Tuesday, June 16, 2009

விடுதலை புலிகளின் கரும்புலிகளின் படையணி கொழும்பில்

விடுதலை புலிகளின் கரும்புலிகளின் படையணி கொழும்பில்

blacktigers67vt6தலைநகர் கொழும்பில் இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளின் பிரசன்னம் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போராட்டத்தின் கோது தலைநகர் கொழும்பிற்குள் 26 தற்கொலைதாரிகள் ஊடுறுவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஊடுறுவிய 26 தற்கொலைப் பேராளிகளில் நான்கு பேர் மட்டுமே இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பிரபாகரனின் மரணம் காரணமாக, கொழும்பிற்குள் ஊடுறுவிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது மன ரீதியாக பாதிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
எவ்வாறெனினும், தற்கொலைப் பேராளிகளை இனங்கண்டு அவர்ளை கைது செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென விசேட காவல்துறை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச வலையமைப்பிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படக் கூடும் என பாதுகாப்பு தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails