Friday, December 26, 2008

சிங்கள ராணுவத்துடன் மோதல் - 43 புலிகள் பலி

சிங்கள ராணுவத்துடன் மோதல் - 43 புலிகள் பலி



இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வருகிறது. முல்லைத்துவு அருகே உள்ள குல முரிப்பு என்ற இடத்தில் இயங்கி வந்த விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமை ராணுவத்தினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் வயர்லஸ் இணைப்புக்காக இயங்கி வந்த போபுரம் ஒன்றையும், ராணுவம் தங்கள் வசம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் கிறிஸ்துமஸ் நாளில் நடந்த சண்டையில், 28 விடுதலைப்புலிகள் இறந்தனர் என்றும், யாழ்ப்பாணம்-கிளிநொச்சி வரையான பகுதிகளில் நடந்த மோதலில், 15 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails