Wednesday, May 20, 2009

பிரபாகரனது உடல் மீது மரபணு பரிசோதனை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை :பிரிகேடியர் உதய நாணயக்கார

கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளது சடலங்களை நாங்களே அடக்கம் செய்வோம்: இலங்கை இராணுவம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது சடலமாக இலங்கை அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம்

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்டவர்களின் சடலங்களை தாங்களே புதைக்கப்போவதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார இது பற்றிக் கருத்து வெளியிடுகையில், "மற்ற பயங்கரவாதிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தது போலவே இந்த உடல்களும் அடக்கம் செய்யப்படும்" என்று கூறினார்.

இறந்த விடுதலைப் புலிகளது சடலங்களை சர்வதேச அமைப்புகளிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது உடல் என்று தாங்கள் அடையாளம் கண்டுள்ள உடல் மீது மரபணு பரிசோதனை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails