Friday, January 23, 2009

ஜெர்மன் விடுத்த போர்நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது

ஜெர்மன் விடுத்த போர்நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது
இலங்கையில் தமிழ் பொதுமக்கள் தொடர்பான மனிதாபிமான காரணிகளைக் கருத்திற் கொண்டு போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஜெர்மன் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணங்களை வழங்கி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களினால் ஜெர்மனிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், எந்தக் காரணத்திற்காகவும் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படமாட்டாதென அரசாங்கம் திட்டவடட்மாக அறிவித்துள்ளது.

 

http://www.swisstamilweb.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails