Monday, December 21, 2009

விடுதலைப் புலிகளின் கப்பல் இன்று மதியம் கொழும்பு வந்தது

வி.புலிகளின் கப்பல் இன்று மதியம் கொழும்பு வந்தது 

 

"பிரின்சஸ் கிருஸ்டீனா" என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கப்பலை தாம் கைப்பற்றி இருப்பதாக இன்று காலை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து அதிர்வின் நிருபர் தெரிவித்தார். ஆயுதங்களைக் காவிச் செல்லக் கூடிய இந்தக் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளபோதும், இது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதா இல்லை சர்வதேச போலீசாரின் உதவி நாடப்பட்டதா என்பது போன்ற விபரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இன்று மதியம் கொழும்புக்கு இக் கப்பல் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இக் கப்பல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக் கப்பலின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

சுமார் 90 மீட்டர் நீளமான இந்தக் கப்பலில் பனாமா நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இதை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது என்பது புலனாகிறது. 






source:athirvu


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails