Wednesday, December 17, 2008

சென்னை யானைகவுனியில் பெண் தாதா வெட்டி கொலை

 
 
lankasri.comவட சென்னை யானை கவுனி ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 40).இவர் மீது கொலை முயற்சி,மிரட்டுதல்,அடித்து காயம் ஏற்படுத்தியது என போலீசில் 18-வழக்குகள் உள்ளது.அந்த பகுதியில் பெண் தாதாவாக வலம் வந்தார்.

கடைகளில் மாமூல் வசூலிப்பது,அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து செல்வது,குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து செய்வது,குடி போதையில் ரகளையில் ஈடுபடுவது இதுதான் இவரது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நின்றிருந்த மாட்டு வண்டியில் அமர்ந்தபடி போதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.அப்படியே வண்டியில் படுத்து தூங்கிவிட்டார்.இன்று காலை 6-மணிக்கு பார்த்த போது பரமேஸ்வரி கழுத்து மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது ஆடைகள் களைந்த நிலையில் காணப்பட்டது.சம்பவம் அதிகாலை 3.30-மணியில் இருந்து 4.30-க்குள் நடந்து இருக்கலாம் என தெரிகிறது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் யானைகவுனி இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.கைரேகை சேகரிக்கப்பட்டது.ஒரே நபர் தான் இந்த கொலையை செய்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே விசாரணையில் பரமேஸ்வரிக்கு,5-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.அவரின் கள்ள காதலர்களுக்கு இடையே அடிக்கடி பரமேஸ்வரியுடன் இருப்பது தொடர்பாக தகராறு ஏற்படும்.அப்போது அவர்களை பரமேஸ்வரி அடித்து விரட்டி விடுவார்.எனவே அவர்களில் யாராவது பரமேஸ்வரியை பழி வாங்கும் நோக்கத்தில் கொலை செய்திருக்கலாம் என்றும் அவருக்கு அந்த பகுதியில் 10-ஒர்க்ஷாப்புகள் உள்ளது.அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக யாராவது பரமேஸ்வரியை கொலை செய்திருக்கலாமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரமேஸ்வரியின் முதல் கணவர் அன்பு (வயது 40) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.இருவருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails