Friday, June 19, 2009

தமிழீழ அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் கொள்ளும் நாடுகளுடன் தூதரக உறவுகள் முறிக்கப்படும்?

தமிழீழ அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் கொள்ளும் நாடுகளுடன் தூதரக உறவுகள் முறிக்கப்படும்? பத்மநாதனை கைதுசெய்யுமாறு பிடிபிராந்து:

 
தமிழீழ அரசாங்கத்iதை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சட்ட நிபுணர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படும் என பத்மநாதன் மின்னஞ்சல்கள் மூலம் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தர். அத்துடன் இதற்காக இலங்கை உள்ளிட்ட உலகில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆதரவையும் அவர் கோரியிருந்தார். இந்த மின்னஞ்சல்கள் நோர்வேயில் இருந்தே அனுப்பபட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியில் தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிக்கும், விடுதலைப்புலிகளின் ஆயுத வலையமைப்பின் பிரதானி கே.பி என்ற குமரன் பத்மநாதனை கைதுசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் முதல் முறையாக நேற்று உத்தியோபூர்வமான பிடிபிராந்தை சர்வதேச காவற்துறையினருக்கு வழங்கியுள்ளது.
தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பத்து நாடுகளுக்கு இந்த பிடிவிராந்து வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails