Tuesday, January 27, 2009

முல்லைத்தீவின் பல பகுதிகளில் மோதல்; இரு தரப்புக்கும் சேதம்: இராணுவ தலைமையகம்

 
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய முல்லைத்தீவு நகரப்பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர் விடுதலைப் புலிகளின் வசம் எஞ்சியுள்ள கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான முன்னேற்ற நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவின் புறநகர்ப்பகுதிகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ள இராணுவ தலைமையகம், இந்த சண்டைகளின்போது விடுதலைப்புலிகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.

கிளிநொச்சிக்கு கிழக்கேயும் இடையிடையே சண்டைகள் நடைபெற்றதாகவும், உடையார்கட்டு, விசுவமடு, போன்ற பிரதேசங்களிலும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bF9ES34d2IWnJ3b02N7GQe4d24YpDce0ddZLuIce0dg2hr2cc0Fj0K3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails