Thursday, December 4, 2008

ராக்கெட் மனிதன்

 

மண்ணெண்ணையினால் இயங்கும் உந்து ஆற்றல் கொண்ட இறக்கைகளின் உதவியுடன் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கிலக் கால்வாயின் மேல் பறந்து சென்று சுவிட்சர்லாந்து நாட்டின் விமானி யூவிஸ் ரோஸி (Yves Rossy) என்பவர் சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் செல்லும் இந்த ஆங்கிலக் கால்வாயின் மேல் பறந்து சென்ற இந்த 49 வயதான விமானி, டோவர் துறை முகத்தில் வெள்ளைக் குன்றின் மேல் உள்ள கலங்கரை விளக்கின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கினார்.

இவ்வாறு பறந்து வந்தது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. பறப்பதற்கு முன்பு இருந்ததை விட நான் இப்போது அதிக அமைதியை உணர்கிறேன். இவ்வாறு பறப்பதற் கான அனைத்து சூழ்நிலைகளும் அருமையாக அமைந்தன என்று, தரை இறங்கியதும் அவரைச் சூழ்ந்த பத்திரிகையாளர்களிடம் பெருஞ் சிரிப்புடன் அவர் கூறினார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails