Monday, December 15, 2008

தெண்டுல்கரின் உருக்கமான பேட்டி

 



இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

196 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து சச்சின் புதிய சாதனை படைத்துள்ளார். இது இவருடைய 41வது டெஸ்ட் சதம் ஆகும்.

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட மும்பை மக்களின் காயங்களுக்கு மருந்து தடவும் வகையில், தனது 41வது சதத்தை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெண்டுல்கர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்த சதமும், இந்திய அணியின் வெற்றியும் மும்பையில் நடந்தவவைகளை மறக்கச் செய்துவிடும் என்றோ, அல்லது அங்கு உற்றார், உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்கு நிம்மதி தரும் என்றோ அர்த்தம் இல்லை.

எனது சதம் அங்குள்ள மக்களுக்கு ஏதோ ஒரு சிறிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails