Monday, May 25, 2009

இனிமேல் தமிழர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்:தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களக் காடையர்கள் அட்டகாசம்


தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களர்கள் அட்டகாசம்

இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் தமிழ்க் குடும்பத்தினரை சிங்களர்கள் சிலர் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்ததைத் தொடர்ந்து சிங்களர்கள் வெற்றி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டங்களின் போது தமிழர்களை கேலி செய்வதும், தாக்குவதும், பெண்களின் நகைகளைப் பறிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது சிங்களர்களின் அட்டகாசம்.

இந்த நிலையில் நீர்க் கொழும்பில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிங்களக் கும்பல் ஒன்று, தங்களது கொண்டாட்டத்திற்காக தமிழர்களிடமிருந்து பணம் வசூலித்தது.

பணம் தர மறுத்தவர்களை அக்கும்பல் தாக்கியுள்ளது. மேலும் தமிழர்கள் மீது அழுகிய முட்டைகளை வீசியும், காய்கறிகளை வீசியும் கேவலமாக நடந்து கொண்டுள்ளனர்.

நீர்க்கொழும்பு கடற்கரைப் பகுதியில் நடந்து சென்ற தமிழ் இலைஞரைத் தாக்கி காயப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இனிமேல் தமிழர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் அந்தக் கும்பல் எச்சரித்து விட்டுச் சென்றுள்ளதாம்.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails