Monday, February 23, 2009

போரை நிறுத்த வலியுறுத்தி வேளாங்கண்ணியில் அருட் தந்தைகள் உண்ணாவிரதம்

  
 
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என கோரி வேளாங்கண்ணி பேராலயத்தில் அருட் தந்தைகளும், பக்தர்களும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

 
அதிகாலையில் ஞாயிறு திருப்பலிகள் நடந்தது. காலை 10 மணிக்கு பேராலய அதிபர் சேவியர் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் உண்ணாவிரதம் துவங்கியது.

 
பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் அடிகள், பொருளாளர் செல்வராஜ் அடிகள், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ், நாகை பங்கு தந்தை சேவியர் அடிகளார், பேரூராட்சி தலைவி ஜூலியட் அற்புதராஜ் மற்றும் பலர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

 
ஆலயத்துக்கு வந்திருந்த ஏராளாமன பக்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails