Tuesday, December 16, 2008

பிரபல நடிகை, பாடகர் படுகொலை

 

பிரபல தெலுங்கு நடிகை பார்கவி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது காலடியில் காதலன்  பிரவீன் இறந்து கிடந்தார்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நந்தி நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில்  பார்கவி தனது தயாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் தனது வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் அறிந்து போலீசார் விரைந்தனர்.  அவரது உடலில் எட்டு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது பிணத்தின் காலடியில் ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது.

இது  பற்றி தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரி ரவி வர்மா விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது பார்கவியுடன் பிணமாக கிடந்தவரின் பெயர் பிரவீன் என்று தெரிய வந்தது. மேலும்,

நெல்லூரில் இசைக்குழு நடத்தி வந்த பிரவீன், புஜ்ஜி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டிருக்கிறார். 
 குண்டூர் முன்ளாள் டி.எஸ்.பி.யின் மகள் டாலியை முதல் திருமணம் கொண்ட பிரவீன் பின்னர் சுவப்னா என்ற நடிகையை இரண்டாவதுப் திருமணம் செய்திருக்கிறார். இதன்  பின்னர் நடிகை பார்கவியை மூன்றாவது  திருமணம் செய்திருக்கிறார் என்ற விபரங்களும் தெரியவநதுள்ளது.

இப்படுகொலைகள் சம்பந்தமாக மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகிறார்கள்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails