Friday, February 20, 2009

புலிகளின் விமானங்கள் அதிரடி: கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல்

புலிகளின் விமானங்கள் அதிரடி: கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல்

 விடுதலை புலிகளின் இரு விமானங்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.10 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதால்  கொழும்பு நகரில் மின்சாரம்,  தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டள்ளதாகவும் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும் கொழும்புவில் இருந்து வரும் செய்திகள், 

இலங்கை ராணுவம் புலிகள் மீது விமான தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலுக்கு புலிகள் விமானங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் இந்த தாக்குதலில் கொழும்பு ராணுவ தலைமைச்செயலகம், கொழும்பு துறைமுகம் ஆகியன  தாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கொழும்பு துறைமுகம், மற்றும் முக்கிய இடங்களிலிருந்து பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி பதில் தாக்குதல்  நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தால் கொழும்பு நகரமே பதட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails