Thursday, December 31, 2009

பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்துவிடும் அபாயம்

அதிகமான 20 ஓவர் போட்டி பாகிஸ்தான் அணிக்கு ஆபத்து: கேப்டன் யூசுப் எச்சரிக்கை
மெல்போர்ன், டிச.31-
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 170 ரன்னில் தோற்றது. இதுகுறித்து அந்த அணி கேப்டன் முகமது யூசுப் கூறியதாவது:-
 
அதிகமான 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மோசமாக போவதற்கு 20 ஓவர் போட்டிதான் காரணம். எந்த வீரராலும் நிலைத்து நின்று ஆட முடியவில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இங்கிலாந்தில் இந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails