Saturday, January 31, 2009

ஈராக்கில் இரு வேட்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்

 

ஈராக்கில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் சன்னி முஸ்லிம்களின் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுளார்கள்.

 

ஈராக்கில் உள்ள 18 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி  14ல்  நடக்க இருக்கிற நிலையில் சன்னி முஸ்லிம்களின் கட்சி சார்பில் வேட்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் கொல்லப்பட்டவர்களில் முதலாவது சம்வம் பாக்தாத்தில் நடந்தது. இதில் வேட்பாளர் ஓமர் பாரூக் அல் அனி துப்பாக்கியால் சுடப்பட்டார். அடுத்தவர் பெயர் ஹாசிம் சலீம் அகமது. இவர் மோசூல் நகரில் தன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தபோது சுடப்பட்டார்.

இதை தொடர்ந்து வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

 

http://www.pathivu.com/news/80/54//d,view.aspx

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails