Tuesday, February 9, 2010

ஈராக்கில் யாத்திரிகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

  23 பேர் பலி
 கர்பலா, பிப். 4-
 
ஈராக்கில் தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கர்பலா நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் யாத்திரிகர்களின் மீது தற்கொலை தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
 
பாக்தாத் அருகேயுள்ள பாபில் மாகாணத்தில் ஹில்லா என்ற இடத்தில் இருந்து ஈராக்கின் மத்திய பகுதியில் உள்ள கர்பலாவுக்கு ஆயிரக்கணக்கான ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடைபயணமாக சென்று கொண்டிருந்தனர்.
 
அப்போது வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கார் திடீரென கூட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அதில் இருந்த தற்கொலை தீவிரவாதி வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.
 
இதை தொடர்ந்து யாத்திரிகர்கள் 23 பேர் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
 
இந்த தாக்குதலில் 147 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக 2 ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என கர்பலாவின் சீனியர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails