Saturday, May 30, 2009

கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

 

இலங்கை கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதனால் கிழக்கு மாகாணம் மீது சிங்கள ராணுவத்தின் கவனம் திரும்பி உள்ளது.

இது பற்றி, இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா,

''இலங்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதற்காக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

 மேலும் 300 தற்கொலைப் படையினர் இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. எனவே ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளோம்.

வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவ படையை நிரந்தரமாக வைக்க இயலாது. மற்ற பகுதி அச்சுறுத்தல்களை ராணுவம் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவம் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்படும்''என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails