Wednesday, May 27, 2009

சாட்டிலைட் போனில் பிரபாகரனுடன் பேசிய அரசியல் தலைவர்கள்; “சிம்” கார்டில் ரகசியம் அம்பலம்?

 
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் துப்பாக்கி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சாட்டிலைட் போன் சிம்கார்டை எடுத்து இலங்கை ராணுவ உளவு பிரிவினர் ஆராய்ந்தனர். அந்த போனில் அவர் பேசிய எண்கள் அவருக்கு வந்த போன்களின் எண்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன.

இதன் மூலம் பிரபாகரனுடன் யார்-யார்? பேசியுள்ளனர். அவர் யாருக்கெல்லாம் போன் செய்து பேசி இருக்கிறார் என்ற விவரங்களை கண்டு பிடித்து உள்ளனர்.

தமிழக மற்றும் தென் மாநில அரசியல் தலைவர்கள் அவருடன் பேசியிருப்பதும் சிம் கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. அந்த தலைவர்கள் யார்? எந்தெந்த தேதிகளில் பேசி உள்ளனர். எந்த எண்ணில் இருந்து பேசி இருக்கிறார். போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இது பற்றி இலங்கை மந்திரி பாண்டுலா குண வர்த்தனே கூறும் போது பிரபாகரன் போன் சிம் கார்டு மூலம் அவருக்கு யார்-யாருடன்? தொடர்பு இருந்தது என்பதை கண்டு பிடித்துள்ளோம்.

தென் இந்தியாவில் முக்கிய தலைவர்கள் அவருடன் பேசி இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails