Friday, February 20, 2009

புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இலங்கை பொய் சொல்லுகிறது!!!!!!!பிண்ணூட்டம்

புலிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக சொல்லுவது பொய் என்று "Breaking News:தமிழீழ தேசிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களின் உடைந்த பாகங்கள்"  https://www.blogger.com/comment.g?blogID=445513404353505899&postID=5621719255067436807
 
இந்தக்கட்டுரையின் பிண்ணூட்டம் இப்படி விடயங்களை சொல்லுகிறது
 
 
 
//�தற்கொலைப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்வதா?�

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தையும், சிங்கள அரசுக்கு அச்சத்தையும் ஏற்படுத்திய வான் புலிகள் படைப் பிரிவின் கரும்புலிகள் விமானங்களை இலக்குகளின் மீது வெற்றிகரமாக மோதவிட்டு வீரமரணமடைந்துள்ளார்கள்.

தற்கொலைப்படை தாக்குதலில் வீரச்சாவடைந்தவர்களை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்வதா என புலிகள் தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புலிகள் தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலும், ஈழ மக்களுக்கு விமானத் தாக்குதல் மூலம் பெரும் துயரை விளைவித்த இலங்கை விமானப் படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தும் பொருட்டே இந்த தற்கொலைத் தாக்குதலை வான்புலிகளின் கரும்புலிகள் பிரிவு மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் இலங்கை ராணுவம், இந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறிக் கொள்கிறது.

விமானத் தாக்குதல் நடந்து முடிந்த முதல் 3 மணி நேரங்கள் என்ன நடந்தது என்பதே தெரியாமல், செய்திச் சேனல்களுக்கு, வாய்க்கு வந்ததையெல்லாம் செய்திகளாகக் கூறிக் கொண்டிருந்தனர் கேகலிய ரம்புக்வெலவும், உதய நாணயக்கராவும்.

இந்தத் தாக்குதல் குறித்து எந்த செய்தியும் வெளியில் கசியக் கூடாது என்றும் ராணுவம் அனுமதிக்கும் செய்திகள் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

பிறகுதான், கட்டுநாயக விமான தளம் அருகே புலிகளின் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுக் கிடந்ததாகவும், அதிலிருந்த விமான ஓட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது. சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட விமானத்திலிருந்தவர் உடல் எந்தவித காயமும் படாமல், போட்டிருந்த யூனிபார்ம் கூட கசங்காமல் காட்சி தந்தது குறிப்பிடத்தக்கது!//
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails