Sunday, December 14, 2008

ஐந்து மாத குழந்தை சுட்டுக்கொலை : சிங்கள ராணுவம் அட்டூழியம்

 

விடுதலைப்புலிகளின் மீது இலங்கை ராணுவம் தீவிரமாக போர் தொடுத்து வருகிறது.  இந்த தீவிரத்தால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளி நொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.

விடுதலைப்புலிகளை தாக்குவதாக கூறி அப்பாவி பொது மக்களையும் ராணுவம் கொன்று குவிக்கிறது. தமிழர்களின் வீடுகள், பள்ளிக் கூடங்கள் ராணுவ குண்டு வீச்சால் தரை மட்டமாகிப்போகு அவலம் இருக்கின்றன.

வன்னி பகுதியில் சிங்கள விமானங்கள் அங்குள்ள பள்ளிக் கூடங்கள், வீடுகள் மீது சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.  பள்ளிக் கூடங்களில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்கள்.  

வன்னி பகுதியில் உள்ள வட்ட கச்சி பகுதியில் தமிழர்களின் வீடுகள் மீது ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐந்து மாத குழந்தை ஜெயரூபன் அஜந்தன் உடலை பீரங்கி குண்டு பாய்ந்து இறந்திருக்கிறான்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=976

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails