Monday, May 18, 2009

பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்:

 பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பேட்டி


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது.  இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.


இந்நிலையில் இன்று இரவு சென்னையில் உள்ள கொங்கு தமிழ் அறக்கட்டளையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்களான பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோர் ஒன்று கூடி இலங்கையின் தற்போதுள்ள நிலைமை குறித்து  தீவிரமாக  ஆலோசித்து வருகிறார்கள்.


இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்பாக பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.


பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா?பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

பிரபாகரன் நலமுடன் தான் இருக்கிறார்.


எப்படி இவ்வாறு உறுதியுடன் சொல்கிறீர்கள்.  நீங்கள் அவருடன் பேசினீர்களா?


நான் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளுங்கள்.

இலங்கை பிரச்சனையில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மே-21ல் தமிழகம் முழுவதும் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails