இ-மெயில் மூலமாக ஏகபோக ஆசை காட்டி, அப்பாவிகளை ஏமாற்றும் மோசடி கும்பல்களைப் பற்றி கடந்த 17.09.09 தேதியிட்ட ஜூ.வி-யில் 'நைஜீரியா மாப்பு... இதற்கிடையில், நம் ஜூ.வி செய்தியைப் படித்துவிட்டு கமிஷனர் ஜாங்கிட்டிடம் அலறி அடித்துக்கொண்டு ஓடிய மாங்காடு பகுதியைச் சேர்ந்த சாத்தையா என்ற இன்ஜினீயர், ''உலக 'நோக்கியா' லாட்டரியில் எனக்கு பரிசு விழுந்திருக்கிறதா சொல்லி என்னோட செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது சார். அதை நம்பி சம்பந்தப்பட்ட இ-மெயில் முகவரியை கான்டக்ட் பண்ணினேன். எனக்கு அஞ்சு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறதா தகவல் சொல்லப்பட்டது. தலைகால் புரியாத சந்தோஷத்தில அவங்க கேட்டிருந்த ஐம்பதாயிரம் பணத்தை கட்டினேன். அதுக்கப்புறம் பரிசுப் பணத்தைக் கொண்டுவர்றதுக்காக, சுங்க வரி, அந்நிய செலாவணி கட்டணும்னு சொல்லி பணம் கேட்டாங்க. ஒன்பது தவணையில 13 லட்ச ரூபாயை அவங்ககிட்ட இழந்திட்டேன். இப்போ ஜூ.வி படிச்சதுக்கு அப்புறம்தான் ஏமாந்து போயிட்டேங்கிறதே தெரியுது. எப்படியாச்சும் என்னோட பணத்தை மீட்டுக் கொடுத்திடுங்க சார்...'' எனக் கதறி இருக்கிறார். உடனே ஆக்ஷனில் குதித்த கமிஷனர் ஜாங்கிட், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்தார். ஏமாற்றப்பட்ட சாத்தையாவைப் போலவே நடித்த போலீஸார் பணம் கொடுப்பதாக ஆசை காட்ட, அடுத்தகணமே சேலையூர் அருகே அவன் தங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதிரடியாய் அங்கே சென்ற போலீஸ் படை அங்கிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஓலபாஜி என்பவனை வளைத்துப் பிடித்திருக்கிறது. அவனிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த கும்பல்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து ஜாங்கிட்டிடம் பேசினோம். ''லாட்டரி வாங்கா மலே பரிசு விழுவதாக அறிவிப்பு வந்தால் பொதுமக்கள் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும். | ||||
|
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment