Monday, June 22, 2009

ராணுவம் பரபரப்பு தகவல்:விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மக்களுடன் மக்களாக உள்ளனர்

விடுதலைப் புலிகளின் கிழக்கு தலைவர்கள் ராம் மற்றும் நகுலன் மக்களுடன் மக்களாக – பாதுகாப்பு தரப்பு

விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அணிகளுக்கு தலைமை தாங்கிய ராம் மற்றும் நகுலன் ஆகியோர் மக்களுடன் மக்களாக மறைந்திருப்பது குறித்து தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக இராணுவப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி பிரதேசத்திற்குள் சென்றுள்ள இந்த தலைவர்களுடன் 5 அல்லது 6 பேர் கொண்ட அணியே எஞ்சியிருப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புலிகளின் இந்த தலைவர்களின் தொலைபேசி உரையாடல் ஒன்றையும் படையினர் செவிமடுத்துள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails