Wednesday, December 3, 2008

இந்தியாவை பழிவாங்க துடிக்கும் 50-தீவிரவாதிகள்:திடுக்கிடும் தகவல்கள்

 
 
இந்தியாவை பழிவாங்க துடிக்கும் 50-தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.இந்தியாவில் இது வரை 25-மிக பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.இவற்றில் பெரும்பாலான தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருந்துள்ளது.

இதற்கான ஆதாரங்களை இந்தியா காட்டிய போதும் பாகிஸ்தான் அதனை மறுத்தே வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம்மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் பின்னணியிலும் பாகிஸ்தானின் சதி இருப்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு எல்லாம் காரணமான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர்.அவர்களை ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது.

இதற்காக 50-தீவிரவாதிகள் பட்டியலை தயாரித்து கொடுத்தது.டெல்லி குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முகமது யூசுப்ஷா,ஹபீஸ் முகமது சயீது,லஷ்கர் இ-தொய்பா கமாண்டர் அப்துல் கரீம்,இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய முகமது மசூர் அசார்,முகமது இப்ராகிம் அத்தர் அல்வி,சகூர் இப்ராகிம் மிஸ்திரி,ஷாகித் அக்தர் சயீது,ஷகீர் முகமது,அசார் யூசுப்,1993-ல் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல்,சாகிர் சபீர்,அப்துல் ரசாக்,இஷாக்,ஆட்டோ உசேன்,டைகர் இப்ராகிம்,அ்யூப் மேமன் உள்ளிட்ட தீவிரவாதிகள் பெயர்கள் அடங்கிய அந்த பட்டியலை பாகிஸ்தான் வாங்க மறுத்து விட்டதுடன் அந்த பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் இல்லை என்றும் கூறியது.

இது பற்றி இந்தியா அப்போது அமெரிக்காவிடம் முறையிட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த 50-தீவிரவாதிகளில் 30-பேர் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.20-பேர் இருக்கும் இடம் பாகிஸ்தான் அரசுக்கு தெரியும்.அவர்கள் இந்தியாவை பழிவாங்க திட்டம் தீட்டி வருகின்றனர்.

மும்பை தாக்குலையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் இந்திய அரசு பாக்.கில் தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.பாகிஸ்தானும் 10ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தியா கொடுத்த தீவிரவாதிகள் பட்டியலை வாங்கி கொண்டுள்ளது.இந்திய புகாரின் பேரில் அமெரிக்காவும் பாகிஸ்தானை நிர்ப்பந்தித்து வருகிறது.

பாகிஸ்தான் அந்த தீவிரவாதிகளை ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீண்டும் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும்.

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1228294466&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails