Sunday, June 28, 2009

இலங்கை ஆபத்தான நாடு-அமெரிக்கா

இலங்கைக்கான விஜயங்கள் ஆபத்தானதென அமெரிக்கா அந்நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது :

 
இலங்கைக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்வது ஆபத்தானதாக அமையக் கூடும் என அந்நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
இலங்கையின் சில பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானதென அமெரிக்க சுட்டிக்காட்டியுள்ளது.
 
அனாவசியமான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான பயணங்களை கூடிய வரையில் தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கத்தினால் கடந்த 26ம் திகதி விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்க பிரஜைகள் தங்களது பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு ஊழியர்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதாக இலங்கை அரசாசங்கம் விடுத்துள்ள அறிவிப்புக்களில் அமெரிக்க அரசாங்கம் கொண்டுள்ள நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails