Tuesday, January 12, 2010

மனித குண்டுகளாக மாறும் 7 வயது சிறுவர்கள்: இங்கிலாந்து போலீசார் தகவல்

 
 லண்டன், ஜன 11-
 
இங்கிலாந்தில் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, இவை எங்கிருந்து உருவாகிறது என்று இங்கி லாந்து போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
 
அப்போது, இங்கிலாந்தில் ஒரு பிரிவை சேர்ந்த சிறுவர் கள் மனித குண்டுகளாக மாற விரும்புவது தெரிய வந்தது. அவர்கள் 7 வயது முதல் 10 வயது வரை உள்ளவர்கள்.
 
இவர்கள் தொடக்க பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பிட்ட சில வெப்சைட்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
 
பாட புத்தகங்களில், நான் மனித குண்டாக மாற விரும்புகிறேன் என்று எழுதி வைக்கின்றனர் என பள்ளி ஆசிரியர்களே வருத்தப்படுகின்றனர்.
 
இந்த தகவலை தி டெலி கிராப் ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வன்முறை எண்ணம் கொண்ட 228 இளைஞர்கள் மற்றும் "டீன்ஏஜ்" பிரிவினரின் மனதை சீர்படுத்தி நல்வழிக்கு திருப்பும் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டுள்ளது

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails