Tuesday, June 16, 2009

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேன்நீதிமன்ற நீதவான் குமுதினி விக்ரமசிங்க கோரியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளின் முதலாம் பிரதிவாதியான பிரபாகரனது மரணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நீதிமன்ற கோப்பு பராமரிப்பிற்கு குறித்த மரணச் சான்றிதழை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரபாகரன் உள்ளிட்ட சில விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails