Wednesday, January 28, 2009

தமிழ் பெண்களை கற்பழிக்கும் சிங்களர்கள் !

 

 

army21.jpg
இலங்கை முல்லைத்தீவில் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வரும் சிங்கள ராணுவத்தினர், விசாரணை என்ற பெயரில் தமிழ் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்து, எரித்துப் புதைக்கும் அதிச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளையங்களில் தாக்குதல் நடத்த மாட்டோம் என சிங்கள அரசு அறிவித்தப் போதிலும், ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுவர், சிறுமியர் உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிங்கள அரசு அமைத்திருக்கும் பாதுகாப்பு வளையங்களில் தங்கியிருக்கும் தமிழ் பெண்களை ராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதுடன், அவர்களை கொலை செய்து, எரித்து புதைப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் 27 இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக அப்பகுதியில் வசிக்கும் சிங்கள தொழிலாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் 25 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்ட சடலங்களை ராணுவத்தினர் எரித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails