Saturday, May 23, 2009

பொட்டு அம்மன் உயிருடன் இருக்கும் தகவல் இன்று (சனி) காலை வெளியானது.

 
 
தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணா சொன்னது போல, சிங்களர்கள் பொட்டு அம்மனை கோட்டை விட்டு விட்டனர் என்று கொழும்பில் பேசப்படுகிறது. பிரபாகரன் உடலை எரித்து விட்டதாக கூறும் ராணுவ தலைமை தளபதி சரத்பொன்சேகா, பிரபாகரன் சாம்பலை இந்திய பெருங்கடலில் வீசி விட்டோம்  என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திமிராக கூறியுள்ளார்.
இதற்கிடையே முல்லைத்தீவில் நடந்த போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக ராஜபக்சே மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி ஜெனீவாவில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் அமெரிக்க ராணுவம் கொடுத்த சாடிலைட் புகைப்படங்களை வைத்து போர் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட உள்ளன.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails