Sunday, October 18, 2009

பிரபாகரனை காட்டிக்கொடுக்க மாட்டேன்

பிரபாகரனை காட்டிக்கொடுக்க மாட்டேன்: சீமான் உணர்ச்சி
 
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான். இன்று திருவண்ணமலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
மாசிலாமணி திருமனமண்டபத்தில் மாலை 6.15 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் சீமான் 1 1/2 மணி நேரம் எழுச்சி உரை ஆற்றினார். 

எழுச்சி உரைக்கு பின் உணர்வாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். அப்போது பிரபாகரன் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. 

அதற்கு சீமான், ''பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தமிழ் இன உணர்வாளர்கள் இதை நம்புகிறோம். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று மட்டும் கேட்காதீர்கள். நான் சொல்லமாட்டேன். 

அப்படி சொல்லி பிரபாகரனை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை''என்று உணர்ச்சிபூர்வமாக பதில் அளித்தார்

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails