Thursday, January 29, 2009

நிலாவெளி பிரதேசத்தில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

.    
Thursday, 29 January 2009
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை 9.30மணியளவில் நிலாவெளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படையினருக்கும் விடுதலைப்புலிகளின் அணிகளுக்கும் இடையில் நேரடி மோதல் இடம்பெற்றதாக திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். இந்த மோதலில் 4 படையினர் தம்மால் கொல்லப்பட்டதாகவும் பல படையினர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails