Thursday, February 11, 2010

பர்தாவால் ஏமாற்றப்பட்ட அரபு நாட்டு தூதர்

மனைவிக்கு மீசை-மாறுகண் திருமணத்தை ரத்து செய்த அரபு நாட்டு தூதர்



மனைவிக்கு மீசை-மாறுகண்     திருமணத்தை ரத்து செய்த    அரபு நாட்டு தூதர்அபுதாபி, பிப். 11-
 
ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த வெளிநாட்டு தூதர் ஒருவருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர்.பெண்ணின் போட்டோவை தூதரின் தாயாரிடம் காண்பித்தனர். அதில் இருந்த பெண் அழகாக இருந்தார். எனவே நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு பல தடவை அவர் அந்த பெண்ணை சந்தித்தார். அப்போதெல்லாம் அவர் பர்தா அணிந்து வந்திருந்தார். இதனால் தூதர் அவருடைய முகத்தை பார்க்கவே இல்லை.
 
பின்னர் திருமணம் நடந்தது. அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.
 
திருமணம் முடிந்த அன்று இரவு மனைவியை தூதர் சந்தித்தார். அப்போது தான் அவர் பர்தா அணியாமல் வந்து இருந்தார்.
 
அவரது முகத்தில் மீசை முளைத்து இருந்தது, கண்களும் மாறு கண்ணாக இருந்தது. அப்போது தான் போட்டோவில் இந்த பெண்ணுக்கு பதிலாக அவருடைய சகோதரி போட்டோவை காட்டி ஏமாற்றியது தெரிய வந்தது.
 
இதையடுத்து தூதர் திருமணத்தை ரத்து செய்வதாக ஷரியத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. மணமகள் வீட்டினர் தனக்கு நஷ்டஈடு வேண்டும் என்று கேட்டு இருந்தார். அதை கோர்ட்டு ஏற்கவில்லை

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails