Wednesday, June 10, 2009

வவுனியாவின் ராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் தான்

வவுனியாவின் ராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் தான்: வைகோ

வவுனியாவில் இலங்கை ராணுவ களஞ்சியம் மீது, புலிகள் தான் ஊடறுப்பு தாக்குதல் நடத்தினர் என, வைகோ கூறியுள்ளார்.

தென்காசியில் நெல்லை மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,

இலங்கையில் ராணுவம், கர்ப்பிணிகளையும், சிசுக்களையும் கொன்ற சம்பவங்கள், உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை.

இலங்கைப் பிரச்னையில், தி.மு.க., உறுப்பினர்கள் கோபால ரத்னம், சிவப்பிரகாசம் தற்கொலை செய்து, உயிர் நீர்த்தனர். அவர்களுக்கு கூட
இரங்கல் தெரிவிக்காதவர், கருணாநிதி.

வவுனியாவில் இலங்கை ராணுவ களஞ்சியத்தின் மீது புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி, ஆயுதங்களை
எரியச்செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்வு தற்செயலானது என, ராணுவம் கூறுகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். உரியநேரத்தில் அவர், குரல் கொடுப்பார் என்றார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails