பிரபாகரன் தொடர்பான உண்மைகள் வெடித்துப் பறக்கும்நாட்கள் எண்ணப்படுகின்றன..
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைர் வே. பிரபாகரனின்மரணச்சான்றிதழை சிறீலங்கா அரசு தமக்கு தரவில்லைஎன்று நேற்று சி.பி.ஐ வெளியிட்ட தகவல் உலகநாடுகளில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இன்று அதற்கு எதிர் மாறாக ப.சிதம்பரம் இன்றுவெளியிட்ட அறிக்கையில் மரணச்சான்றிதழ் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளார். ஆகவே இந்த விவகாரத்தில் இப்போது இந்திய அதிகார வர்க்கமேகுழம்பிப் போயிருப்பதைக் காண முடிகிறது. அல்லது குழப்பமான நிலையை உருவாக்கஇப்படிக் கூறப்பட்டதா என்பதும் சிந்திப்பதற்குரியதே.

சில இரகசியங்களை வெளியிடுவேன்,உயிருக்கு பயப்பட மாட்டேன் என்று சரத்பொன்சேகா குறிப்பிட்டது பலத்தசந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் குழப்பமான அறிக்கைகளே உண்மைக்கும் பொய்க்கும் பேதம் காண முடியாதசூழலை உருவாக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இது கூறப்பட்டதா என்பதும்சிந்தையைத் தூண்டுகிறது. இது குறித்து இன்று வெளியான செய்தி
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐஇலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம்இன்று தெரிவித்துள்ளதாக 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐயின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச்சான்றிதழுக்காகத் தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின்தலைவர் வே.பிரபாகரன் கடந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனானஇறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.
source:vannionline.com
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment