Sunday, December 14, 2008

புஷ் மீது ‘ஷு’வை எறிந்த நிருபர் : ஈராக்கில் பரபரப்பு

 

உலகின் வலிமை படைத்த வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் மீது பத்திரிக்கையாளர் தனது இரு  ஷூ'க்களையும் கழட்டி எறிந்த சம்பவம் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்,  ஈராக் சென்று அந்நாட்டு அதிபருடன் சந்தித்து பேசினார்.   இவர்களின் சந்திப்பு ரகசிய அறையில் நடந்தது.  பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது புஷ்,  மீண்டும் ஈராக் அதிபராக வரும் வாய்ப்பு உள்ளதற்கு அந்நாட்டு அதிபருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர், ஈராக் இப்போது அமைதியாக இருக்கிறது.  இந்த அமைதி நிலவத்தான் ஈராக் மீது போர் தொடுத்தேன்'' என்று பேசிக்கொண்டிருந்தார்.   அந்த நேரத்தில் ஒரு தனியார் தொலைகாட்சி செய்தியாளர் திடீரென தனது இரு ஷூ'க்களையும் கழட்டி புஷ் மீது வீசினார்.

கொஞ்சமும் எதிர்பாராத இச்சம்பவத்தில் சுதாரித்துக்கொண்ட புஷ்,  ஷு'க்கள்  தன் மேல் படாமல் குனிந்து கொண்டார். பின்னர் பாதுகாப்பு வீரர்கள் வந்து அந்த செய்தியாளர்களை பிடித்து சென்றனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=980

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails