Monday, May 18, 2009

இந்த கொடூரமான செய்தியை நான் எப்படி ஐயா வெளியிடுவேன்?

தமிழீழம் இன்று பிறக்கும்,நாளை பிறக்கும்,தலைவன் ஒருவன் இருக்கிறான்.எப்படியும் பெற்று தந்திடுவான் என்ற ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எம் போன்ற மக்கள் எப்படி ஐயா அந்த தலைவன் இப்பொழுது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
 
இதயமே வெடித்துவிடும் அளவுக்கு காற்றடைத்த பலூனாக மாறியுள்ள இந்த நேரத்தில் எம்மை தேற்ற யார் வருவார்கள்.
 
தொப்புள்கொடி உறவு என்று எண்ணியவர்கள் என்ன செய்ய என்று யோசித்துக்கொண்டே இருக்கவைத்துவிட்டு அரசியல் பிணந்திண்ணிகள் ஆட்டம் ஆடிவிட்டார்கள்.
 
இனி என்ன செய்ய போகிறோம்?
 
தமிழன் என்ற ஒரு தனி இனத்திற்கு இன்னொரு உண்மைத் தலைவன் கிடைப்பானா?
 
தன் குடும்பம் வாழ பிறனை கொல்லும் கொடுக்கூட்டத்தின் நடுவில் இத்தனை ஆண்டுகளாக யுத்த பூமியில் தன் குடும்பத்தையும்,உயிரையும் பணையம் வைத்து போராடிய அந்த மாவீரனின் வீரத்துக்கு எவனையும் சமமாக்க முடியாது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails