில்தான் இராணுவம் இருக்கின்றது. ஆனால் புலிகளோ...! பாதுகாப்பாக பதுங்கி வந்தவர்கள் இப்பொழுது எதிரிமீது பாய்வதற்குத் தயாராகிவிட்டார்கள். புலிகள் பாயவேண்டிய தருணம் மிகமிக நெருங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆயினும் அவர்கள் பாய்வது உலகத் தமிழரினது எழுச்சியில்தான் தங்கியுள்ளது என்பதனை உலகத் தமிழர்களாகிய நாம் கருத்தில் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில்....

புலிகள் களத்தில் தமது பலத்தினை நிரூபிக்கும்பொழுது அதற்கு உலகநாடுகளை தலைவணங்கவைத்து எமது இறுதி மீட்புப்போரின் வெற்றியால், 'தமிழீழம்" எனும் தனிநாடு உருவாவதனை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு புலத்தில் வாழும் உலகத்தமிழர்களான எங்களின் தலையாய கடமை. இது சர்வதேசத்தினை நோக்கியதான எங்களனைவரினதும் ஒன்றுதிரண்ட பேரெழுச்சியிலேயே தங்கியுள்ளது. புலிகள் உண்மையிலேயே காத்திருப்பது உலகத்தமிழர் அனைவரினதும் ஒன்று திரண்ட பெரெழுச்சிக்காகத்தான். எங்களது எழுச்சிகளும் போராட்டங்களும்தான் பெருமாற்றங்களை கொண்டு வரப்போகிறது. ஆதலினால்... எமது எழுச்சிகளையும் போராட்டங்களையும் ஓயாத அலைகாளாய் ஓய விடாமல் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்...! எம் தேசத்தின் விடிவுவரை.......!
புலிகள் தமது பதில்தாக்குததலை ஆரம்பிக்கும்பட்சத்தில் அதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கும் என பார்ப்போமானால்,

ஏற்கனவே பல இடங்களில் அடிவாங்கி சோர்ந்துபோன நிலையில் புலிகளின்வாயிலில் வந்து நிற்கின்றது இராணுவம். அது இப்போது புலியின் வாயில் வந்து நிற்கின்றது என்று சொன்னால் சாலப்பொருந்தும். புலிகளிடமுள்ள ஆளணி எண்ணிக்கையை யாருமே அறியமாட்டார்கள். ஆனாலும் கடந்தகால தரவுகளின்படி ஆகக்குறைந்தது இருபத்திஜயாயிரம் போராளிகளாவது இருப்பார்கள் என ஊகத்தின் அடிப்படையில் கணிக்கலாம். அத்துடன் வன்னியில் இப்பொழுதிருக்கும் ஏற்கனவே ஆயுதப்பயிற்சிபெற்ற 'மக்களணிகள்" அங்கு நடந்தேறும் கொடூரமான அவலங்களைக் கண்ணுற்று உணர்வெழுச்சிகொண்டு தற்பொழுது புலிகளாகவே மாறியிருக்கிறார்கள். புலிகளுடன் சேர்ந்த அம்மக்களனைவரும் சேர்ந்து தீரமுடன் பொங்கியெழுந்து... புலிகளிடமுள்ள அத்தனை ஆயுதங்களும் குண்டுகளை கக்கும்போது... முன்னரங்கில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தின் நிலை என்னவாகும் என்பதை சொல்லத்தேவையில்லை. ஓர்மமும் தியாக உணர்வுங்கொண்ட தீரமிக்க போராளிகளின் தாக்குதல்களுக்குமுன்னால் சம்பளத்திற்காகச்சேர்ந்த கூலிப்படைகளான சிங்களப்படைகள் எந்தளவுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதையும் சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.

இராணுவத்தின் ஆளணிப்பற்றாக்குறை காரணமாக, அதனால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள்யாவும் மிகமிகக் குறைந்தளவிலான ஆளணிகளினாலேயே பாதுகாக்கப்பட்டுவருகிறது. அவர்களும் ஓடத்தொடங்கி தாங்கள் போரைத்தொடக்கிய இடத்தினை தொடுவதற்குள், முன்னரங்கை உடைத்து உள்நுழையும் புலிகள் அணியினாலும், ஏற்கனவே ஊடுருவியுள்ள புலிகளணியினராலும் அழிக்கப்படப்போவதனை யாராலும் தடுக்கமுடியாததாகிவிடும்.மீளமுடியாத இழப்புக்குள் அடங்கிப்போகும் இராணுவத்தினால் மீள எதுவுமே செய்யமுடியாது செயலிழந்து போகும். அதன் கட்டமைப்பு முற்றுமுழுதாக சிதைக்கப்படும். அதற்கு அப்புறம் இலங்கையரசினால் இன்னுமொரு இராணுவ நடவடிக்கையினை மனதளவினில்கூட நினைத்துப்பார்க்க முடியாததாகிவிடும். இதனை செய்வதற்காகத்தான் புலிகள் மிகவும் பொறுமையுடன் தருணம்பார்த்து காத்திருக்கிறார்கள். அனைத்துத் தமிழ்மக்களும் அந்த இறுதிமீட்புப்போர் எப்பொழுதென்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

உலகத்தமிழ்மக்களே! உச்சக்கட்டத்திற்கு செல்லும் உங்களது ஓயாத பேரெழுச்சிதான் அந்த மீட்புப்போரை ஆரம்பித்துவைக்கும். அதை வெற்றப்பாதைக்கும் இட்டுச்செல்லும். புலிகள் காத்திருந்த காலம்போய்... இப்பொழுது எதிர்பார்த்திருக்கிறார்கள் பாய்வதற்கு. தொடக்கிவைப்பதும் வெற்றிகரமாக முடித்துவைப்பதும் உங்கள் கைகளில்தான். எனவே... ஓயவிடாதீர்கள் உங்கள் பேரெழுச்சியை. தமிழ்படையாம் நம் புலிப்படையின் தீரமிகு பாய்ச்சலினாலும் உலகத்தமிழர் நம்மனைவரினதும் வீறுகொண்ட பேரெழுச்சியினாலும் சிங்களத்தின் வெற்றிக்கனவை தகர்த்தெறிந்து வெற்றியை எமதாக்கி இழந்த நம் நிலங்களை மீட்டெடுத்து தமிழீழ தேசத்தினை உருவாக்குவோம். எம் மாவீரர்களின் கனவை நனவாக்குவோம். இது உறுதி!

பருத்தியன்

http://www.tamilwin.com/view.php?2a26QVZ4b33Z9Eg04dcuWnZdb0eD7GG24d2YYpD3e0dLZLuwce03g2hF2cc4Vj06ae

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் பீரங்கி தளத்தை கைப்பற்றி தாக்குதல் நடத்தியுள்ளனர்: கொழும்பு இணையத்தளம்

 
 
சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றி அதனைக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது.
படையினரின் பிரதேசத்திற்குள் 12 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவிய விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த பீரங்கி தளத்தை கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்த 130 மி.மீ பீரங்கிகள் மூன்றை கைப்பற்றி அதனைக்கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற மோதல்களில் 200 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பளை, கிளாலி இராணுவ நிலைகள் நோக்கி புலிகள் ஆடடிலெறி தாக்குதல் - படைதரப்பு அதிர்ச்சியில்

 
 
யாழ்ப்பாணம் பளை, கிளாலி, மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளிலுள்ள படை முகாம்களை நோக்கி நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 
ஏ-9 வீதியை இலக்குவைத்து நேற்றிரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல்வரை நீடித்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 
விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகளில் பல சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. விடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துகள் யாழ் குடாநாட்டிற்கு ஏ-9 பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தப் பேரூந்துகளாக இருக்கலாம் என படைத்தரப்பு எண்ணுகின்றது.

 
ஏனெனில் உணவுப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள் தென்மராட்சியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகளும் தென் பகுதியில் இருந்து அங்கு வந்து சேர்ந்து விட்டதாக  கூறப்படுகின்றது.

 
விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளாலி முன்னரங்க நிலைகளுக்கு அண்மையாக இருந்த மக்கள், மற்றும் விடத்தல்பளை, உசன் போன்ற பிரதேச மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், பொதுமக்கள் அற்ற படையினரது முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் நோக்கியே விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 
முன்னரும் பல தடவைகள் தென்மராட்சியிலுள்ள மிருசுவில், வரணி, மற்றும் பலாலி படைத்தளங்கள் நோக்கி துல்லியமான எணிகணைத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

 
ஏ-9 நெடுஞ்சாலை ஊடாக யாழ் குடாநாட்டிற்கான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அறிவித்த சிறீலங்கா அரசும், அதன் படைகளும், அந்த உணவுப் பாரவூர்திகளின் கவசத்துடன், யாழ் குடாநாட்டிற்கான படையினர், மற்றும் படைத்துறை வழங்கலை மேற்கொண்டுள்ளனர்.

 
இந்தத் தகவல் விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தெரிய வந்தது என்றும் விடுதலைப் புலிகள் இலக்கு வைத்து நீண்ட தூரம் ஆட்டிலெறித் தாக்கதலை நடத்துவது எவ்வாறு என்று குழப்பத்திலும்  சிறீலங்கா படைத்தரப்பு தற்பொழுது இருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
 

கடந்த இரு மாதங்களில் 2867 பேர் வன்னியில் கொல்லப்படிருப்பதாக புலிகள் அறிவித்துள்ளனர்

 
2009ம் ஆண்டின் தொடக்கம் முதல் இன்று 10.03.2009 வரை சுமார் 2867 பேர் இறந்துள்ளதாகவும்,நேற்றைய தினம் மட்டும் 18 சிறுவர்கள் இறந்திருப்பதாகவும் நிர்வாக சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத் தாக்குதலில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் புதுமத்தளான் பகுதிமீது இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று வெடிக்காத நிலையில் வந்து வீழ்ந்ததில் மூவர் மரணித்ததாகவும் அதில் ஒருவர் மீது எறிகணை வீழ்ந்ததில் அவர் உடல் இரு கூறாக பிளவடைந்து பரிதாபமாக இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தால் ஏவப்படும் ஆட்டிலறி வகை ஏறிகணைகள் பல வெடிக்காத நிலையிலும் கூட அவை உயிராபத்தை தோற்றுவிப்பதாக கூறப்படுகிறது. இன்றைய தினம்(10.03.2009) அதிகாலை 2.30 மணியளவில் இலங்கை இராணுவம் மீண்டும் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், பல மாதக்கணக்காக மக்கள் பதுங்கு குழிகளுக்குள் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் பருவமழை காரணமாக பதுங்கு குழிகளிலும் நீர் உட்புகுந்துள்ள போதும், மக்கள் கை கால்கள் நீரினால் விறைப்படைந்த நிலையிலும் பதுங்கு குழிகளுக்குள் இருப்பதாக விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.
http://www.swisstamilweb.com/

யேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு

 
 
ஈழத் தமிழரின் பேரவலம் கண்டு தம்முயிர்களை தற்கொடையாக்கி தீக்குளித்த வீரத் தமிழர்களுக்கான, சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு யேர்மனியில் நடைபெற்றது.
யேர்மனி றைனெ வெற்றிங்கன் நகரில் வாழும் சைவ - கத்தோலிக்க தமிழ் மக்கள் இணைந்து நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (08.03.2009) காலை 10:00 மணியளவில் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.
முதலில் இறைனீச்சுரம் சிவன் கோவிலில் சைவ சமய வழிபாட்டு முறைகளுடன் தமிழ்மொழி மூலம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை பூசகர் சபாநாத சர்மா சிறப்பாக நடத்தி வைத்து உரையாற்றினார்.
இந்த இறைனீச்சுரம் சிவன் கோவில் தாயகத்தில் வயல் வெளிகளின் நடுவே அமைதியான சூழலில் அமைந்துள்ள சைவக் கோயில்களை நினைவுபடுத்துவதாக இருந்தது.
இக்கோயிலில் தமிழ்மொழி மூலம் திருமண நிகழ்வுகள், சடங்குகள், வழிபாடுகள் நடைபெறுவதுடன் யார் வேண்டுமானாலும் வழிபாட்டை நடத்தலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதே கட்டடத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் அருட்திரு இமானுவேல் அடிகளாருடன், தமிழகத்தைச் சேர்ந்த தற்போது பெல்ஜியத்தில் பணிபுரியும் அருட்திரு ஜீவா லூர்துவும் இணைந்து இலங்கைத் தீவில் சமாதானம் வேண்டியும், தீயில் சங்கமித்தோருக்கான ஆன்ம இளைப்பாற்றிற்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
ஏறத்தாழ 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த வழிபாட்டில் உரையாற்றிய இமானுவேல் அடிகளார் இறை வழிபாட்டுடன் நின்று விடாமல் விடுதலைப் பயணத்தின் நீண்ட பாதையில் தமிழ் மக்கள் தொடர்ந்து தமது பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.
"போதும் சகோதரரே உங்கள் தற்கொடை. திருப்பித்தர எம்மிடம் ஒன்றுமில்லை எம் பிரார்த்தனையைத்தவிர" என்பதாக அமைந்திருந்தது இந்நிகழ்வு.

 

http://www.puthinam.com/full.php?2a27WRA4b331aIe04dcpOs3db0eI7CI34d3KVqH3e0dLYOrzce03f6d12cc4Uk06be

படையினரின் பகுதிகளுக்குள் இன்று அதிகாலையும் புலிகள் ஊடுருவித் தாக்குதல்

 
 
99caudiw8ocatprt9acaamnu9icaa4eu7ccaym61mnca61hmsdcae8l9pjca7szg27ca0435rmca1pa6wyca01bp35camcv0vhcaggsig4cayz2ut7cawa7j7icah77tfvcan9om4b1விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எனக் கூறப்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதிகளில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீது இன்று அதிகாலை முதல் விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குதல் ஒன்றை நடத்தியதாகத் தெரியவருகிறது. இத்தாக்குதல் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத் தரப்புடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
இந்த ஊடுருவித் தாக்குதல்களை நடத்திய புலிகளின் படைப்பிரிவுகள் மீண்டும் திரும்பியிருக்கவில்லை எனவும் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீண்டதூரம் ஊடுருவிச் சென்றிருக்கலாம் எனவும் படைத்தரப்பு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
 
இந்த மோதல்களின் போது விடுதலைப் புலிகள் ஒரு தொகுதியினரின் சடலங்களை தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படையதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இந்த சடலங்களின் எண்ணிக்கை 80 வரையில் இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
பதிலுக்கு படைத்தரப்பும் கணிசமான அளவில் இழப்புக்களைச் சந்தித்திருப்பதாக தெரியவருகிறது. அண்மையில் புதுக்குடியிருப்புச் சந்திவரையிலான பகுதிகளை பெரும் முயற்சியின் பின் படையினர் கைப்பற்றி இருந்தனர். விசுவமடுவில் இருந்து புதுக்குடியிருப்பு வரையில் படையினர் கைப்பற்றி இருந்த பகுதிகளுடாகவே ஊடுருவித் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
 
ஏற்கனவே விஸ்வமடுப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றனை படைத்தரப்பு உறுதிப்படுத்தி இருந்தது.
 
எனினும் இந்த மோதல்களில் 150 வரையிலான சடலங்களை தாம் மீட்டதாக படைத்தரப்பினர் தெரிவித்திருப்பதோடு பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் சிலவற்றின் படங்களை பிரசுரித்தும் உள்ளனர்.
 
இந்த நிலையில் முன்னோக்கிச் செல்லும் படையினரை ஊடறுத்து தாக்கும் புலிகளின் அணிகளில் கொல்லப்படுபவர்கள் தவர்ந்த ஏனையோர் படையினர் கைப்பற்றி தமது நிலைகளை உறுதிப்படுத்திய பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவிச் செல்வதாக படைத்தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
 
அதனால் தற்போது படையினரின் முன்னேறித் தாக்குதல் தந்திரோபாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் புலிகளை எதிர் கொள்ள சில அடுக்கு படையணிகளை பின்நோக்கி நகர்த்தும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும் படைத்தரப்பில் இருந்து தெரியவருகிறது.

http://www.nerudal.com/nerudal.1585.html

தினமலர்;இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகளா?

இலங்கையில் இன்று காலை மசூதி அருகே குண்டு வெடித்ததில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். மூன்று அமைச்சர்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த செய்தி இன்று அநேக இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது.
 
ஆனால் தினமலர் பத்திரிக்கை மட்டும் இது விடுதலைப்புலிகள் நடத்தியது என்று செய்திவெளியிட்டு உள்ளது.இன்னும் புலிகள் இதை பற்றி தகவல் எதுவும் வெளியிடாத நிலையில் இதுவும் இலங்கை அரசே செய்து புலிகளின் மீது பழி போடுவதாகவே பொய் பரப்புரை நடத்துவதாகவும் இருக்க முடியும்.

Monday, March 9, 2009

அவசர அழைப்பு:ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் உண்ணாநிலை போராட்டம்

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதற்கு தயாராகுமாறு தமிழகம் சென்னையில் இருந்து தமிழக மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.

 
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய‌ இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக‌ இருக்கின்றனர்.

 
பச்சிளம்குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இள‌ம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த‌ அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 
இந்திய அரசை கண்டித்தும் சர்வதேச சமுதாயத்தின் கண்களைத் திறப்பதற்கும் தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 
இதன்படி 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தியா, இலங்கையில் உள்ள‌ தாயகத் தமிழர்களும், 130 நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களும் 12 மணி நேர உண்ணாநிலையை (இரு வேளைகள்) கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், யார் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வீடுகளில் இருப்போரும், பணியிடங்களில் இருப்போரும் தத்தமது இடங்களில் உண்ணா நிலையை தவறாது கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
இந்த போராட்டத்தினால் பலன் இருக்காது என்று எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் அனைவரும் இந்த‌ மாபெரும் போராட்ட‌திற்கு ஒத்துழைப்பு ந‌ல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.பணியிடங்களிலோ, மற்ற‌ இடங்களில் இருந்து கொண்டோ நீங்கள் நடத்தும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் மற்றவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கங்கள், தொழிலாளர் நலச் சங்கங்கள், கட்டுமான தொழிலாளர்கள், சிறைகளில் இருக்கும் கைதிகள் மற்றும் திரளானோர் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள்.

 
ஆகவே, புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அமைப்பினர் இந்த உண்ணாநிலைப் போரட்டத்தை தத்தமது நாடுகளில் உத்வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 
பார்வையற்றோர் 6 பேர் இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களால் முடியும் போது நாம் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது பெரிய காரியமில்லை.

கொத்துக் கொத்தாக மடியும் உறவுகளைக் காக்க
அனைவரும் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!

 
இவ‌ண்
தமிழக மாணவர் கூட்டமைப்பு
சென்னை.

புலிகளின் குரல் இணையதளத்தில் எந்த பிரச்சனையும் இல்லை

தமிழீழ மக்களுக்கு மட்டும் என்று இல்லாமல் உலகத் தமிழர்களின் இதயக்குரலாம் புலிகளின் குரன் இணையதளம் நேற்று இரவு வேளையில் திடிரென்று உள்நுழைய முடியாதவாறு தடை காணப்பட்டத்தை உங்கள் அனைவரின் பார்வைக்கும் நாம் வைத்தோம்.இன்று காலை முதல் "புலிகளின் குரல்" வளமைபோல் செயல் படுகிறது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

பீகார் சர்ச்சில் குண்டுவீச்சு - பாதிரியார் உட்பட 5 பேர் படுகாயம்

       
 
ரோதாஸ், மார்ச் 9- பீகார் மாநிலத்தில் தேவாலயம் மீது குண்டுவீசப்பட்டது. தப்பியோட முயன்ற பாதிரியார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பாதிரியார் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டம் நசாரிகன்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாதியா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இது 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு நேற்று மாலை வினோத்குமார் ஜேம்ஸ் என்ற பாதிரியார் 70க்கும் மேற்பட்ட கிராமமக்களுடன் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் ஜன்னல் வழியாக நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
குண்டுவெடிப்பில் தப்பிய பாதிரியாரும் மற்றவர்களும் வாசல் வழியே தப்ப முயன்றனர். அப்போது வாயிலில் கையில் துப்பாக்கியுடன் தயாராக இருந்த வாலிபர் சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டார். இதில் பாதிரியாரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். துப்பாக்கியில் குண்டு தீர்ந்தவுடன் அந்த இடத்திலிருந்து வாலிபர் தப்ப முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

காயமடைந்த பாதிரியார் மற்றும் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாதிரியாரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இதற்கிடையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் பட்டதாரி என்பதும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக இந்த நடவடிக்கையில் இறங்கியதாகவும், துப்பாக்கியில் குண்டு தீர்ந்திருக்காவிட்டால் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என போலீசாரிடம் வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். 
 
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=818

Sunday, March 8, 2009

இந்து பத்திரிக்கையின் செய்தி:மஹிந்தாவின் பொய் பரப்பல்களுக்கு வேட்டு வைத்த இலங்கை பிரதமர்.

 
விடுதலைபுலிகளுடனான போர் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை போர் நீடிக்கும் என்று இலங்கை பிரதமர் விக்ரமநாயக்கே தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை இந்து பத்திரிக்கை இன்று(9.3.2009) வெளியிட்டு உள்ளது.
 
புலிகளை முற்றாக அழித்து வருகிறோம்,இன்னும் 45 கிலோ மிற்றர் மட்டுமே புலிகளிடம் எஞ்சியுள்ளது என்று பொய் பரப்புரையாற்றி வந்த மஹிந்தா கொலைகாரக்கூட்டத்துக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுதியிருக்கும்.
 
முன்னுக்கு பின் முரணான செய்திகளை பரப்பி மனதளவிலான வெற்றியை எப்படியும் பற்றி பிடித்துவிட அவர்கள் போட்டுள்ள கணக்கு தவிடு பொடியாக வன்னிக் களம் மற்றி வருகிறது.
 
இந்த நிலையில் எதிர்வரு 72 மணி நேரம் மிகப்பெரிய முடிவுக்கு வழிநடத்திச்செல்லும் என்று படைத்தரப்பு அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
புலிகள் பாரிய ஊடறுப்புத்தாக்குதலை நடத்தி வரும் நிலையில் பலத்த சேதத்தை அடைத்துள்ள ராணுவத்தில் பல அணிகள் நிலைகுலைந்தே உள்ளது என்பது நமக்கு அறியத் தரப்படாத விடயமே.
 
இன்னும் ஒரு சில நாட்களில் களமுனையில் போராளிகளில் உச்சக்கட்ட தாக்குதலுக்கான சமரை எதிர்பார்க்கலாம்.
 

 

தமிழரின் உரிமைப் போராட்ட வரலாற்றில் இருந்து படிக்கவேண்டிய பாடங்கள்

 
 
காலகண்டன்

உலகின் எந்தவொரு அரசாங்கமும் தமது ஒடுக்குமுறை நிகழ்ச்சி நிரலை மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கை என ஒப்புக்கொள்வதில்லை. தமது செயற்பாட்டை நியாயப்படுத்த தீவிரவாதம், பயங்கரவாதம். பிரிவினைவாதம் ஆட்சிக்கு எதிரான சதி முயற்சி போன்ற பெயர்களைப் பயன்படுத்திக் கொள்வர் . அவற்றைப் பரப்புரை செய்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிக் கொள்ள பலமான ஊடக வலையமைப்பையும் கைகளில் வைத்துக்கொள்வார்கள். அதன் மூலம் அரசாங்க அடக்குமுறைகளுக்குப் பின்னால் காணப்படும் பலவேறு உண்மைகளும் யதார்த்தங்களும் மறைத்துக் கொள்ளப்படும்.

ஒவ்வொரு பிரச்சினைக்குப் பின்னாலும் சமூக முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இருந்து வரவே செய்கின்றன. அவற்றின் காரணமாகவே அரசியல் சமூகப் பிரச்சினைகள் தாழ் நிலையில் இருந்து உயர் நிலைக்கு வளர்ச்சி பெறுகின்றன. அந்த வளர்ச்சியின் உயர்ந்த கட்டத்திலேயே போராட்டம், யுத்தம் என மாற்றம் பெறுகின்றன. இத்தகைய நெருக்கடிச் சூழலில் தமது நாட்டின் சொந்த மக்களை அடக்கி ஒடுக்குவதில் எந்தவொரு அரசாங்கமும் பின்நிற்பதில்லை. ஏனெனில், தமது ஆட்சி அதிகார இருப்பின் தேவையானது பரந்துபட்ட மக்களின் தேவைகள் அபிலாசைகளுக்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் சமூக அமைப்பில் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டோரின் சொத்து சுரண்டல் சுகபோக வாழ்வுக்கு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதையே அரசாங்கங்கள் முழு முதல் கடமையாகக் கொண்டுள்ளன. இவையே ஒட்டுமொத்த அரசியலின் அடிப்படையாகவும் இருந்து வருகின்றன.
இத்தகைய நிலைமைகளை அனுபவ வாயிலாகக் கண்டறிவதற்கு உலகின் வேறு நாட்டுக்குச் செல்ல வேண்டியதில்லை. நமது நாட்டின் கடந்த கால , நிகழ்கால அனுபவங்கள் போதுமானவையாகும். கடந்த அறுபது வருடகால பாராளுமன்ற ஆட்சி அதிகார அமைப்பின் கீழ் அதிகாரத்திற்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்கள், தேவைகள், அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றிற்கு விரோதமாகவே இருந்து வந்துள்ளன. அவற்றின் காரணமாக உருவாகி வளர்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அவற்றை வளரச் செய்வதற்கே இடம் வைத்து வந்துள்ளன. அவை சார்பாக மக்கள் குரலெழுப்பி போராட முன்வந்த பேதெல்லாம் அடக்குமுறை இயந்திரம் முழு வேகத்துடன் ஏவப்பட்டது. இத்தகைய நிலைமை தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றன.

வடக்கில் வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு கடலோடு அருகமைந்த சிறிய நிலப்பரப்பிலே நடைபெற்று வரும் யுத்தம் மிகக் கொடூரமானதாகும். ஏற்கனவே சிங்கள இளைஞர்கள் மேற்கொண்ட இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளின் போதும் பின்வந்த இயற்கை அழிவான கடல்கோளின் போதும் அனுபவித்தவைகளை விடக் கொடுமையானவற்றையே இன்று புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். சகல திசைகளாலும் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட அப் பிரதேசத்தில் முற்றுகைத் தாக்குதல்களுக்கு மத்தியில் வாழ்வா, சாவா என்ற நிலையிலேயே மக்கள் அன்றாடம் உயிரிழப்புப்பொழுதுகளைக் கழித்து வருகின்றனர்.

சுமார் முப்பத்தையாயிரம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளனர். அவர்கள் கூட இலகுவான வழிகளில் வரவில்லை. நெருப்பாறு கடந்தே வந்துள்ளனர்.அப்படி வந்தவர்கள் கூட நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கவில்லை. தமது உறவுகளையும் உற்றாரையும் தாக்குதல்களுக்குப் பலிகொடுத்துவிட்டும் எஞ்சியிருப்போரைப் பிரிந்துமே வந்திருக்கிறார்கள்.

பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழிப்பது என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த யுத்தத்தின் மூலகாரணம், இன முரண்பாட்டுப் பிரச்சினையேயாகும். தேசிய இனப் பிரச்சினையாக வளர்ச்சி கண்ட வரலாற்றுப் போக்கில்அதற்குரிய அரசியல் தீர்வு என்றுமே காணப்பட்டதில்லை. தீர்வுக்கான முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட போதிலும் பேரினவாத சக்திகளின் தீவிர தலையீட்டாலும் தீர்வுகள் எனப்பட்டவற்றின் போதாமைகள் காரணமாகவும் எல்லாம் முடிந்த கதைகளாகிக் கொண்டன. இதன் தொடர்ச்சி தான் இன்றும் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னையவைகளை விட மும்முரம் காட்டி நிற்கின்றன. வெறும் ஒப்பிற்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசப்படுகிறதே தவிர, அரசின் இலக்கு அதுவல்ல.

இத்தகைய போக்கின் உச்சத்தையே இன்று புதுக்குடியிருப்பில் காண முடிகின்றது. அரசாங்கம் அங்கே சிக்குண்டுள்ள மக்கள் மீது கவலை கொண்டுள்ளமை போன்று ஒரு காட்சியினைக் காட்டி வருகிறது. அதற்குக் காரணம், இந்தியாவிலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் எழுந்துள்ள வன்னி மக்களுக்கான அனுதாப நிலையேயாகும். முல்லைத்தீவுக்கு வடக்கே தாக்குதலற்ற பிரதேசத்தைப் பிரகடனப்படுத்தி அதன் ஊடாக மக்களின் வெளியேற்றத்தை அரசாங்கம் எதிர்பார்த்து நிற்கிறது. ஏற்கனவே காயப்பட்ட நோயாளர்கள், பெண்கள், வயோதிபர்கள் இப்பகுதியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். அத்தகையோர் அனுபவிக்கும் துயரங்கள் விபரிக்க முடியாதவைகளாகும். ஏன்தான் உயிரோடு வந்தோம் என்று வாய்விட்டுக் கதறி அழும் நிலைக்குப் பலர் உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு கட்டாயத்தடுப்பு என்றால் இங்கு திறந்த வெளிச்சிறை வாழ்வுதான் . அத்துடன் கையேந்தி நிற்கும் அவல வாழ்வு. ""யாரோடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்' என்ற விரக்தி நிலையில் தான் வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்த மக்கள் கண்ணீர் கதைகளுடன் இருந்து வருகின்றனர்.

அதேவேளை, புதுக்குடியிருப்பின் சிறிய நிலப்பரப்பில் சுமார் இரண்டு இலட்சம் பேர் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கம் 70 ஆயிரம் பேர் மட்டுமே சிக்குண்டிருப்பதாகக் கூறுகிறது. அம் மக்களை புலிகள் இயக்கம் மனிதக்கேடயங்களாகத் தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறி வருகிறது. அம் மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளாகவே விமானக் குண்டு வீச்சும் பீரங்கித்தாக்குதல்களும் தரைவழி முன்னேற்றங்களும் நடத்துவதாக அரச ஊடகங்கள் ஓயாது பிரசாரம் செய்து வருகின்றன. மறுபுறத்தில் தமது இருப்பிற்கான தேவை காரணமாக மக்களை சுதந்திரமாக வெளியேற விடாது புலிகள் இயக்கம் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க அதுவே தமக்குரிய பலம் என புலிகள் இயக்கம் நம்புவதாகவும் கூறப்படுகிறது. தமது தாக்குதல் வீச்சின் எல்லைகள் சுருக்கமடைந்தநிலையில், தற்காப்பிற்கும் இருப்பிற்கும் உரிய உத்தியாக யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை அண்மையில் புலிகள் இயக்கம் வெளியிட்டது. அதனை எவ்வித காலதாமதமும் இன்றி அரசாங்கம் நிராகரித்துக் கொண்டதுடன், புலிகள் இயக்கத்தைச் சரணடையுமாறு கூறி பதில் விடுத்துள்ளது. எப்படியும் இன்னும் சில நாட்களில் புலிகளையும் அவர்களது பயங்கரவாதத்தையும் அழித்து இறுதி வெற்றி இலக்கை அடைந்து விடப்போவதாகவே ஜனாதிபதி முதல் இராணுவத்தளபதி வரை சூளுரைத்து வருகின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் புலிகள் இயக்கத்தின் இருப்பிற்குமான இன்றைய புதுக்குடியிருப்பு யுத்த களத்திலே மக்கள் உச்சநிலை அவலங்களிடையே அகப்பட்டு நிற்பது தான் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இம்மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனமும் ஒரு இருண்ட அரசியல் பாலைவனத்தில் திக்குத் திசை தெரியாது தவித்து நிற்க விடப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள்? எவ்வாறு பொறுப்புக் கூறப் போகிறார்கள்? இவையாவற்றுக்கும் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் மட்டும் பொறுப்புதாரிகள் ஆகிவிட முடியாது. அவர்கள் பெரும்பகுதிப் பிரச்சினைகளுக்கு காரணமாகிய போதிலும் தமிழ்த் தேசிய இனத்தை வழி நடத்தி அழைத்துச் சென்ற அனைத்துத் தலைமைகளும் இதற்குப் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும். இவை அரசியல் களத்தில் ஆழ்ந்து சிந்திக்கப்படவும் வேண்டும். சுமார் முக்கால் நூற்றாண்டு கால இலங்கையின் அரசியல் வரலாற்றின் சகல பக்கங்களும் தெளிவாகப் படிப்பிக்கப்பட வேண்டும். அதில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் சாதக, பாதக நிலைப்பாடுகளின் தொடர்ச்சி உரியவாறு அலசி ஆராயப்படல் வேண்டும்.

காலத்திற்குக் காலம் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் எடுத்து வந்த இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் அதற்கு எதிர் வினையாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ்த் தலைமைகளின் கொள்கை நிலைப் போராட்ட வழிமுறைகள் பற்றியும் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார, அரசியல், புவியியல், வரலாற்றுச் சூழலின் வளர்ச்சிகளை உரியவாறு அடையாளம் கண்டு நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பது தீர்க்கமான முறையில் தீர்மானித்திருக்கவேண்டும். அப்படியான ஒருகொள்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் எதிரிகள் தனிமைப்படுத்தப்படவும் நேசசக்திகள் தமிழ் மக்கள் பக்கமும் இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கும். அதன் விளைவு வெவ்வேறு வழிகளில் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு பலம் சேர்த்திருக்க முடியும்.

உள்நாட்டு அணுகுமுறைகளில் இழைக்கப்பட்ட தவறுகள் மட்டுமன்றி, இந்திய பிராந்திய மேலாதிக்கத்தையும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களையும் நம்பி ஏமாந்து நடுத்தெருவுக்கு வந்துள்ள அவலத்தையே இன்று தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் எதிர்கொண்டு நிற்கின்றன. இத்தகைய அரசியல் அவலம் தொடர்வதால் ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கு விடிவு கிடைத்துவிடமாட்டாது. அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தின் அதன் எதிர்காலம் நிலைப்பிற்கும் ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனமும் பலியாக்கப்படக்கூடாது. அவ்வாறே புலிகள் இயக்கத்தின் இருப்பிற்கும் நிலைப்பாட்டுக்கும் 2 இலட்சம் மக்கள் பாதுகாப்பு வேலியாக்கப்பட்டு அழிவுகளுக்கு உள்ளாக்கப்படக்கூடாது. அம்மக்கள் பாதுகாப்பாக புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு சுதந்திரமாக வாழவிடப்படவேண்டும்.அதுவே முதற்பணியாக இன்று காணப்படுகின்றது.

 

 
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails