Friday, December 19, 2008

சிங்கப்பூரையும் உலுக்கிய மும்பைத் தாக்குதல்

 

 நவம்பர் மாதம் 26ம் தேதி நிகழ்ந்த மும்பை தீவிரவாரத் தாக்குதல் சிங்கப்பூர் மக்களையும் உலுக்கியது. ஓபராய் ட்ரைடன்ட் ஹோட்டலில் தங்கி இருந்த 28 வயது இளம் சிங்கப்பூர் வழக்குரைஞரும் பிணை பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்ற செய்தி இங்குள்ள மக்கள் இதயங்களைப் பதை பதைக்க வைத்தது.
இரு நாட்களுக்கு பின்னர், அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார் என்று செய்தி, அவரின் கணவர், குடும்பத்தாரை மட்டுமின்றி ஒட்டு மொத்த சிங்கப்பூரர்களைக் கண் கலங்க வைத்தது.
மும்பையில் உலகப் பொருளியல் மந்தநிலையின் தாக்கம் பற்றி உரை நிகழ்த்த சென்ற திருமதி லோ ஹுவெய் யென் (உள்படம்), ஹோட்டலின் 19வது மாடியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் சிங்கப்பூரர் திருமதி லோ என்பது
குறிப்பிடத்தக்கது.
அவரது கண் விழிப்புச் சடங்குக்கும், பின்னர் இறுதிச் சடங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்கள் அஞ்லியைச் செலுத்தினர்.
அதிபர், பிரதமர், மூத்த அமைச்சர், அமைச்சர்கள், சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், திருமதி லோவை முன் பின் அறியாதவர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
திருமணமாகி ஒரு வருடமே ஆன தமது மனைவியின் இழப்பு தம் இதயத்தைப் பிளக்கும் துயரமாக அமைந்துவிட்டது என்றும் தீவிரவாதி களால் கொல்லப்படுவதற்கு சிறிது நேரம் வரை தம் மனைவி தம்முடன் தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் பேசிக் கொண்டிருந்தார் என்று கண்ணீர் மல்க தகவல் சாதனங்களுக்குப் பேட்டியளித்தார் கணவர் திரு மைக்கல் புகேந்திரன்.
சிங்கப்பூரர்கள் பலரின் இதயத்தில் நீங்கா இடத் தைப் பிடித்தார் திருமதி லோ ஹுவெய் யென்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails