Tuesday, June 24, 2008

இந்துமதத்திலிருந்து ஒருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும் நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது என்றுதான் அர்த்தம் - எல. கணேசன் பேச்சு!!!!

கீழே உள்ள கட்டுரையின் ஆசிரியர் நண்பர் ஏகலைவன்.இந்த கட்டுரையில் வரும் சுடான வார்த்தை பிரயோகத்துக்கு நான் பொருப்பல்ல.ஆனாலும் நான் விரும்பி படித்த கட்டுரை.உங்களுக்காகவும்.
 
 
 
இந்துமதத்திலிருந்து ஒருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும் நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது என்றுதான் அர்த்தம் - எல. கணேசன் பேச்சு!!!!

"இந்து மதத்திற்கெதிராக ஒரேயொருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும்; நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதாகவே அர்த்தமாகிறது" என்றான் ஒரு ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன பயங்கரவாதி எல. கணேசன்.

இன்று (14/06/2008) மதியம் தமிழன் தொலைக்காட்சியில் தான் மேற்கண்ட நேர்கானல் ஒளிபரப்பப்பட்டது.

மேற்கண்ட இவ்வரிகள் வேறொருவர் சொன்ன புகழ்மிக்க வாசகத்தினை அப்படியே ஒத்திருப்பது இதனைப் படிக்கின்ற அனைவருக்குமே தெரிந்துவிடும். இருப்பினும் நான் சொல்கிறேன்....

"நீ எங்களுக்கு ஆதரவாக இல்லையென்றால் எதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதாகத்தான் அர்த்தம்" என்கிற இந்த வாசகம் நமது அமெரிக்க பாசிச பயங்கரவாதி ஜார்ஜ்.W. புஷ்ஷினுடையது.

தனது ஆசானாக ஹிட்லரையும் தனது சின்னமாக ஹிட்லரின் 'ஸ்வஸ்திக்' சின்னத்தையும் பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, ஒரு மக்கள் விரோத பயங்கரவாத அமைப்பு என்பதற்கு இதுவே முழுமையான உதாரணமாக இருக்கிறது. எல. கணேசனின் மேற்கண்ட பேச்சிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், கடந்தகால ஹிட்லரைவிட மிகமிகப் பயங்கரமான நிகழ்கால சர்வதேச, விரோதி ஜார்ஜ் புஷ் ஐ தமது குருவாக அவர்கள் வரித்திருக்கிறார்கள் என்பதுதான்.

இந்த நேர்காணலினூடாக மேலும் பல்வேறு சமூக விரோத பேச்சுக்களையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் கருத்துக்களையும் அள்ளிவிடத் தவறவில்லை அந்தப் பார்ப்பன பயங்கரவாதி.

"ஆர்.எஸ்.எஸ். என்றால் கலவரக்காரர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்தில் நடக்கும் ஒழுக்கங்கெட்ட செயல்களைத் தட்டிக் கேட்க ஆர்.எஸ்.எஸ்.ஐத்தவிர வேறொருவரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு வரும்போது தொடக்கத்தில் சற்று வன்முறையினையும் கையிலெடுக்கத்தான் வேண்டியுள்ளது. ஆனால் அதன் பிறகு ஒரு நிரந்தரமான அமைதியினை அது அப்பகுதிக்குத் தருகிறது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு" என்று சிலாகித்தார்.

அவருக்கு எதிரில் ஒரு எருமைச் சாணியைப் போன்று ஒருத்தன் உட்கார்ந்து கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டு இந்நேர்கானலை நடத்திக் கொண்டிருந்தான். எதிர்கேள்விக்கான பல்வேறு விசயங்களை எல. கணேசனே அடியெடுத்துக் கொடுத்தபோதும், எந்த சொரனையுமற்று 'நம்ம கோமாளி சந்திப்பு' போன்று உட்கார்ந்திருந்தது அந்த எருமைச்சாணி.

உங்க ஆர்.எஸ்.எஸ். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக என்னத்தைக் கிழித்தது என்று கேட்டிருக்கலாம்.

அல்லது

ஆர்.எஸ்.எஸ். அந்த பகுதிக்கு நிரந்தரமான அமைதியினை வழங்குவதாக அவன் குறிப்பிட்டதற்கு, "நிரந்தர அமைதியென்றால் குஜராத்தைப் போன்றதொரு அமைதியா" என்றுகூட கேட்டிருக்கலாம்.

இப்படி அவனைக் கேள்விமேல் கேள்வியெழுப்பி வேட்டியைக் கிழித்து அனுப்பியிருக்கலாம். அவன் நம் கையில் சிக்கியிருந்தால். ம்... என்ன செய்வது.

 

http://yekalaivan.blogspot.com/2008/06/blog-post_14.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails