|
|
|
![]() |
இந்த சம்பவத்தை அடுத்து, நூற்றுக் கணக்கான பிரஞ்சுத் தமிழ் மக்கள் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பாரிஸ் நகரத்திலுள்ள லாச்சப்பல் பகுதியில் ஒன்று கூடி, ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி. முத்துக்குமார் அவர்களை நினைந்து, அவரது உயிர்த் தியாகத்திற்கு தலை சாய்த்து அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர். இதே நேரம் இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள, உலக அதிசயங்களுள் ஒன்றான ஈகிள் கோபுர முன்றலில் உண்ணாநோன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசும், இராணுவமும் முனைப்புக் காட்டி நிற்கிறது. இந்த சம்பவங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலேயே, உலக அதிசயம் முன்பாக உண்ணா நோன்பு நடவடிக்கை ஓர் ஈழத்தமிழ் உணர்வாளரால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. ![]() ![]() ![]() ![]() ![]() |
No comments:
Post a Comment