Sunday, February 22, 2009

விடுதலைப் புலிகளின் வான் படை பலமிழந்தது

விடுதலைப் புலிகளின் வான் படை பலமிழந்தது: இலங்கை ராணுவம்    
altகொழும்பில் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின்
 2 விமானங்கள் வீழ்த்தப்பட்டதால் அவர்களின் வான் படை முற்றிலும்
பலமிழந்துவிட்டதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

 

புலிகளிடம் 3 விமானங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று செப்டம்பர் 9ம்
தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்ற இரண்டும் நேற்று முன்தினம் வீழ்த்தப்பட்டதால்
புலிகளிடம் தற்போது விமானங்கள் எதுவும் இல்லை என்பதால் அவர்களின் வான்
படை முற்றிலும் பலமிழந்துவிட்டதாக ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.

 

எனினும், இதுகுறித்து புலிகள் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

 

விடுதலைப் புலிகளின் அனைத்து விமான ஓடுதளங்களையும் கைப்பற்றிவிட்டதாக
இலங்கை ராணுவம் கூறிவந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 2 தற்கொலைப்
படை விமானங்கள் மூலம் கொழும்பில் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பது
குறிப்பிடத்தக்கது.
 
http://www.swissmurasam.net/2008-10-17-05-11-45/12380-2009-02-22-19-49-00.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails