Tuesday, June 16, 2009

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவர்?

 
 
பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று கூறி வரும் பத்மநாபன் வேறு புதிய கொள்கைகளை அறிவித்து வருகிறார். இது உலக தமிழர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் எந்த நாட்டின் துணையும் இல்லாமல் நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்க முடியும் என்று அவர் கூறி இருப்பதை பெரும்பாலான ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லை.
லண்டனில் மட்டும் இப்படி 100 கிளைகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் கணிசமான நிதியை பெருக்க முடியும் என்று கருதப்படுகிறது. நிதி வசூலில் நம்பர்-ஒன் இடத்தில் இருக்கும் தமிழர் மறுமலர்ச்சி கழகமும் பொட்டு அம்மானின் உளவுப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே ஈழத்தமிழர்களின் நம்பிக்கை களமாக பொட்டு அம்மானின் உளவுப் பிரிவு தோன்ற தொடங்கி உள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails